tag:blogger.com,1999:blog-72567107430244283522024-02-23T03:37:16.498+05:30நிழலின் குரல்நிஜமாய்...சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-91714868614353007652010-07-14T11:37:00.002+05:302010-07-14T11:44:46.060+05:30யதார்த்தம்உள்ளே உரு கொண்டிருக்கும் கவிதை<br />பிரசவத்திற்கான வலியை<br /><span> <span></span><br /></span><span>தாய்மையின்</span> <span>சந்தோஷத்தில்</span><br /><div>திளைத்துக் கொண்டிருக்கிறேன்<br /><br />ஒவ்வொரு சொல்லை<br />எழுத்தாய் ,வார்த்தையாய்<br />வெளிப்பட்டு<br />கர்ப்பத்தின் வாசனை மிளிர<br />வந்து விழுகிறது<br />கவிதை.<br /><br />காலத்தின் சொல்லுருவாய்<br />கண்சிமிட்டும்<br />அதன் பூரணம் கண்டு<br />விரியும் மனம்<br />அடுத்த சிருஷ்டிக்கான<br />ஆயுத்தம் கொள்ளும்.<br /><br />படைப்பு, படைப்பு என நீண்டு<br />பரத்தின் சந்தோசம்<br />பரவும் வேளையில்<br />எங்கோ விழுந்து<br />ஒலியெழுப்பும்<br />ஒரு நாணயம் .<br /><br /><div class="photo photo_center"><div class="photo_img"><a href="http://www.facebook.com/photo.php?pid=101347&op=1&view=all&subj=143474512329405&aid=-1&auser=0&oid=143474512329405&id=100001152344032"><img class="img" src="http://photos-a.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs070.snc4/34854_116245598423851_100001152344032_101347_1218207_a.jpg" /></a></div></div></div>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-40122175098256565082010-07-12T17:09:00.002+05:302010-07-12T17:16:39.793+05:30வேண்டும்<span></span>எனதே எனதான<br />முகத்தைக் காட்டும்<br />ஒரு கண்ணாடி .<br /><br />கூடுதலாய் ஒரு கை<br />கவிதை எழுத .<br /><br />என் காலடித் தடங்களை<br />தனியே இனங்காட்டும்<br />மணற்பரப்பு .<br /><br />குழந்தைத்தனம்<br />கண்களில் மட்டும்.<br /><br />நிஜத்தில் சில கனவுகள்<br />கனவுகளில் சில நிஜங்கள்.<br /><br />நீண்ட இரவுகள்<br />நிழல்போல் ஒரு பெண்.<br /><br />ஆயுள் முடிந்து<br />அடங்குகையில்<br />அழகான கல்லறை.சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-52459489519406374762010-07-12T15:38:00.003+05:302010-07-12T17:06:07.018+05:30சுயம்<span></span><br />வேறென்று எதுவும்<br />எனக்கில்லைஎன்றாலும்<br />எனது கிளைகளின் இலைகளில்<br />மஞ்சள் இல்லை.<br /><br />உச்சியே வேர்...<br /><br />மரபுகளை<br />தகர்ப்பதின் <span>அலுப்பை</span><br />பசிய இலைகள்<br />தீர்த்து வைக்கும்<br /><br />சுத்த சுயப்பிரகசமாய்<br />உலகைக் கவித்துக்கொள்வதின்<br />சுகம்<br />எந்தப் பாதச்சுவடிலும்<br />இல்லை<br /><br />கடலின் அழம்போல்<br />உயர்வானது சுயம் .<br /><br />அதன் பெருவெளியில்<br />முட்டி முட்டி<br />உயிர்ப்பது<br />சிறு புல்லெனினும்<br />அதன் தோற்றம்<br />ஒரு அவதாரம்.<br /><br /><br /><br /><br /><br /><span></span>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-51602132641811230452010-07-09T13:24:00.004+05:302010-07-09T13:38:48.795+05:30மீண்டும் ஒரு நாள்<span></span>நான் எப்படி<br />இருக்கவேண்டும் என்று<br />விரும்புகிறேனோ<br />அப்படியெல்லாம்<br />இருந்ததில்லை இதுவரை .<br /><br />என்னை மறந்து<br />மறுத்து <span>வாழ</span><br />பழக்கிக்கொண்டாகிவிட்டது .<br /><br />இருள் சூழ்ந்த<br />பின்னிரவின் நிசப்த<br />சுகத்தில்<br />துள்ளும் மனம்<br />ஞானத்தோடு பேசும்.<br /><br />புலர்ந்ததும்<br />புலப்படாமல் போகும்<br />பேசிய ஞானங்கள் .<br /><br />மீண்டும் ஒரு நாள்<br />என்னைக் கடத்தி<br />கொண்டு போகும் .<br /><br /><span></span>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-6388645872793068112010-07-09T11:46:00.002+05:302010-07-09T11:58:19.318+05:30எதுவுமே<br />என்னை அமைதியுறச் செய்யாதபோது<br />நீ வந்தாய்.<br /><br />இருண்ட அறையில்<br />விளக்கேற்றி<br />கண்ணீர் துடைத்து<br />தலை கோதி<br />முகம் கழுவி<br />வா வானம் பார்க்கலாம் என்றாய்.<br /><br />நட்சத்திரங்களால்<br />நிரம்பியிருந்தது வானம் .<br /><br />எந்தப் பேச்சுமற்று<br />வானம் பார்த்தபடியே இருந்தோம்<br />இரவெல்லாம்..<br /><br />விடிந்தபோது<br />நீயுமில்லை<br />நானுமில்லை.சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-52008833851210727542010-07-09T11:20:00.003+05:302010-07-09T11:36:56.422+05:30வாழ்க்கைவிரும்பியது, கிடைத்தது என<br />இரண்டாக கிடக்கிறது<br />வாழ்க்கை .<br /><br />இதற்கிடையேதான்<br />வாழ வேண்டியிருக்கிறது .<br /><br />இவை இரண்டுக்குமான<br />இடைவெளி அதிகரிக்க ,<br />நிகழ்வும் இயக்கமும்<br />இயந்திரத்தனம் கொள்கிறது.<br />வாழ்தலை இருத்தலின் பொருட்டே<br />எதிர்கொள்ள<br />வேண்டியிருக்கிறது .<br /><br />இரண்டையும்<br />தவிர்த்துவிட்டு<br />வாழ்வை ஓரமாக<br />நின்று பார்க்கும் போது<br />அதன் அர்த்தமற்ற தன்மை<br />புரிகிறது.<br /><br />அப்புரிதலின்<br />உச்சியை நோக்கி<br />எத்தனிக்கையில்<br />ஏதோ ஒன்று<br />மீண்டும்<br />வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டு<br />வாழ்வின் உச்சம்<br />வாழ்க்கையின் ஆழத்தில் என்கிறது .சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-33882188614270227052010-07-09T11:05:00.005+05:302010-07-09T11:15:15.327+05:30நினைவு மழைவெளியே மழை<br />பெய்து கொண்டிருக்கிறது<br /><br />சோடிய விளக்கொளியில்<br />பூக்களாய்ச் சிதறும்<br />துளிகளைக் காணக்<br />கொடுத்து வைக்காமல்<br />அசதியில்<br />படுத்துக் கிடந்தேன் .<br /><br />மழையின் சப்தம்<br />காதுகளில் நிறைகிறது.<br /><br />நினைவு<br />முன் மழை நேரங்களில்<br />நனைகிறது<br />ஒளியில் சிதறும் பூக்கள்<br />மூடிய விழிகளில்<br /><br />இப்போது<br />உள்ளேயும்<br />மழை.சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-81329988638546427352010-07-09T08:34:00.002+05:302010-07-09T10:07:16.917+05:30எல்லோர்க்கும் பெய்யும் மழை<span></span><br /><br /><span>எதிர்பாரா</span> <span>நாளொன்றில்</span> <br /><span>பெய்யத்</span> <span>தொடங்கிய</span> <br /><span>மழையை</span><br /><span>சபித்தனர்</span> <span>எல்லோரும்</span> .<br /><span>விடாது</span> <span>பெய்தது</span> <span>மழை</span>.<br /><span>கிடைத்த</span> <span>இடங்களில்</span> <br /><span>ஒண்டிக்கொண்டு</span> <br />'<span>கொடூர</span> <span>வெயிலன்றாலும்</span> <br /><span>கெடுப்பதில்லை</span> <span>வேலைகளை</span> ' <span>என்றனர்</span> .<br /><span>நீரின்றி</span> <span>தவித்தாலும்</span> <br /><span>தொல்லையின்றி</span> <span>வரவேணும்</span> <span>மழை</span> .<br /><span>எனினும்</span> <br /><span>சம்பல்</span> <span>கோட்டும்</span><br /><span>குறைந்த</span> பேண்ட்<span>டுமாய்</span> <br /><span>சாலைக்</span> <span>குப்பைகளில்</span> <br /><span>தனக்கான</span> <span>ஜிகினாக்களை</span> <br /><span>களைந்தெடுக்கும்</span> <br /><span>அந்தப்</span> <span>பைதியக்கரனுக்கு</span> <span>மட்டும்</span> <br /><span>பெய்யவில்லை</span><br /><span>எல்லோர்க்கும்</span> <span>பெய்யும்</span> <span>மழை</span>.<br /><span></span>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-6609926764610852712010-07-01T10:29:00.002+05:302010-07-01T10:32:16.544+05:30டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்<h3 class="post-title entry-title"> <a href="http://poovulagu.blogspot.com/2009/08/blog-post.html">டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்</a> </h3> <div class="post-header"> </div> <div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">தமிழன் எதையெதையோ இழந்தான். இழந்துகொண்டுமிருக்கிறான். ஏன் இழந்தான், எதற்காக இழந்தான், என்னென்ன சூழலில் இழப்புகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் மேடை போட்டு சோடா குடித்து பேசலாம். தமிழனே கைதட்டி விட்டு வேகமாக கலைந்து போய்விடுவான் அடுத்த இழப்பிற்கு தயாராவதற்கு.</span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLhpsVIi5B9uU7s535V1ey63E7luu95kQDGUhbMy8GvclTkh1CBTZc-dZqaCs1RFN6-oooGEKgo5WAsuRrEEs8BQiQP3JELxiSnuq914R6KpiYCHZec0nYjLd7NblSyJ-P_YOP5qiPvL0/s320/2006041003870201.jpg" style="text-align: justify; display: block; margin: 0px auto 10px; cursor: pointer; width: 177px; height: 320px;" alt="" id="BLOGGER_PHOTO_ID_5366123493714888082" border="0" /></span></span></div><div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">இலவசக்கல்வியை இழந்தது, பள்ளிகளில் தமிழை ஓரங்கட்டியது, காவிரியை காணாமற்போகச் செய்தது, நகரங்களை கிராமங்களுக்குள் திணித்தது, கிராமங்களை நகரங்களுக்கு விரட்டியடித்தது, ஆற்று மணலைப் பொன்னாக்கியது, நிலத்து மண்ணைப் பாழாக்கியது, கிராமத்து தொழில்களை நசுக்கியெறிந்தது, இதெல்லாம் அற்பமான இழப்புகள்.</span></span></div><span class="Apple-style-span" style="font-family: Latha;"><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இதற்கு ஈடாக தமிழன் இன்று பெற்றிருப்பது ஏராளம். குடும்பத்தை சிதைக்கும் கதைகள் நம்மூர் தொலைக்காட்சிகளில் செங்கோல் செலுத்துகின்றன. நமது பெண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் இடைவேளைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மானைப் போலவும் மயிலைப் போலவும்.</span></div></span></div><div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">“படிக்கிறவனை நீங்களே படிக்க வைத்துக்கொள்ளுங்கள் குடிக்கிறவனை குடிக்கவைக்கிற வேலை எனக்கிருக்கிறது” என்று மார்தட்டும் அரசுகள்.</span></span></div><span class="Apple-style-span" style="font-family: Latha;"><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">அரசாங்க ஆஸ்பத்திரியில் உயிரை இழக்க விரும்பாதவனை வாரியணைக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் சிண்டிகேட் மருத்துவமனைகளும். .டிஸ்சார்ஜ் ஆகும்போது ஒருஏக்கர் நிலத்தை விற்றால் தான் டவுன் பஸ்ஸுக்கு சில்லரை மீதமிருக்கும் உத்தரவாதம்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">அந்த வரிசையில் ஒரு புரட்சிவரவு “டிஜிட்டல் படுதாக்கள்”. தலைவனையும் தலைவியையும் விளம்பரப்படுத்தும் மோகம். அந்த விளம்பரத்தின் நிழலில் தானும் அறிமுகமாகும் வேகம். இன்றைய டிஜிட்டல் பேனர்கள் தமிழகத்தின் புதியவரவு. மரபு ஓவியர்களின் தொழிலை வேருடன் பிடுங்கி எறிந்த தொழில்நுட்பம் இன்று தமிழ்நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் கைகால்களைப் பரப்பிக்கொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறது.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwP542LMtH2iKtvpJfUGTHPm3Sp0svqCdDs6e_rHjMkHz3uJwMI-Rjzqk6x311FULXw_ECr9rnzxuUq-i538PjXuW2csgdL0hyphenhyphenFkimwE3ktlyapE-jLLuGA-8bPHcwMSNYSiPw0NPIB8U/s1600-h/2006022805030201.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 241px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwP542LMtH2iKtvpJfUGTHPm3Sp0svqCdDs6e_rHjMkHz3uJwMI-Rjzqk6x311FULXw_ECr9rnzxuUq-i538PjXuW2csgdL0hyphenhyphenFkimwE3ktlyapE-jLLuGA-8bPHcwMSNYSiPw0NPIB8U/s320/2006022805030201.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5366123777511562610" border="0" /></a></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">நின்றுகொண்டும், நடந்து கொண்டும், கைகூப்பிக் கொண்டும், தலைசாய்த்து தோழருடன் பேசிக்கொண்டும், முற்றிப்போன சினிமா டைரக்டர்களின் கற்பனையில் கூட எட்டியிராத போஸ்களில், தமிழ்நாட்டின் தலைநரைக்காத மூத்தகுடிமக்கள் பளபளப்பான அந்த படுதாக்களில் குடியிருப்பார்கள். கையில் ஒரு துண்டு மடித்து வைத்திருப்பார். அல்லது செல்போன் வைத்திருப்பார். செல்போன் சும்மா இருந்தால் செல்போனுக்கு மரியாதையில்லை என்பதற்காக செல்போனை சொறிந்து கொண்டிருப்பார். நட்ட நடுரோட்டில் சிரித்துக்கொண்டு நிற்பார் அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். படுதாவிற்கு காசுகொடுத்த தோழரின் தலை கால்மாட்டில் வேட்டியோரமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">எந்த ஒரு கட்சிப்புள்ளியும் படுத்திருக்கிற கோணத்தில் டிஜிட்டல் படுதா யாரும் இன்னும் வைக்கவில்லை. அப்படியொரு படுதா வைத்தால் பிரமுகர் அரசியலில் படுத்துவிடுவார் என்கிற சென்டிமெண்ட் ஆகக்கூட இருக்கலாம். கட்சியில் முக்கியமான ஒரு புள்ளி தன்னுடைய ஊருக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்பது என்ற பெயரில் டிஜிட்டல் படுதாக்களை வைப்பவர் யாராக இருக்கும்? இன்றைக்கு கட்சியில் தனக்கு இருக்கும் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா? அடுத்த தேர்தலில் தனக்கு சீட்வேண்டும் என்று அச்சாரம் போடவேண்டுமா? கட்சியில் தான் இன்னாருடைய ஆதரவாளர் என்பதை தலைமைக்கு எடுத்துக்கூறவேண்டுமா?</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">தனக்குப்பின்னால் இவரெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடவேண்டுமா? இது தன்னுடைய ஏரியா என்பதை கட்சிக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கும் அறிவிக்கவேண்டுமா? தனக்குக்கிடைத்த காண்ட்ராக்ட்டுக்கும் சுருட்டிய பெரும்தொகைக்கும் நன்றி கூறவேண்டுமா? அடுத்துவரப்போகிற பெரிய டெண்டர் தனக்கு சாதகமாக இருக்கவேண்டுமா? கத்தியின்றி ரத்தமின்றி காரியம் முடிக்கும் ஆயுதம்தான் டிஜிட்டல் படுதாக்கள்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இந்த டிஜிட்டல் படுதாக்களில் கட்சிப்புள்ளிகளை எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்பதைப்பார்த்தால் அந்த பிரமுகருக்கே முகம் சிவந்துபோகும் நாணத்தால். “இந்நாட்டு இங்கர்சாலே.....சேகுவாராவே........உலகத்து நாயகனே அல்லது நாயகியே........வீரத்தின் உருவே.....எங்கள் குல விளக்கே.......உலகத்தின் பெரியாரே.....திருக்குறளே.......கண்ணின் மணியே.........மணியின் ஒளியே.....”</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இதெல்லாம் “டிஜிட்டல் படுதாக்களில் பேத்தல்கள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவுகிறதலைப்புகள். கட்சிப்புள்ளிகளை விலங்குகளுக்கு ஒப்பிட்டு வரவேற்கும் டிஜிட்டல் படுதாக்களுக்கும் குறைவில்லை. சிங்கம், புலி, சிறுத்தை, களிறு, காளை, அரிமா, வேழம், கவரிமான், புள்ளிமான், கலைமான் இவற்றோடெல்லாம் ஒப்பிட்டு டிஜிட்டல் படுதாக்கள் வைத்தாயிற்று. என்ன காரணத்தினாலோ நரியோடு யாரும் ஒப்பிடுவது இல்லை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஆரம்பகாலத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் படுதாக்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் படங்களில் வரிசைகட்டம். அப்புறம் கற்பனை தமிழ்நாட்டுக்குள் நுழைந்து விடும். பெரியாரில் தொடங்கி காமராசர், அண்ணா இவர்களின் இதயத்திற்குள் பிரமுகர் சிரித்துக் கொண்டிருப்பார். இப்போதெல்லாம் பழையதலைவர்கள் மக்களின் நினைவில் இறந்துபோய்விட்டதால் அவர்களாகவே இப்போது பரணில் ஏறிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிரமுகரின் படம்தான் பிரதானம்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">பாவ்லோவ் என்ற ரஷ்ய நாட்டு விஞ்ஞானி அவருடைய நாய்க்கு சோறு வைக்கும்போதெல்லாம் ஒரு மணியை அடித்து ஓசைபடுத்தியபிறகு தான் சோறு வைப்பாராம். சில மாதங்கள் கழிந்ததும் மணி மட்டும் அடிப்பாராம். சாப்பாட்டுத்தட்டை வைக்கமாட்டாராம். மணி ஓசை கேட்டவுடனேயே நாய் சோற்றை நினைத்துக்கொண்டு நாக்கை தொங்கப்போடுமாம். நாய், மணிஓசை, சோற்றுத்தட்டு இதெல்லாம் யார்யாரென்று விரித்துரைக்க வேண்டியதில்லை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">டிஜிட்டல் படுதாக்களின் அதிர்வலைகள் பெருநகரங்களின் தொடங்கி, சிறுநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் என்று அதிர்ச்சி அலைகளாக பரவிவருவதுதான் இன்றைய ரசனைக்குரிய செய்தி. டிஜிட்டல் படுதாக்களைத் தயாரிக்கும் தொழிலகங்கள் சிற்றூர்களில்கூட ஆல்போல்தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்கின்றன. வேலை கிடைக்காத படித்த ஏழை இளைஞர் பட்டாளம் நாடி நரம்புகளைத் துளைக்கும் இரசாயனப் பொருள்களின் வாசனைக்கு நடுவே நாள்முழுவதும் பணியாற்றிவருவது கொடுமையிலும் கொடுமை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இந்த படுதாக்கள் பாலிவினைல் குளேரைடு என்ற இரசாயனப் பொருட்களினால் ஆன பிவிசி வால்பேப்பர்களில் அச்சடிக்கப்படுகின்றன. பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்படாமல் பிவிசியை பயன்படுத்தமுடியாது. காட்மியம், பாதரசம், ஈயம், தாலேட்டுகள், டையாக்ஸின்கள் என்று மேலைநாடுகள் வெறுத்து ஒதுக்கத்தொடங்கியுள்ள இரசாயனங்களை நாம் வாரியணைக்கத் துடிக்கிறோம் இந்த படுதாக்களின் வடிவத்தில். இந்த படுதாக்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் புற்றுநோயின் பங்காளிகள். மலட்டுத்தன்மையின் சம்பந்திகள்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh07XrsmU3O7YfcO5T5s6pRzisWAwRVp5P3FbBnR-GyS-oYyuvvPWxZCEySRwXIumsts5qHabsgq0xrtmhgOMkEtjPkmzXS4KoFzJzJMFSJ9GCLNjXob-6NNDCBUuBJtK5-cBJp_9KhMIQ/s1600-h/digital-printed-board-flex-board_10592654_250x250.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 250px; height: 250px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh07XrsmU3O7YfcO5T5s6pRzisWAwRVp5P3FbBnR-GyS-oYyuvvPWxZCEySRwXIumsts5qHabsgq0xrtmhgOMkEtjPkmzXS4KoFzJzJMFSJ9GCLNjXob-6NNDCBUuBJtK5-cBJp_9KhMIQ/s320/digital-printed-board-flex-board_10592654_250x250.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5366123028224153858" border="0" /></a><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">“எங்க மாமாவுக்கு கல்யாணம்......வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.” “அஞ்சாத சிங்கம் அம்மாக்கண்ணு வீட்டுத்திருமணத்திற்கு வருபவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.” என்பது போன்ற டிஜிட்டல் படுதாக்கள் கல்யாண மண்டபங்களின் வீதியின் இருபுறமும் காணப்படுவது இன்றைய சாதாரணம். கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு, மொய்விருந்து, பணிஓய்வு, வெளிநாட்டுப்பயணம், வெளிநாட்டிலிருந்து வெற்றிகரமாக திரும்புதல் என்று டிஜிட்டல் படுதாக்களின் பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இந்த படுதாக்களின் வேலை முடிந்தபிறகு அதனுடைய மிச்ச சொச்ச ஆயுள் எப்படி கழிகிறது என்பதுதான் இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமம். புற்றுநோயாலும் மலட்டுத்தன்மையாலும் பாதிக்கப்படும் அபாயம் இந்தத்தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே டிஜிட்டல் படுதாக்களை தயார்செய்யும் தொழிலில் இருப்பவர்களை ஆபத்தான தொழில் செய்பவர்களாகத்தான் கருதவேண்டும். இந்த படுதாக்கள் நகராட்சியின் தலைவலிக்கு காரணமான பிளாஸ்டிக் குப்பைகளுக்கும், மருத்துவமனைக் கழிவுகளுக்கும் சமமானவை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஒரு கிராமத்திற்குள் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து பார்த்தால் பத்து அல்லது இருபது ஓய்வுபெற்ற டிஜிட்டல் படுதாக்கள் வீடுகளின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதை இன்று பார்க்கலாம். காலம் நீளும்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை நீளும். அவற்றை என்ன செய்வது என்பது வீட்டுக்காரர்களுக்கே தெரியவில்லை. காலப்போக்கில் அவை மழைச்சாரலை மறைக்கும் படுதாக்களாக மாறலாம். மாட்டுக் கொட்டகைக்கு கூரையாகலாம். ஏழைக்குடிசைக்கு சுவராகலாம். அரிசியும் பருப்பும் காயவைக்கும் படுதாவாக உருவெடுக்கலாம். டிஜிட்டல் படுதாக்களில் பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருள்கள் ஆபத்தானவை. முன்னேறிய நாடுகள் அவற்றை துரத்தியடிக்க முயற்சி செய்து கொண்டிக்கின்றன.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">வந்தாரையெல்லாம் தமிழகமும் தமிழனும் வாழவைக்கலாம். அதில் தவறில்லை. டிஜிட்டல் படுதாக்கள் போன்ற நச்சுப் பொருட்களை வாழவைப்பது இமாலயத் தவறு. எதிர்கால சந்ததி இல்லாமல் போகும் என்பதுதான் அறிவியல் உலகம் தரும் எச்சரிக்கை. தமிழ்நாடு அரசு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து டிஜிட்டல் படுதாக்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது ஆறுதலான செய்தி.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">தற்போது ஒரு சதுர அடி டிஜிட்டல் படுதா தயாரித்து தருவதற்கு ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் வாங்குவதாகத் தெரிகிறது. ஒரு பிரமுகரின் ஆளுயர படுதா தயாரிக்க எட்டடிக்கு இரண்டரை அடி என்ற அளவில் நூற்று அறுபது ரூபாய் செலவாகும். ஆள் கூலி எல்லாம் சேர்த்து இருநூறு ரூபாய் என்று கொண்டால்கூட வீதியெங்கும் ஐம்பது படுதா வைக்கும் கட்சிக்காரர் பத்தாயிரம் ரூபாய் செலவழிக்கவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காண்ட்ராக்டில் லட்சரூபாய் சம்பாதித்த கட்சிக்காரருக்கு பத்தாயிரம் சாதாரண தொகை. அரசாங்கம் டிஜிட்டல் படுதாக்களின் மீது நூறு சதவீதம் வரிவிதிப்பை ஏற்படுத்தினால் அரசின் பிடி இறுகும்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இதனால் வருத்தப்படப்போவது டிஜிட்டல் படுதாக்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சியல்ல. ஜில்லென்று சிரித்துக்கொண்டிருக்கும் சீமான்கள்தான்.</span></div></span></div><div><span class="Apple-style-span" style="font-family: Latha;"><b><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></b></span></div><div style="text-align: right;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-weight: bold;"><span class="Apple-style-span" style="font-size: small;">- மு.குருமூர்த்தி </span></span></span></div><div style="text-align: right;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-weight: bold;"><a href="mailto:cauverynagarwest@gmail.com" class="blutxt" style="font-weight: normal; text-decoration: none; font-family: Latha; color: blue;"><span class="Apple-style-span" style="font-size: small;">(cauverynagarwest@gmail.com)</span></a></span></span></div><div style="text-align: right;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><b><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></b></span></div><div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><b><span class="Apple-style-span" style="font-weight: normal; line-height: 21px; white-space: pre-wrap; font-family: Arial;"><span class="Apple-style-span" style="font-size: small;">நன்றி: </span><a href="http://www.keetru.com/"><span class="Apple-style-span" style="font-size: small;">கீற்று இணையதளம்</span></a></span></b></span></div>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-28373325847647697392010-07-01T10:29:00.000+05:302010-07-01T10:30:03.657+05:30<div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">தமிழன் எதையெதையோ இழந்தான். இழந்துகொண்டுமிருக்கிறான். ஏன் இழந்தான், எதற்காக இழந்தான், என்னென்ன சூழலில் இழப்புகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் மேடை போட்டு சோடா குடித்து பேசலாம். தமிழனே கைதட்டி விட்டு வேகமாக கலைந்து போய்விடுவான் அடுத்த இழப்பிற்கு தயாராவதற்கு.</span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLhpsVIi5B9uU7s535V1ey63E7luu95kQDGUhbMy8GvclTkh1CBTZc-dZqaCs1RFN6-oooGEKgo5WAsuRrEEs8BQiQP3JELxiSnuq914R6KpiYCHZec0nYjLd7NblSyJ-P_YOP5qiPvL0/s320/2006041003870201.jpg" style="text-align: justify; display: block; margin: 0px auto 10px; cursor: pointer; width: 177px; height: 320px;" alt="" id="BLOGGER_PHOTO_ID_5366123493714888082" border="0"></span></span></div><div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">இலவசக்கல்வியை இழந்தது, பள்ளிகளில் தமிழை ஓரங்கட்டியது, காவிரியை காணாமற்போகச் செய்தது, நகரங்களை கிராமங்களுக்குள் திணித்தது, கிராமங்களை நகரங்களுக்கு விரட்டியடித்தது, ஆற்று மணலைப் பொன்னாக்கியது, நிலத்து மண்ணைப் பாழாக்கியது, கிராமத்து தொழில்களை நசுக்கியெறிந்தது, இதெல்லாம் அற்பமான இழப்புகள்.</span></span></div><span class="Apple-style-span" style="font-family: Latha;"><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இதற்கு ஈடாக தமிழன் இன்று பெற்றிருப்பது ஏராளம். குடும்பத்தை சிதைக்கும் கதைகள் நம்மூர் தொலைக்காட்சிகளில் செங்கோல் செலுத்துகின்றன. நமது பெண்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் இடைவேளைகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மானைப் போலவும் மயிலைப் போலவும்.</span></div></span></div><div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: Latha;"><span class="Apple-style-span" style="font-size: small;">“படிக்கிறவனை நீங்களே படிக்க வைத்துக்கொள்ளுங்கள் குடிக்கிறவனை குடிக்கவைக்கிற வேலை எனக்கிருக்கிறது” என்று மார்தட்டும் அரசுகள்.</span></span></div><span class="Apple-style-span" style="font-family: Latha;"><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">அரசாங்க ஆஸ்பத்திரியில் உயிரை இழக்க விரும்பாதவனை வாரியணைக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் சிண்டிகேட் மருத்துவமனைகளும். .டிஸ்சார்ஜ் ஆகும்போது ஒருஏக்கர் நிலத்தை விற்றால் தான் டவுன் பஸ்ஸுக்கு சில்லரை மீதமிருக்கும் உத்தரவாதம்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">அந்த வரிசையில் ஒரு புரட்சிவரவு “டிஜிட்டல் படுதாக்கள்”. தலைவனையும் தலைவியையும் விளம்பரப்படுத்தும் மோகம். அந்த விளம்பரத்தின் நிழலில் தானும் அறிமுகமாகும் வேகம். இன்றைய டிஜிட்டல் பேனர்கள் தமிழகத்தின் புதியவரவு. மரபு ஓவியர்களின் தொழிலை வேருடன் பிடுங்கி எறிந்த தொழில்நுட்பம் இன்று தமிழ்நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் கைகால்களைப் பரப்பிக்கொண்டு ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறது.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwP542LMtH2iKtvpJfUGTHPm3Sp0svqCdDs6e_rHjMkHz3uJwMI-Rjzqk6x311FULXw_ECr9rnzxuUq-i538PjXuW2csgdL0hyphenhyphenFkimwE3ktlyapE-jLLuGA-8bPHcwMSNYSiPw0NPIB8U/s1600-h/2006022805030201.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 241px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwP542LMtH2iKtvpJfUGTHPm3Sp0svqCdDs6e_rHjMkHz3uJwMI-Rjzqk6x311FULXw_ECr9rnzxuUq-i538PjXuW2csgdL0hyphenhyphenFkimwE3ktlyapE-jLLuGA-8bPHcwMSNYSiPw0NPIB8U/s320/2006022805030201.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5366123777511562610" border="0"></a></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">நின்றுகொண்டும், நடந்து கொண்டும், கைகூப்பிக் கொண்டும், தலைசாய்த்து தோழருடன் பேசிக்கொண்டும், முற்றிப்போன சினிமா டைரக்டர்களின் கற்பனையில் கூட எட்டியிராத போஸ்களில், தமிழ்நாட்டின் தலைநரைக்காத மூத்தகுடிமக்கள் பளபளப்பான அந்த படுதாக்களில் குடியிருப்பார்கள். கையில் ஒரு துண்டு மடித்து வைத்திருப்பார். அல்லது செல்போன் வைத்திருப்பார். செல்போன் சும்மா இருந்தால் செல்போனுக்கு மரியாதையில்லை என்பதற்காக செல்போனை சொறிந்து கொண்டிருப்பார். நட்ட நடுரோட்டில் சிரித்துக்கொண்டு நிற்பார் அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். படுதாவிற்கு காசுகொடுத்த தோழரின் தலை கால்மாட்டில் வேட்டியோரமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">எந்த ஒரு கட்சிப்புள்ளியும் படுத்திருக்கிற கோணத்தில் டிஜிட்டல் படுதா யாரும் இன்னும் வைக்கவில்லை. அப்படியொரு படுதா வைத்தால் பிரமுகர் அரசியலில் படுத்துவிடுவார் என்கிற சென்டிமெண்ட் ஆகக்கூட இருக்கலாம். கட்சியில் முக்கியமான ஒரு புள்ளி தன்னுடைய ஊருக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்பது என்ற பெயரில் டிஜிட்டல் படுதாக்களை வைப்பவர் யாராக இருக்கும்? இன்றைக்கு கட்சியில் தனக்கு இருக்கும் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா? அடுத்த தேர்தலில் தனக்கு சீட்வேண்டும் என்று அச்சாரம் போடவேண்டுமா? கட்சியில் தான் இன்னாருடைய ஆதரவாளர் என்பதை தலைமைக்கு எடுத்துக்கூறவேண்டுமா?</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">தனக்குப்பின்னால் இவரெல்லாம் அணிவகுத்து நிற்கிறார்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை விடவேண்டுமா? இது தன்னுடைய ஏரியா என்பதை கட்சிக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கும் அறிவிக்கவேண்டுமா? தனக்குக்கிடைத்த காண்ட்ராக்ட்டுக்கும் சுருட்டிய பெரும்தொகைக்கும் நன்றி கூறவேண்டுமா? அடுத்துவரப்போகிற பெரிய டெண்டர் தனக்கு சாதகமாக இருக்கவேண்டுமா? கத்தியின்றி ரத்தமின்றி காரியம் முடிக்கும் ஆயுதம்தான் டிஜிட்டல் படுதாக்கள்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இந்த டிஜிட்டல் படுதாக்களில் கட்சிப்புள்ளிகளை எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்பதைப்பார்த்தால் அந்த பிரமுகருக்கே முகம் சிவந்துபோகும் நாணத்தால். “இந்நாட்டு இங்கர்சாலே.....சேகுவாராவே........உலகத்து நாயகனே அல்லது நாயகியே........வீரத்தின் உருவே.....எங்கள் குல விளக்கே.......உலகத்தின் பெரியாரே.....திருக்குறளே.......கண்ணின் மணியே.........மணியின் ஒளியே.....”</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இதெல்லாம் “டிஜிட்டல் படுதாக்களில் பேத்தல்கள்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உதவுகிறதலைப்புகள். கட்சிப்புள்ளிகளை விலங்குகளுக்கு ஒப்பிட்டு வரவேற்கும் டிஜிட்டல் படுதாக்களுக்கும் குறைவில்லை. சிங்கம், புலி, சிறுத்தை, களிறு, காளை, அரிமா, வேழம், கவரிமான், புள்ளிமான், கலைமான் இவற்றோடெல்லாம் ஒப்பிட்டு டிஜிட்டல் படுதாக்கள் வைத்தாயிற்று. என்ன காரணத்தினாலோ நரியோடு யாரும் ஒப்பிடுவது இல்லை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஆரம்பகாலத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் படுதாக்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் படங்களில் வரிசைகட்டம். அப்புறம் கற்பனை தமிழ்நாட்டுக்குள் நுழைந்து விடும். பெரியாரில் தொடங்கி காமராசர், அண்ணா இவர்களின் இதயத்திற்குள் பிரமுகர் சிரித்துக் கொண்டிருப்பார். இப்போதெல்லாம் பழையதலைவர்கள் மக்களின் நினைவில் இறந்துபோய்விட்டதால் அவர்களாகவே இப்போது பரணில் ஏறிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் பிரமுகரின் படம்தான் பிரதானம்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">பாவ்லோவ் என்ற ரஷ்ய நாட்டு விஞ்ஞானி அவருடைய நாய்க்கு சோறு வைக்கும்போதெல்லாம் ஒரு மணியை அடித்து ஓசைபடுத்தியபிறகு தான் சோறு வைப்பாராம். சில மாதங்கள் கழிந்ததும் மணி மட்டும் அடிப்பாராம். சாப்பாட்டுத்தட்டை வைக்கமாட்டாராம். மணி ஓசை கேட்டவுடனேயே நாய் சோற்றை நினைத்துக்கொண்டு நாக்கை தொங்கப்போடுமாம். நாய், மணிஓசை, சோற்றுத்தட்டு இதெல்லாம் யார்யாரென்று விரித்துரைக்க வேண்டியதில்லை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">டிஜிட்டல் படுதாக்களின் அதிர்வலைகள் பெருநகரங்களின் தொடங்கி, சிறுநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் என்று அதிர்ச்சி அலைகளாக பரவிவருவதுதான் இன்றைய ரசனைக்குரிய செய்தி. டிஜிட்டல் படுதாக்களைத் தயாரிக்கும் தொழிலகங்கள் சிற்றூர்களில்கூட ஆல்போல்தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்கின்றன. வேலை கிடைக்காத படித்த ஏழை இளைஞர் பட்டாளம் நாடி நரம்புகளைத் துளைக்கும் இரசாயனப் பொருள்களின் வாசனைக்கு நடுவே நாள்முழுவதும் பணியாற்றிவருவது கொடுமையிலும் கொடுமை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இந்த படுதாக்கள் பாலிவினைல் குளேரைடு என்ற இரசாயனப் பொருட்களினால் ஆன பிவிசி வால்பேப்பர்களில் அச்சடிக்கப்படுகின்றன. பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்படாமல் பிவிசியை பயன்படுத்தமுடியாது. காட்மியம், பாதரசம், ஈயம், தாலேட்டுகள், டையாக்ஸின்கள் என்று மேலைநாடுகள் வெறுத்து ஒதுக்கத்தொடங்கியுள்ள இரசாயனங்களை நாம் வாரியணைக்கத் துடிக்கிறோம் இந்த படுதாக்களின் வடிவத்தில். இந்த படுதாக்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் புற்றுநோயின் பங்காளிகள். மலட்டுத்தன்மையின் சம்பந்திகள்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh07XrsmU3O7YfcO5T5s6pRzisWAwRVp5P3FbBnR-GyS-oYyuvvPWxZCEySRwXIumsts5qHabsgq0xrtmhgOMkEtjPkmzXS4KoFzJzJMFSJ9GCLNjXob-6NNDCBUuBJtK5-cBJp_9KhMIQ/s1600-h/digital-printed-board-flex-board_10592654_250x250.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 250px; height: 250px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh07XrsmU3O7YfcO5T5s6pRzisWAwRVp5P3FbBnR-GyS-oYyuvvPWxZCEySRwXIumsts5qHabsgq0xrtmhgOMkEtjPkmzXS4KoFzJzJMFSJ9GCLNjXob-6NNDCBUuBJtK5-cBJp_9KhMIQ/s320/digital-printed-board-flex-board_10592654_250x250.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5366123028224153858" border="0"></a><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">“எங்க மாமாவுக்கு கல்யாணம்......வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.” “அஞ்சாத சிங்கம் அம்மாக்கண்ணு வீட்டுத்திருமணத்திற்கு வருபவர்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.” என்பது போன்ற டிஜிட்டல் படுதாக்கள் கல்யாண மண்டபங்களின் வீதியின் இருபுறமும் காணப்படுவது இன்றைய சாதாரணம். கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு, மொய்விருந்து, பணிஓய்வு, வெளிநாட்டுப்பயணம், வெளிநாட்டிலிருந்து வெற்றிகரமாக திரும்புதல் என்று டிஜிட்டல் படுதாக்களின் பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இந்த படுதாக்களின் வேலை முடிந்தபிறகு அதனுடைய மிச்ச சொச்ச ஆயுள் எப்படி கழிகிறது என்பதுதான் இந்த கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமம். புற்றுநோயாலும் மலட்டுத்தன்மையாலும் பாதிக்கப்படும் அபாயம் இந்தத்தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே டிஜிட்டல் படுதாக்களை தயார்செய்யும் தொழிலில் இருப்பவர்களை ஆபத்தான தொழில் செய்பவர்களாகத்தான் கருதவேண்டும். இந்த படுதாக்கள் நகராட்சியின் தலைவலிக்கு காரணமான பிளாஸ்டிக் குப்பைகளுக்கும், மருத்துவமனைக் கழிவுகளுக்கும் சமமானவை.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">ஒரு கிராமத்திற்குள் ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்து பார்த்தால் பத்து அல்லது இருபது ஓய்வுபெற்ற டிஜிட்டல் படுதாக்கள் வீடுகளின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதை இன்று பார்க்கலாம். காலம் நீளும்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை நீளும். அவற்றை என்ன செய்வது என்பது வீட்டுக்காரர்களுக்கே தெரியவில்லை. காலப்போக்கில் அவை மழைச்சாரலை மறைக்கும் படுதாக்களாக மாறலாம். மாட்டுக் கொட்டகைக்கு கூரையாகலாம். ஏழைக்குடிசைக்கு சுவராகலாம். அரிசியும் பருப்பும் காயவைக்கும் படுதாவாக உருவெடுக்கலாம். டிஜிட்டல் படுதாக்களில் பயன்படுத்தப்படும் இரசாயனப்பொருள்கள் ஆபத்தானவை. முன்னேறிய நாடுகள் அவற்றை துரத்தியடிக்க முயற்சி செய்து கொண்டிக்கின்றன.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">வந்தாரையெல்லாம் தமிழகமும் தமிழனும் வாழவைக்கலாம். அதில் தவறில்லை. டிஜிட்டல் படுதாக்கள் போன்ற நச்சுப் பொருட்களை வாழவைப்பது இமாலயத் தவறு. எதிர்கால சந்ததி இல்லாமல் போகும் என்பதுதான் அறிவியல் உலகம் தரும் எச்சரிக்கை. தமிழ்நாடு அரசு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து டிஜிட்டல் படுதாக்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது ஆறுதலான செய்தி.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">தற்போது ஒரு சதுர அடி டிஜிட்டல் படுதா தயாரித்து தருவதற்கு ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் வாங்குவதாகத் தெரிகிறது. ஒரு பிரமுகரின் ஆளுயர படுதா தயாரிக்க எட்டடிக்கு இரண்டரை அடி என்ற அளவில் நூற்று அறுபது ரூபாய் செலவாகும். ஆள் கூலி எல்லாம் சேர்த்து இருநூறு ரூபாய் என்று கொண்டால்கூட வீதியெங்கும் ஐம்பது படுதா வைக்கும் கட்சிக்காரர் பத்தாயிரம் ரூபாய் செலவழிக்கவேண்டியிருக்கும். ஏதோ ஒரு காண்ட்ராக்டில் லட்சரூபாய் சம்பாதித்த கட்சிக்காரருக்கு பத்தாயிரம் சாதாரண தொகை. அரசாங்கம் டிஜிட்டல் படுதாக்களின் மீது நூறு சதவீதம் வரிவிதிப்பை ஏற்படுத்தினால் அரசின் பிடி இறுகும்.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-size: small;">இதனால் வருத்தப்படப்போவது டிஜிட்டல் படுதாக்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சியல்ல. ஜில்லென்று சிரித்துக்கொண்டிருக்கும் சீமான்கள்தான்.<br /><br /><br /></span></div></span></div>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-51361968508641743602010-06-12T10:11:00.002+05:302010-06-12T10:13:00.040+05:30கன்னிமை - கி. ராஜநாராயணன்<p>சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று <br />நினைக்கவேயில்லை.</p> <p><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S--emYWcVKI/AAAAAAAAGPE/LpETRB3tQkM/s1600-h/kira2%5B7%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="kira2" alt="kira2" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S--em4-PgxI/AAAAAAAAGPI/x54xuz82a8U/kira2_thumb%5B5%5D.jpg?imgmax=800" align="left" border="0" width="245" height="377" /></a>அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள். <br />‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக் <br />கொண்டாள்.</p> <p>அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு <br />நிகர் அவளேதான்.</p> <p> அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள் <br />குடும்பத்துக்கே பொன் நாட்கள்.</p> <p>வேலைக்காரர்களுக்குக்கூட அவளுடைய கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி. <br />நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகு வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்துக் கொண்டுவந்து விடுவாள். சருவச் சட்டியிலிருந்து வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, அண்ணாந்து கஞ்சியை விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால், ‘நாமும் அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்.</p> <p>ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள <br />கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின் <br />காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை <br />உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே <br />வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டா <br />கொண்டா’ என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாஅ பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.</p> <p>வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா <br />என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் <br />படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி.</p> <p>அவள் வாழ்க்கைப்பட்டு, புருஷன் வீட்டுக்குப் போனபிறகு எங்கள் நாக்குகள் எல்லாம் <br />இப்போது சப்பிட்டுப் போய்விட்டது. உயர்ந்த ஜாதி நெத்திலியைத் தலைகளைக் கிள்ளி <br />நீக்கிவிட்டுக் காரம் இட்டு வறுத்துக் கொடுப்பாள். இப்போது யாருமில்லை எங்களுக்கு. அந்தப் பொன்முறுவல் பக்குவம் யாருக்கும் கைவராது. பருப்புச்சோற்றுக்கு உப்புக்கண்டம் வறுத்துக் கொடுப்பாள். ரஸ சாதத்துக்கு முட்டை அவித்துக் காரமிட்டுக் கொடுப்பாள். திரண்ட கட்டி வெண்ணெயை எடுத்துத் தின்னக் கொடுப்பாள், அம்மாவுக்குத் தெரியாமல்.</p> <p>அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு <br />நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.</p> <p>மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும் <br />வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால் பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப் பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது.</p> <p>அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது <br />அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின் வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத் தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட’ வடிவத்தில் ஒரு துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும். அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும் பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள். வாசித்துக்கொண்டே வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப் பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.</p> <p>அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும் <br />செய்யும்; ‘கேட்க’வும் செய்யும்.</p> <p>விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும் <br />விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும் <br />அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.</p> <p>தானாகக் கண்கள் சோர்ந்து மூடிக்கொண்டுவிடும்.</p> <p>அதிகாலையில் ரங்கையா வந்து என்னை எழுப்பினான். ராமர், லக்ஷ்மணர், சீதை மூவரும் எங்கள் தெருவின் முடிவிலுள்ள கிழக்காகப் பார்த்த ஒரு வீட்டிலிருந்து இறங்கிக் காட்டுக்குப் போகிறார்கள். பார்வதி அம்மன் கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தையும் கடந்து, கம்மாய்க்கரை வழியாக அந்த மூவரும் போகிறாள். எனக்குத் தொண்டையில் வலிக்கிறாற்போல் இருக்கிறது. முகத்தைச் சுளிக்க முடியவில்லை. ரங்கையா தோள்களைப் பிடித்துப் பலமாக உலுக்கியதால் விழித்துவிட்டேன். சே! நன்றாக விடிந்துவிட்டிருக்கிறது. ரங்கையா சிரித்துக்கொண்டு நின்றிருந்தான், கிளம்பு கிளம்பு என்று ஜரூர்ப்படுத்தினான்.</p> <p>நாச்சியாரம்மா செம்பு நிறையத் தயிர் கொண்டுவந்து வைத்தாள், இருவரும் <br />வயிறுமுட்டக் குடித்துவிட்டுக் கிளம்பினோம்.</p> <p>ரங்கையா எங்கள் மச்சினன்; ‘வீட்டுக்கு மேல்’ வரப்போகும் மாப்பிள்ளை. <br />நாச்சியாரம்மாவை இவனுக்குத்தான் கொடுக்க இருக்கிறோம். இவனும் <br />நாச்சியாரம்மாபேரில் உயிரையே வைத்திருக்கிறான்; அவளும் அப்படித்தான்.</p> <p>‘புல்லை’யையும் ’மயிலை’ யையும் பிடித்து ரங்கையா வண்டி போட்டான். அவை இரண்டும் எங்கள் தொழுவில் பிறந்தவை. ஒன்று இரண்டு; இன்னொன்று நாலு பல். பாய்ச்சலில் புறப்பட்டது வண்டி. ஊணுக் கம்பைப் பிடித்துத்தொத்தி, அவற்றில் இரண்டைக் கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு குனிந்து நின்றுகொண்டேன். சட்டத்தில் இரும்பு வளையங்கள் அதிர்ந்து குலுங்கிச் சத்தம் எழுப்பியது. வண்டியின் வேகத்தினால் ஏற்பட்ட குலுக்கலில் உடம்பு அதிர்ந்தது. கல்லாஞ்சிரட்டைத் தாண்டி வண்டியின் அறைத் தடத்துக்குள் காளைகள் நிதானங்கொண்டு நடை போட்டன.</p> <p>நடுவோடைப் பாதையிலுள்ள வன்னிமரத்தருகில் வண்டியை அவிழ்த்து, காளைகளை <br />மேய்ச்சலுக்காக ஓடைக்குக் கொண்டு போனோம்.</p> <p>காட்டில் பருத்தி எடுக்கும் பெண்கள் காட்டுப் பாடல்கள் பாடிக் <br />கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நாச்சியாரம்மாவும் நிரை போட்டுப் பருத்தி <br />எடுத்துக் கொண்டிருந்தாள். பருத்தி ‘காடாய்’ வெடித்துக் கிடந்தது; பச்சை <br />வானத்தில் நட்சத்திரங்களைப்போலே. ரங்கையா தன் மடியிலிருந்த கம்பரக் கத்தியால் <br />கருவைக் குச்சியைச் சீவி, பல் தேய்க்கத் தனக்கு ஒன்று வைத்துக்கொண்டு எனக்கு <br />ஒன்று கொடுத்தான். போக இன்னொன்று தயார் செய்து வைத்துக்கொண்டான்!</p> <p>நேரம், கிடை எழுப்புகிற நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது. காளைகள் வயிறு முட்டப் <br />புல்மேய்ந்து விட்டு வன்னிமர நிழலில் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தன.</p> <p>நாச்சியாரம்மா, பருத்தியைக் கருவமரத்து நிழலில் கூறுவைத்துக் கொடுத்துக் <br />கொண்டிருந்தாள். மடிப் பருத்தி, பிள்ளைப் பருத்தி, போடு பருத்தி என்று <br />பகிர்ந்து போட, பள்ளுப் பெண்கள் சந்தோஷமாக நாச்சியாரம்மாவை வாழ்த்திக்கொண்டே வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் வேறு யார் வந்து கூறுவைத்துக் கொடுத்தாலும் ஒப்பமாட்டார்கள். நாச்சியாரம்மாதான் வேணும் அவர்களுக்கு.</p> <p>கிஸ்தான் தாட்டுக்களில் பகிர்ந்த பருத்தி அம்பாரத்தைப் பொதியாக்கட்டி வண்டியில் <br />பாரம் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டோம். பள்ளுப்பெண்கள் முன்கூட்டிப் <br />புறப்பட்டுப் போய் விட்டார்கள் - நாச்சியாரம்மாவும் நானும் வண்டியில் <br />ஏறிக்கொண்டு பருத்திப் பொட்டணங்களின்மேல் உட்கார்ந்துகொண்டு ஊணுக்கம்புகளைப் பிடித்துக்கொண்டோம். ரங்கையா வண்டியை விரட்டினான்.</p> <p>வருகிற பாதையில் மடியில் பகிர்ந்த பருத்தியோடு நடந்து வருகிற பெண்டுகளின் <br />கூட்டத்தைக் கடந்துகொண்டே வந்தது வண்டி. அவர்கள் வேண்டுமென்று <br />குடிகாரர்களைப்போல் தள்ளாடி நடந்துகொண்டே வேடிக்கைப் பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கேலிசெய்து தள்ளிக்கொண்டும் வந்தார்கள். தொட்டெரம்மா கோயில் பக்கத்தில் வந்ததும் ரங்கையா கயிறுகளை முழங்கைகளில் சுற்றி இழுத்து வண்டியை நிறுத்தினான். தொட்டெரம்மா கோயிலின் இலந்தைமுள் கோட்டையின்மேல் நாச்சியாரம்மா ஒரு கூறு பருத்தியை எடுத்து இரு கைகளிலும் ஏந்திப் பயபக்தியோடு அந்த முள்கோட்டையின் மீது போட்டாள். பின்னால் வந்துக்கொண்டிருந்த பள்ளுப்பெண்கள் குலவையிட்டார்கள். ரங்கையா கயிற்றை நெகிழ்ந்து விட்டதும் புல்லையும் மயிலையும் வால்களை விடைத்துக்கொண்டு பாய்ந்து புறப்பட்டது.</p> <p>********</p> <p>ஊரெல்லாம் ஒரே சலசலப்பு. என்ன ஆகுமோ என்ற பயம். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே வந்து சேர்ந்தான் ரங்கையா. ‘என்ன ஆச்சி?’ என்று அவனைக் கேட்பதுபோல் பார்த்தோம் யாவரும். அவன் என்னை மட்டிலும் ‘ராஜா, இங்கே வா’ என்று தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.</p> <p>எங்கள் ஊரில், சுந்தரத்தேவன் என்று ஒரு பெரிய போக்கிரி இருந்தான். ஏழுதடவை <br />ஜெயிலுக்குப் போனவன். மூன்று கொலைகள் செய்தவன். அதில் ஒன்று இரட்டைக் கொலை. அவனுடைய மகனை, எங்கள் தகப்பனார் எங்கள் புஞ்சையில் ‘வாங்கித்திங்க’ <br />பருத்திச்சுளை எடுத்தான் என்றதுக்கு ஊணுக்கம்பால் அடி நொறுக்கி எடுத்து <br />விட்டார். பையனைக் கட்டிலில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து அவனுடைய வீட்டில் கிடத்தியிருக்கிறார்கள். சுந்தரத்தேவன் வெட்டரிவாளை எடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறான். விஷயம் இதுதான். ரங்கையா போய் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை அவன்.</p> <p>நாச்சியாரம்மா சுந்தரத்தேவன் வீட்டை நோக்கிப் போனாள். அவள் அங்கு போயிருப்பாள் என்று நாங்கள் முதலில் நினைக்கவில்லை; பிறகுதான் தெரியவந்தது.</p> <p>அங்கு அவள் போனபோது ஒரே கூட்டம். அழுகைச் சத்தம். நாச்சியாரம்மா நுழைந்ததும் பரபரப்பு உண்டானது. பெண்கள் பணிவாக வழிவிட்டு விலகி நின்றனர். அடிப்பட்ட சிறுவ்னை அந்தக் கட்டிலிலேயே கிடந்த்தியிருந்தது. இரத்த உறவு கொண்ட பெண்கள் ஓவென்று அழுதுகொண்டிருந்தார்கள். சிறுவனின் தாய் கதறியது உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது. நாச்சியாரம்மா சிலையானாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. அவள் சுந்தரத்தேவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு கட்டிலின் <br />சட்டத்தில் உட்கார்ந்தாள். தன் முந்தானையாள் கண்ணீரை ஒத்திக்கொண்டு <br />அச்சிறுவனின் இரத்தம் உறைந்த முகத்தைத் துடைத்தாள். சுந்தரத்தேவன் கட்டிலின் <br />பக்கத்தில் நெருங்கி அரிவாளைத் தரையில் ஊன்றி ஒற்றைக் கால் மண்டியிட்டு <br />உட்கார்ந்துகொண்டு இடது முழங்கையைக் கட்டிலின் சட்டத்தில் ஊன்றி முகத்தில் <br />ஐந்து விரல்களால் விரித்து மூடிக்கொண்டு ஒரு குழந்தைபோல் குமுறி அழுதான்.</p> <p>நாச்சியாரம்மா சிறுவனை மூர்ச்சை தெளிவித்தாள். வீட்டிலிருந்த புளித்த மோரை <br />வருத்திச் சிறிது கொடுத்துத் தெம்பு உண்டாக்கினாள். மஞ்சணத்தி இலைகளைப் <br />பறித்துக்கொண்டு வரச் சொன்னாள். அதை வதக்கித் தன் கையாலேயே ஒத்தடம் கொடுத்தாள். </p> <p>சுவரொட்டி இலைகளை வாட்டிப் பக்குவப்படுத்திக் காயங்களைக் கட்டினாள். பின்பு <br />வீட்டுக்கு வந்து, பத்துப் பக்கா நெல் அரிசியும், இரண்டு கோழிகளையும் <br />கொடுத்தனுப்பினாள். நாங்கள் ஊமைகளைப்போல் ஒன்றுமே பேசாமல் அவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.</p> <p>எங்கள் தகப்பனாரோ, இப்பொழுதுதான் ஒன்றுமே நடக்காதது போல் தலையில் கட்டிய <br />லேஞ்சியோடு நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு சுவர்நிழலில் சூரித்தட்டை <br />வீசிக்கொண்டிருந்தார். இடையிடையே வாயில் ஊறும் வெற்றிலை எச்சியை இரண்டு <br />விரல்களை உதட்டில் அழுத்திப் பதித்துக்கொண்டு பீச்சித் துப்புவார். அது <br />கம்மந்தட்டைகளையெல்லாம் தாண்டித் தூரப்போய் விழும்.</p> <p>********</p> <p>எல்லாப் பெண்களையும்போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒருநாள் கல்யாணம் நிச்சயமானது. அந்தக்காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று இன்றுவரைக்கும் நான் யாரிடமும் காரனம் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம். நாச்சியாரம்மாவும் ஒரு மூணுநாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காத்தாள்.</p> <p>வழக்கம்போல் மூன்றுநாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் ‘பொண்ணுக்கு இருந்த’ அழகைச் சொல்லிமுடியாது. கல்யாணம் முடிந்த நாலாம்நாள் அவள் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக்கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடலின் <br />ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்-</p> <p>*‘மாயம்ம லக்ஷ்மியம்ம போயிராவே...’ <br />(எங்கள் தாயே லக்ஷ்மி தேவியே போய் வருவாய்)*</p> <p>அந்தக் காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது. அவளை நாங்கள் <br />உள்ளூரில்தான் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஐந்து வீடுகள் தள்ளித்தான் அவளுடைய <br />புக்ககம். அவளுக்கு நாங்கள் விடை கொடுத்து அனுப்புவது என்பதில் <br />அர்த்தமில்லைதான். ஆனால் ஏதோ ஒன்றுக்கு நிச்சயமாக விடை கொடுத்தனுப்பி <br />இருக்கிறோம்.</p> <p>அந்த ஒன்று இப்பொழுது எங்கள் நாச்சியாரம்மாவிடம் இல்லை. அது அவளிடமிருந்துபோயே போய்விட்டது.</p> <p>-----</p> <p><strong>2</strong></p> <p>ஆம் அது ரொம்ப உண்மை.</p> <p>ராஜா அடிக்கடி சொல்லுவான். இப்பொழுதுதான் தெரிகிறது எனக்கு.</p> <p>நான் நாச்சியாரம்மாவைக் கல்யாணம் செய்து அடைந்து கொண்டேன். ஆனால் அவளிடமிருந்து எதையோ பிரித்துவிட்டேன்.</p> <p>அவள் இப்பொழுது ரெட்டிப்புக் கலகலப்பாக உண்மையாகவே இருக்கிறாள். என் <br />குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறாள். எங்கள் கல்யாணத்துக்கு முன்பு எனக்கு <br />இருந்த நாச்சியாரம்மாள்; இப்பொழுது இருக்கும் என் நாச்சியாரம்மாள்; நான் அந்த <br />அவளைத்தான் மிகவும் நேசிக்கிறேன்.</p> <p>இப்பொழுது மூணு குழந்தைகள் எங்களுக்கு, தொடர்ந்த பிரசவம். இது அவளைப் <br />பாதித்திருப்பது உண்மைதான். குழந்தைகளையும், குடும்பத்தையுமே சதா கவனிக்கும் <br />சுயநலமி ஆகிவிட்டாள்.</p> <p>எங்கோ ஓர் இடத்தில் கோளாறாகிவிட்டது. சந்தேகமே இல்லை. ஓய்வு ஒழிச்சலில்லாமல் முன்னைவிடப் பலமடங்கு அவள் இப்பொழுது உடைக்கிறாள். உழைத்து ஓடாய்த் தேய்ந்து வருகிறாள் என்னவள். ஒருநாளில் அவள் தூங்குகிற நேரம் மிகவும் அற்பம். என்ன பொறுமை, என்ன பொறுமை!</p> <p>குழந்தைக்கு முலையூட்டிவிட்டு விலகிய மாராப்பைக்கூடச் சரி செய்து கொள்ளாமல் <br />தூளியில் இட்டு ஆட்டும் இந்த இவளா அவள்?</p> <p>ஏகாலிக்கும், குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது முகம் சுளிக்கிறாள். <br />குழந்தைக்குப் பாலூட்டும்போதோ, அல்லது தான் சாப்பிட உட்காரும்போதோ <br />பார்த்துத்தான் அவர்கள் சோறு வாங்கிப் போக வருகிறார்கள் தினமும் என்று புகார் <br />செய்கிறாள். பிச்சைக்காரர்களுக்கு ‘வாய்தாப்’ போடுகிராள். வேலைக்காரகளின்மேல் <br />எரிந்து விழுகிராள். ‘அப்பப்பா என்ன தீனி தின்கின்றான்கள் ஒவ்வொருத்தரும்’ <br />என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.</p> <p>குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள் தலைவாசலில் <br />வெகுநேரம் புகழ்வதில்லை. பெருமாள் மாட்டுக்காரன் தன் மாட்டுக்கு <br />கம்மஞ்சோற்றையும் பருத்திக்கொட்டையையும் தவிட்டையும் கலந்து வைக்கும் அந்த ‘நாச்சியார்’ எங்கே போனாள் என்று தேடிக்கொண்டிருக்கிறான்.</p> <p>கல்யாணத்துக்கு முன் நாச்சியாரு, நின்ற கண்ணிப்பிள்ளை சேகரித்து மெத்தைகள், <br />தலையணைகள் தைப்பாள். மெத்தை உறைகளிலும் தலையணை உறைகளிலும் பட்டு நூலால் <br />வேலைப்பாடுகள் செய்வாள். அவள் தனியாக உட்கார்ந்துகொண்டு நிம்மதியாகவும் <br />நிதானமாகவும் யோசித்து யோசித்துச் செய்யும் அந்தப் பின்னல் வேலைகளில், தன் <br />கன்னிப் பருவத்தின் எண்ணங்களையும் கனவுகளையுமே அதில் பதித்துப் பின்னுவதுபோல் தோன்றும். இடையிடையே அவளுக்குள் அவளாகவே குறுநகை செய்து கொள்வாள். சில சமயம் வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பார்வை எந்தப் பொருள்பேரிலும் படியாமல் ‘பார்த்து’க்கொண்டே இருப்பாள். அப்புறம் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தையலில் மூழ்குவாள்.</p> <p>ஒருநாள் நாச்சியாருவின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு ஒரு புதிய ஏர்வடம் <br />தேவையாக இருந்தது. அவர்களுடைய வீட்டில் அப்பொழுது களத்து ஜோலியாக எல்லாரும் வெளியே போயிருந்தார்கள். அடுப்பங்கூடத்தை ஒட்டி ஒரு நீளமான ஓடு வேய்ந்த கட்டிடம். அதில் ‘குறுக்க மறுக்க’ நிறையக் குலுக்கைகள். குதிரைவாலி, <br />நாத்துச்சோளம், வரகு, காடைக்கண்ணி முதலிய தானியங்கள் ரொம்பி இருக்கும். புதிய <br />ஏர் வடங்கள் ஓட்டின் கைமரச் சட்டங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. <br />தொங்கிய கயிறுகளுக்கு மத்தியில், மண் ஓட்டில் ஓட்டை போட்டுக் <br />கோர்த்திருந்தார்கள். ஏர்வடத்தைக் கத்தரிக்கக் கயிறு வழியாக இறங்கி மண் <br />ஓட்டுக்கு வந்ததும் எலிகள் கீழே விழுந்துவிடும். ஆள் புழக்கம் அங்கு <br />அதிகமிராததால் தேள்கள் நிறைய இருக்கும். பதனமாகப் பார்த்துக் குலுக்கை மேல் ஏறி நின்றேன். மத்தியான வெயிலால் ஓட்டின் வெக்கை தாள முடியாததாக இருந்தது. <br />தற்செயலாக மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தரையில் நாச்சியாரு ஒரு <br />தலைப்பலகையை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்! மார்பின்மீது விரித்துக் <br />கவிழ்க்கப்பட்ட ’அல்லி அரசாணி மாலை’ப் புத்தகம். பக்கத்தில் வெங்கலப் <br />பல்லாங்குழியின் மீது குவிக்கப்பட்ட சோழிகள். ஜன்னலில் ஒரு செம்பு, பக்கத்தில் <br />ஒரு சினுக்குவலி, இரண்டு பக்கமும் பற்கள் உள்ள ஒரு மரச்சீப்பு, ஒரு ஈருவாங்கி, <br />ஒரு உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடி முதலியன இருந்தன. அவள் அயர்ந்து <br />தூங்கிக்கொண்டிருந்தாள். பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் <br />பால்நுரைமீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல் மெல்லிய குறட்டை ஒலி. <br />அவள் தூங்கும் வைபவத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அடர்ந்த நீண்டு வளைந்த ரெப்பை ரோமங்களைக் கொண்ட மூடிய அவள் கண்கள் அவ்வளவு அழகாய் இருந்தது. மெதுவாக இறங்கிப் போய் அந்த மூடிய கண்களில் புருவத்துக்கும் ரெப்பை ரோமங்களுக்கும் மத்தியில் முத்தமிட வேண்டும்போல் இருந்தது.</p> <p>சொல்லி வைத்ததுபோல் நாச்சியாரு கண்களைத் திறந்தாள். தூக்கத்தினால் சிவந்த <br />விழிகள் இன்னும் பார்க்க நன்றாக இருந்தது. குலுக்கைமேல் இருந்த என்னை அதே கணம் பார்த்துவிட்டாள். ‘இது என்ன வேடிக்கை?’ என்பதுபோல் சிரித்துப் பார்த்தாள். <br />அவள் எழுந்த வேகத்தில் புஸ்தகம் அவளுடைய காலடியில் விழுந்தது. விழுந்த <br />புஸ்தகத்தைத் தொட்டு வேகமாக இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதை எடுத்து ஜன்னலில் வைத்தாள். பின்பு லஜ்ஜையோடு சிரித்துத் தலைகவிந்துகொண்டே, நழுவும் மார்பு சேலையை வலதுகையினால் மார்போடு ஒட்ட வைத்துக்கொண்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவினாள்.</p> <p>கல்யாணத்துக்கு முன்பிருந்தே நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். யாரும் அறியாமல் தொலைவில் இருந்துகொண்டே ரகசியமாக ஒட்டிப் பழகினோம். இதயங்கள் அப்படி ஒன்றி ஊசலாடின. பேசாத ரகசியங்கள்தான் எங்களுக்குள் எத்தனை!</p> <p>எனக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமென்று நான் உணர்த்தாமலே அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆச்சரியப்படும்படி அவைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கும் அப்போது.</p> <p>********</p> <p>ஒரு நாள் கோவில்பட்டியிலிருந்து ராத்திரி வந்தேன். அன்று வீட்டிற்கு நிறையச் <br />சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. காலம் முன்னைமாதிரி இல்லை. ஒரும்பாகிவிட்டது. <br />முன்னெல்லாம் கொஞ்ச ரூபாயில் நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரலாம். இப்போதோ நிறைய ரூபாய்கள் கொண்டுபோய் கொஞ்ச சாமான்களையே வாங்கமுடிகிறது.</p> <p>வந்ததும் வராததுமாய்ச் சாமான்களையெல்லாம் வண்டியிலிருந்து இறக்கி <br />வைத்துவிட்டுப் பணப்பையையும் கச்சாத்துகளையும் நாச்சியாருவிடம் கொடுத்துவிட்டு அப்படியே வந்து கட்டிலில் வீழ்ந்தேன். உடம்பெல்லாம் அடித்துப்போட்டதுமாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக் கக்கிக்கொண்டிருந்தது. மண்டைப் பொருத்தோடுகளில் ஆக்ரா இறக்கியது போல் தெறி. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. அரிக்கன் லாம்பை சரியாகத் துடைத்துத் திரியைக் கத்தரித்து விடாததாலோ என்னவோ சுடர் பிறைவடிவில் எரிந்துகொண்டிருந்தது. சிம்னியில் புகைபிடிக்க ஆரம்பித்திருந்தது.</p> <p>அந்த வெளிச்சத்தில் அவள் கச்சாத்துக்களிலிருந்த தொகைகளைக் கூட்டிக்கொண்டும், <br />மீதிப்பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டுமிருந்தாள்.</p> <p>கணக்கில் ஒரு ஐந்து ரூபாய் சொச்சம் உதைத்தது. அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன <br />என்று என்னிடம் கேட்டாள்.</p> <p>’எல்லாத்தையும் எடுத்துவை</p> <p>கணக்கு எங்கெயும் போய்விடாது;</p> <p>காலையில் பாத்துக்கலாம், எல்லாம்.’</p> <p>அவள் பிடிவாதமாகக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.</p> <p>எனக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. மூடிக்கொண்டே இருக்கவேண்டும்போல் <br />இருந்தது. என்னுடைய நெற்றி ஒரு இதமான விரல்களின் ஒத்தடத்துக்கு ஏங்கியது. <br />மூக்கு மயிர் கருகும்படியான உஷ்ணக்காற்றை நான் வெளிவிட்டுக் கொண்டிருந்தேன். <br />நல்ல உயர்ந்த காய்ச்சல்.</p> <p>சூழ்நிலையின் பிரக்ஞை வட்டம் சுருங்கிக்கொண்டே வந்தது. சின்ன, மெல்லிய <br />சப்தங்கள்கூடக் கோரமாகக் கேட்டன. கண்களைத் திறந்து நாச்சியாரு என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் ரூபாய் அணா பைசாவில் மூழ்கியிருந்தாள். </p> <p>குளிர்ந்த காற்றுப்பட்டதால் கண்கள் நீரை நிறைத்தன, துடைத்துக்கொள்ளக் கையை <br />எடுக்க இஷ்டமில்லை. அதை இமைகளாலேயே மூடி வெளியேற்றினேன். மீண்டும் <br />நாச்சியாருவையே பார்த்தேன். அவளுடைய ரவிக்கையின் அவிழ்க்கப்பட்ட முடிச்சு <br />முடியப்படாமலே தொங்கின. கூந்தல் வாரிச் சேர்க்கப்படாததால் கற்றைகள் <br />முன்முகத்தில் வந்து விழுந்து கிடந்தன.</p> <p>என்ன ஆனந்தமான ‘சொகம்’ இந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதினால்! கானல் <br />அலைகளைப்போல் என் உடம்பிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் உஷ்ண அலைகள் கண்ணால் பார்க்கமுடியாமலிர்ந்தாலும் தெரிந்தது. நான் எரிந்துக்கொண்டிருக்கும் ஒரு <br />சிதைக்குள் படுத்திருப்பதுபோல் குளிருக்கு அடக்கமாக இருந்தது. உயர்ந்த <br />காய்ச்சலின் போதை இடைவிடாது மீட்டப்படும் சுருதிபோல் லயிப்பு மயமாக இருந்தது. </p> <p>இந்த ஆனந்தத்தில் பங்குகொள்ள எனக்கு ஒரு துணைவேண்டும்போல் இருந்தது. அவள் எங்கே? அவள்தான்; என் அருமை நாச்சியாரு.</p> <p>‘நாச்சியாரு, என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்?’</p> <p><strong>********</strong></p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-48010732888187234842010-06-12T10:11:00.001+05:302010-06-12T10:11:40.094+05:30அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை<p>அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக் <br />குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருந்தாள். <br />புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது.</p> <p><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S_HRyjKNLzI/AAAAAAAAGPU/QCJ44SMqwPM/s1600-h/ambai2%5B6%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="ambai2" alt="ambai2" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S_HR0v8i4KI/AAAAAAAAGPY/xCGxNzwP0wU/ambai2_thumb%5B4%5D.jpg?imgmax=800" align="left" border="0" width="220" height="277" /></a> விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான்.</p> <p>"நீரஜாட்சீ, போய்க் கொண்டு வா" என்கிறார்கள் யாரோ.</p> <p>நான் அம்மாவைப் பார்க்கிறேன்.</p> <p>கருநீலப் புடவை நினைவில் இருக்கிறது. தலைமயிரை முடிந்து கொண்டிருக்கிறாள். என் <br />அறையை ஒட்டிய சின்ன அறையில் அம்மா நுழைகிறாள். தலைப்பை நீக்குகிறாள். கையில் இருந்த சிறு கிண்ணியில் மெல்ல தன் மார்பிலிருந்து பால் எடுக்கிறாள். கண்களில் நீர் கொட்டுகிறது.</p> <p>விடிகாலை இருட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் தவலைக்கு அடியில் விறகு வைத்து <br />வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும்.</p> <p>ஒருநாள் நான் அவளைப் பார்க்கிறேன். அம்மாவின் தலைமயிர் முடிச்சவிழ்ந்து <br />தொங்குகிறது. குந்தி உட்கார்ந்திருக்கிறாள் அம்மா. கூந்தல் பாதி கன்னத்திலும் <br />பாதி காதின் மேலும் விரிந்து கிடக்கிறது. அடுப்பு பற்றிக் கொண்டதும் குனிந்து <br />பார்த்த அம்மாவின் பாதி முகத்தில் தீயின் செம்மை வீசுகிறது. அன்று அம்மா <br />சிவப்புப் புடவை வேறு உடுத்தியிருக்கிறாள். உற்றுப் பார்த்துக் கொண்டே <br />இருக்கையில் 'டக்'கென்று அவள் எழுந்து நிற்கிறாள். கூந்தல் முட்டுவரை <br />தொங்குகிறது.</p> <p>விலகியிருந்த தலைப்பினூடே ஊக்குகள் அவிழ்ந்த ரவிக்கை அடியே பச்சை நரம்போடிய வெளேரென்ற மார்பகங்கள் தெரிகின்றன. எங்கிருந்தோ பறந்து வந்து அங்கே நின்ற அக்கினியின் பெண்ணாய் அவள் தோன்றுகிறாள். அவள் அம்மாவா? அம்மா தானா?</p> <p>"காளி காளி மகா காளி பத்ர காளி நமோஸ்துதே" என்ற ஸ்லோகம் ஏன் நினைவிற்கு <br />வருகிறது?</p> <p>"அம்மா.."</p> <p>அம்மா தலையைத் திருப்பிப் பார்க்கிறாள்.</p> <p>"இங்கே என்ன செய்யறாயடீ?"</p> <p>பேச முடியவில்லை. உடம்பு வியர்க்கிறது.</p> <p>வீட்டில் ஹோமம் நடக்கிறது. அம்மாவின் உதட்டின் சிவப்பாலோ, குங்குமத்தின் <br />தீட்சண்யத்தாலோ கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையின் பிம்பம் அவளாகப் படுகிறது. <br />"அக்னியே ஸ்வாஆஆஹா.." என்று ஸ்வாஹாவை நீட்டி முழக்கி நெருப்பில் நெய்யை <br />ஊற்றுகிறார்கள். அந்த "ஸ்வாஹாஆ.." வின்போது பார்வை நெருப்பின் மீதும் அம்மாவின் மீதும் போகிறது.</p> <p>எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா. புடவையைத் தூக்கிச் <br />செருகியிருக்கிறாள். வெளுப்பாய், வழவழவென்று துடை தெரிகிறது. குனிந்து <br />நிமிரும்போது பச்சை நரம்போடுகிறது.</p> <p>"அம்மா நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு? நான் ஏம்மா கருப்பு?"</p> <p>சிரிப்பு.</p> <p>"போடி உன் அழகு யாருக்கு வரும்?"</p> <p>நிகழ்ச்சிகளில் ஒரு சம்பந்தமுமில்லை. அம்மா தான் அவற்றின் ராணி. அசுத்தங்களை <br />எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானுகோடி <br />அழகுகளைத் தோரணமாட வைப்பவள் அவள். சிருஷ்டி கர்த்தா. அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் போது நீண்ட மெல்லிய தண்ணென்ற விரல்களால் தடவி, "உனக்கு டான்ஸ் கத்துத் தரப் போறென். நல்ல வாகான உடம்பு" என்றோ, "என்ன அடர்த்தியடி மயிர்" என்றோ சர்வ சாதாரணமான ஒன்றைத் தான் சொல்வாள். ஆனால் மனத்தில் குல்லென்று எதுவோ மலரும்.</p> <p>அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை. என்னுள் பல அழகுகளுக்கு விதை ஊன்றியபோது தன்னுள் அவள் எதை ஸ்தாபித்துக் கொண்டாளோ தெரியவில்லை.</p> <p>அப்போது பதிமூன்று வயது. பாவாடைகள் குட்டையாகப் போக ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள்.</p> <p>அம்மா மடியில் படுக்கும் மாலை வேளை ஒன்றில் எங்கோ படித்த வரிகள் திடீரென்று நினைவுவர அம்மாவைக் கேட்கிறேன்.</p> <p>"அம்மா பருவம்னா என்னம்மா?"</p> <p>மெளனம்.</p> <p>நீண்டநேர மெளனம்.</p> <p>திடீரென்று சொல்கிறாள்.</p> <p>"நீ இப்படியே இருடீம்மா பாவாடைய அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு..."</p> <p>சித்தி பெண் ராதுவைப் பெண் பார்க்க வருகிறார்களாம். அம்மா போய் விடுகிறாள் <br />அங்கே. அந்த முக்கியமான நாளில் அம்மா இல்லை. கல்யாணி தான் தீபாவளி அன்று <br />எண்ணெய் தேய்த்துத் தலை மயிரை அலசி விடுகிறாள். குளியலறையின் ஜன்னல் வழியாக இருள் கலையாத வானம் தெரிகிறது.</p> <p>"கல்லுஸ்.. ரொம்ப சீக்கிரம் எழுப்பிட்டேடீ, பட்டாசு சத்தமே கேக்கலயே இன்னும்"</p> <p>"உனக்கு எண்ணை தேய்ச்சுட்டு நானும் தேய்ச்சுக்க வேண்டாமா? வயசு பதிமூணு ஆறது. <br />எண்ணை தேய்ச்சுக்க வராது உனக்கு. குனிடீ"</p> <p>கல்யாணிக்கு பொறுமை கிடையாது. தேங்காய் நாரை உரிப்பது போல் தலையை வலிக்க வலிக்கத் தேய்க்கிறாள் கல்யாணி.</p> <p>கத்தரிப்பூ ஸாடின் துணியில் அம்மா எனக்குப் பாவாடை தைத்திருக்கிறாள் அந்த <br />தீபாவளிக்கு. வழுக்கிக் கொண்டு தையல் மிஷினில் ஓடும்போதே மனம் ஆசைப்பட்டது. <br />அந்த முறை அளவு எடுத்து பாவாடை தைத்தாள் அம்மா.</p> <p>"அளவு எடுக்கணும் வாடீ.. ஒசந்து போய்ட்டே நீ" அளவு எடுத்துவிட்டு நிமிர்கிறாள்.</p> <p>"ரெண்டு இஞ்ச் பெரிசாய்டுத்து இந்தப் பொண்ணு"</p> <p>கத்தரிப்பூ ஸாடின் பாவாடை மற்ற பாவாடைகள் மாதிரி குட்டையாக இருக்காது. <br />வழுக்கிக் கொண்டு தரையை எட்டும்.</p> <p>உலுக்கென்று எழுப்பி நிற்க வைத்துத் தலையத் துவட்டுகிறாள் கல்யாணி. ஷிம்மீஸை <br />மாட்டிக் கொண்டு பூஜை அறைக்கு ஓட்டம். பலகை மேல் அடுக்கியிருந்த புதுத் <br />துணிகளில் அப்பா என்னுடையதைத் தருகிறார்.</p> <p>"இந்தாடி கறுப்பி..." அப்பா அப்படித் தான் கூப்பிடுவார்.</p> <p>அப்பா அப்படிச் சொல்லும் போது சில சமயம் கூடத்தில் ஹா வென்று தொங்கும் கண்ணாடி முன் நின்றுகொண்டு பார்ப்பேன். அம்மா, காதில் "எத்தனை அழகு நீ" என்று <br />கிசுகிசுப்பதைப் போல் இருக்கும்.</p> <p>சரளா வீட்டில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள மீன் மாதிரி வழுக்கிக் கொண்டு <br />போகிறது பாவாடை. வெல்வெட் சட்டை. பொட்டு இட்டுக் கொண்டு அப்பா முன் போகிறேன்.</p> <p>"அட பரவாயில்லையே!" என்கிறார் அப்பா.</p> <p>பட்டாஸை எடுத்து முன் அறையில் வைத்து விட்டு சண்பக மரத்தில் ஏற ஓடுகிறேன். <br />நித்தியம் காலையில் சண்பக மரத்தில் ஏறிப் பூப்பறிப்பது ஒரு வேலை. பூக்குடலையில் பூ நிரப்பி அம்மாவிடம் தந்தால், "கொள்ளை பூ" என்று கண்களை விரித்து அம்மா தன் விரல்களை அதில் அளைய விடுவாள். விரல்களே தெரியாது.</p> <p>ஸாடின் பாவாடை வழுக்குகிறது. உச்சாணிக் கொம்பில் ஏற முடியவில்லை. இருட்டு வேறு. இறங்கும் தறுவாயில் படேர் என்று வெடிக்கிறது யார் வீட்டிலோ ஒரு பட்டாஸ். உடம்பு நடுங்க மரத்திலிருந்து ஒரு குதி. வீட்டினுள் ஓட்டம். மூச்சு வாங்குகிறது.</p> <p>ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன் அறைக்கு ஓடி என் பங்குப் பட்டாஸை வெடிக்கிறேன். அப்புறம் தான் பூக்குடலை நினைவு வருகிறது. விடிந்திருக்கிறது. பாவாடையைத் தூக்கிப் பிடித்தவாறே மரத்தினடியில் கிடந்த பூக்குடலையை எடுக்கக் குனிகிறேன். பூக்கள் சில சிதறியிருக்கின்றன. நன்றாகக் குனிந்து எடுக்கும்போது பாவாடை தரையில் விரிகிறது. புதுப்பாவாடையில் அங்கும் இங்கும் கறைகள். மரம் ஏறியதாலோ?</p> <p>"கல்லூஸ்.." என்று அழைத்தவாறே உள்ளே வந்து "பாவாடை எல்லாம் <br />அழுக்காக்கியுட்டேண்டி. அம்மா வைவாளா?" என்று கேட்டுக் கொண்டு பூக்குடலையுடன் <br />அவள் முன் நிற்கிறேன். கல்யாணி ஒரு நிமிடம் வெறிக்கப் பார்த்துவிட்டு "அப்பா" <br />என்று கூவிக் கொண்டே போகிறாள்.</p> <p>கல்யாணியின் பார்வை, பூக்குடலையைக் கூட வாங்காமல் அவள் உள்ளே ஓடியது எல்லாமாக மனத்தில் கம்பளிப் பூச்சி நெளிகிறது. ஸாடின் பாவாடையைப் பார்க்கிறேன். வெல்வெட் சட்டையைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் ஆகவில்லையே?</p> <p>பகவானே, எனக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்னை நானே கேட்டுக் கொள்ளும் போதே தெரிகிறது ஏதோ ஆகிவிட்டதென்று. எங்கும் பட்டாஸ் ஒலிகள் கேட்டவாறிருக்கின்றன. கையில் பிடித்த பூக்குடலையுடன் வேகமாக மூச்சு விட்டவாறு உடம்பு பதற உதடுகள் துடிக்க நிற்கிறேன். ஹோ வென்று அழுகை வருகிறது.</p> <p>அம்மாவைப் பார்க்க வேண்டும். சின்னாளப்பட்டு உடுத்திய தோளில் தலையை அழுத்திப் பதித்துக் கொள்ள வேண்டும். "பயமா இருக்கே" என்று வெட்கமில்லாமல் சொல்லி அழ வேண்டும். அம்மா தலையைத் தடவித் தருவாள். என்னவோ ஆகிவிட்டதே பயங்கரமாக...</p> <p>முறுக்குப் பிழிய வரும் மொட்டைப் பாட்டியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு <br />வருகிறாள் கல்யாணி. பாட்டி அருகில் வந்தாள்.</p> <p>"என்னடீம்மா அழறே? என்னாய்டுத்து இப்போ? லோகத்துலே இல்லாதது ஆய்டுத்தா?"</p> <p>பாட்டி சொன்னது ஒன்றும் புரியவில்லை. என் உணர்வு தான் எதையோ புரிந்து கொண்டு பயத்தில் சில்லிட்டதே ஒழிய அறிவுக்கு ஒன்றும் எட்டவில்லை. மனத்தின் <br />ஆழத்திலிருந்து ஆறாத தாகமாய்க் கிளம்பிய ஒரே ஒரு அழைப்பு... "அம்மா"..</p> <p>ஐந்து வயதில் ஒருமுறை காணாமல் போய் விட்டதை மீண்டும் நினைக்கிறேன். பெரிய பூங்கா ஒன்றில் நீள் இருள் கவிவது தெரியாமல் நடக்கிறேன். திடீரென்று இருளும், மரங்களும், ஓசைகளும், அமைதியும் மனத்தில் பயத்தை உண்டாக்குகின்றன. அப்பா தான் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அம்மாவைப் பார்த்ததும் தான் அழுகை பீறிடுகிறது.</p> <p>அம்மா பக்கத்தில் போட்டுக் கொள்கிறாள். தடவித் தருகிறாள். :ஒன்னும் ஆகலியே. <br />எல்லம் சரியாப் போயிடுத்தே" என்று மெல்லப் பேசுகிறாள். சிவந்த உதடுகள் <br />நெருப்புக் கீற்றாய் ஜ்வலிக்க தன் முகத்தை என் முகத்தின் மீது வைக்கிறாள்.</p> <p>இப்போதும் எங்கேயோ காணாமல் போய் விட்டதைப் போல அடித்துக் கொள்கிறது. கீழே உட்கார்ந்து முட்டங்காலில் தலை பதித்து அழுகிறேன். எதுவோ முடிந்து விட்டது போல் தோன்றுகிறது. தியேட்டரில் 'சுபம்' காட்டிய பிறகு எழுந்து வெளியே வருவதைப் போல், எதையோ விட்டுவிட்டு வந்தாற் போல் தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் உலக <br />சரித்திரத்தில் எனக்கு ஒருத்திக்கு மட்டுமே அந்த துக்கம் சம்பவித்தது போல் <br />படுகிறது. அத்தனை துக்கங்களையும் வெல்வெட் சட்டை அணிந்த மெல்லிய தோள்கள் மேல் சுமையாய்த் தாங்குவது போல் அழுகிறேன்.</p> <p>இருவருமாக இருந்த மாலை வேளைகளில் அம்மா இது பற்றி ஏன் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மனத்தை வியாபித்த உணர்வு பயம் மட்டுமே. புதுச் சூழ்நிலையில் புது மனிதர்களிடையே உண்டாகும் சாதாரண பயம் அல்ல. பாம்பைக் கண்டு அலறும் மிரளலில் அரண்டு போய் வாயடைத்துப் போகும் பதைப்பு. மன மூலைகளிலெல்லாம் பயம் சிலந்தி வலைகளாகத் தொங்குகிறது.</p> <p>வெளுத்த உதடுகள் பிளந்து கிடக்கப் பார்த்த உருவம் மனத்தில் தோன்றுகிறது. மண்டை கல்லில் மோதிவிட்டது. என் முன்னே மென் சிவப்பாய் வழுக்கையாய் நடந்து கொண்டிருந்த தலை திடீரென்று குகை வாயாய்த் திறந்து கரும்சிவப்பாய் ரத்தம் பீறிட்டு வந்தது. நிமிடத்தில் ரத்தம் தலையில் கொட்டியது. ரத்தத்தையே வெறித்துப் பார்த்தேன். சிவப்பு எங்கும் படந்து கண்களிலேயே பாய்ந்து ஓடுவது போல் <br />தோன்றியது. மனம் மீண்டும் மீண்டும் அரற்றியது. "ஐயோ எத்தனை ரத்தம், எத்தனை <br />ரத்தம்" வாயில் ஓசையே பிறக்கவில்லை. ரத்தப் படுக்கை. கிழவன் வாய் திறந்தது, <br />கண்கள் வெறித்துப் போனது, நெஞ்சில் துருத்திக் கொண்டு நிற்கிறது.</p> <p>ரத்தம் எத்தனை பயங்கரமானது... உதடுகள் வெளூக்க.. கை கால்கள் அசைவற்றுப் போக..</p> <p>அம்மா தேவை. இருட்டைக் கண்டு பயந்ததும் அணைத்து ஆறுதல் சொல்வது போல், இந்த பயத்திலிருந்து மீள அம்மா வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அம்மா ஜில்லென்று கரத்தைத் தோளில் வைத்து, "இதுவும் ஒரு அழகுதான்" என்கக் கூடாதா?</p> <p>"எழுந்திரேண்டீ ப்ளீஸ்.. எத்தனை நாழிடீ அழுவாய்?" என்னுடன் கூட உட்கார்ந்து <br />தானும் ஒரு குரல் அழுத கல்யாணி கெஞ்சுகிறாள்.</p> <p>"அம்மா.."</p> <p>"அம்மாதான் அடுத்த வாரம் வராளே. இப்போ தான் இதைப் பற்றி லெட்டர் போட்டேன். <br />ராதுவுக்குப் பெண் பார்க்கிறது எல்லாம் முடிஞ்சப்புறம் வருவா. இப்போ நீ <br />எழுந்திருடீ. சுத்த தலைவேதனை." கல்யாணிக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது.</p> <p>"எனக்கு என்னடீ ஆய்டுத்து?"</p> <p>"உன் தலை மண்டை ஆய்டுத்து, எத்தனை தடவை சொல்லறது?</p> <p>"இனிமே எல்லாம் நான் மரத்துலே ஏறக் கூடாதா?"</p> <p>'நறுக்' என்று குட்டுகிறாள் கல்யாணி.</p> <p>"தடிச்சி! அரை மணியா எழுந்திரு, பாவாடையை மாத்தறேன்னு கெஞ்சறேன். நீ கேள்வி வேற கேக்கறியா? அப்பா இவள் ரொம்பப் படுத்தறாப்பா" என்று அப்பாவுக்கு குரல் <br />கொடுக்கிறாள்.</p> <p>அப்பா வந்து "அசட்டுத்தனம் பண்ணக் கூடாது. கல்யாணி சொல்றபடி கேக்கனும்" <br />என்கிறார்.</p> <p>முறுக்குப் பாட்டி வேறு, "என்ன அடம்பிடிக்கிறாள்? எல்லாருக்கும் வர தலைவிதி <br />தானே" என்கிறாள், அப்பா போன பிறகு.</p> <p>ஏழுநாட்கள். அம்மா வர இன்னும் ஏழு நாட்கள்.ராதுவைப் பெண் பார்த்த பிறகு. <br />இருட்டில் தடுமாறுவதைப் போல் ஏழு நாட்கள். அடுத்தகத்து மாமி, எதிர்வீட்டு மாமி <br />எல்லோரும் வருகிறார்கள் ஒருநாள்.</p> <p>"தாவணி போடலயாடி கல்யாணி?"</p> <p>"எல்லாம் அம்மா வந்தப்புறம் தான் மாமி. இது அடங்காப் பிடாரி. அம்மா சொன்னால் <br />தான் கேட்கும்"</p> <p>"இனிமே எல்லாம் சரியாப் போய்டுவா. இனிமே அடக்க ஒடுக்கம் வந்துடும்"</p> <p>"ஏன்?" இனிமேல் என்ன ஆகிவிடும்?</p> <p>தாவணி ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்? அம்மா சொன்னாளே.. 'இப்டியே இருடீம்மா.. <br />பாவாடைய அலைய விட்டுண்டு..' நான் ஏன் மாற வேண்டும்? யாருமே விளக்குவதில்லை.</p> <p>பொம்மை போல் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசுகிறார்கள். அப்பா வந்தால் <br />தலைப்பைப் போர்த்திக் கொண்டு மெதுவாகப் பேசுகிறார்கள்.</p> <p>ஐந்தாம் நாள் "நீயே எண்ணெய் தேய்ச்சிக்கோடி" என்னிடம் சுடச் சுட எண்ணையைக் <br />கிண்ணியில் ஊற்றிக் கொடுக்கிறாள் கல்யாணி.</p> <p>இடுப்பின் கீழ் நீண்ட கூந்தலுடன் அழுதவாறே போராடிவிட்டு ஷிம்மீஸுடன் கூடத்துக் <br />கண்ணாடி முன் நிற்கிறேன்.</p> <p>"இனிமே பாத்ரூமிலேயே டிரெஸ் பண்ணிக்கனும் தெரிஞ்சுதா" என்கிறார் அப்பா.</p> <p>அப்பா போன பிறகு கதவைச் சாத்துகிறேன். ஷிம்மீஸைக் கழற்றிப் போடுகிறேன். கறுப்பு உடம்பை கண்ணாடி பிரதிபலிக்கிறது. முகத்தை விடச் சற்றே நிறம் மட்டமான தோள்கள், கைகள், மார்பு, இடை, மென்மையான துடைகளின் மேல் கை ஓடுகிறது. நான் அதே பெண் இல்லையா? அம்மா என்ன சொல்லப் போகிறாள்?</p> <p>ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக் கொள்கிறேன். கதவைத் திறந்ததும் கல்யாணி வருகிறாள். <br />"ஸ்கூல்லே ஏன் வரல்லேன்னு கேட்டா என்னடீ சொல்வே?"</p> <p>கல்யாணியை வெறித்துப் பார்க்கிறேன். கூண்டிலிருந்து விடுபட்ட பட்சி போல் <br />குதூகலத்துடன் ஸ்கூலுக்கு கிளம்ம்பிக் கொண்டிருந்த வேகம் குறைகிறது.</p> <p>"ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு"</p> <p>அன்று கேம்ஸ் பீரியடில் விளையாடவில்லை. அகன்ற மரம் ஒன்றின் பின் மறைந்து <br />கொள்கிறேன். முன்பு ஒரு முறை அப்படி விளையாடாமல் இருந்திருக்கிறேன். மறுநாள் <br />காலை மிஸ். லீலா மேனன் வகுப்பில் "நேற்று விளையாடாத முட்டாள்கள் யார்?" <br />என்றாள். நான் எழுந்திருக்கவில்லை.</p> <p>"நீ ஏன் எழுந்திருக்கவில்லை?" என்றாள்.</p> <p>"நான் முட்டாள் இல்லையே மிஸ்" என்றேன். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டில் எழுதி <br />விட்டாள் இம்பர்டினண்ட் என்று.</p> <p>அன்று மிஸ்.லீலா மேனன் திட்டு பற்றிக் கூட மனம் பயப்படவில்லை. இப்போது எனக்கு ஆகியிருக்கும் ஒன்றைவிட வேறு எதுவும் எப்போதும் என்னை பாதிக்காது என்று படுகிறது. மரத்தடியே உட்கார்ந்து வழக்கம் போல எனிட் ப்ளைடன் படிப்பதில்லை. கீழே வெட்டப்பட்டிருந்த குழியில் உதிர்ந்தவாறிருக்கும் பழுத்த இலைகளிடம் நான் கேட்கிறேன். "எனக்கு என்ன தான் ஆகித் தொலைந்து விட்டது?"</p> <p>கூண்டிலிருக்கும் கைதி நீதிபதியின் வாயைப் பார்ப்பது போல் அம்மாவின் சொல் <br />ஒன்றுக்காக மட்டுமே மனம் எதிர்பார்க்கிறது. கண்களைத் தாழ்த்தி என்னைப் <br />பார்த்தவாறே, "உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகு தான்" என்பாளா அம்மா? <br />பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லோரையும் புன்னகையின் ஒரு <br />தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள் <br />நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும். <br />அவளுக்கு எல்லாமே அழகு தான்.</p> <p>அம்மா ரொம்பத் தேவையாக இருக்கிறாள். ஏதோ ஒன்று விளக்கப்பட வேண்டும். கத்தரிப்பூ ஸாடின் பாவாடையை நினைத்தாலே உடம்பு வியர்த்துப் போய் நடுங்குகிறதே. நாக்கு தடித்துப் போய் மரக்கட்டையாய் வாயில் லொட்டென்று படுத்து விடுகிறதே. திடீரென்று இருட்டு கவிந்து கொள்கிற மாதிரியும் திரும்பிப் பார்ப்பதற்குள் 'ணங்'கென்ற சத்தமும், ரத்தப் பெருக்கும் நீண்டு கட்டையாய்ப் போன உடலும் அந்த இருட்டில் தோன்றுவது போல இருக்கிறதே, அதை மென்மையான வார்த்தைகளால் யாராவது விளக்க வேண்டும்.</p> <p>நான் யாருமே இல்லாமல் இருப்பது போல் உணர்கிறேன். தோட்டக்காரன் எழுப்பியபின் <br />மெல்ல வீட்டுக்குப் போகிறேன்.</p> <p>"ஏண்டீ இவ்ளோ லேட்? எங்கே போனே?"</p> <p>"எங்கேயும் போகல.. மரத்தடியிலே உட்கார்ந்திருந்தேன்"</p> <p>"தனியாவா?"</p> <p>"உம்"</p> <p>"ஏண்டீ நீ என்ன இன்னும் சின்னப் பொண்ணா? ஏதாவது ஆகிவைத்தால்?"</p> <p>ஸ்கூல் பையை விட்டெறிகிறேன். முகம் எல்லாம் சூடேறுகிறது. செவிகளைக் கையால் மூடிக் கொண்டு வீறிட்டுக் கத்துகிறேன்.</p> <p>"நான் அப்படித்தஅன் உட்காருவேன். எனக்கு ஒன்னும் ஆகலை"</p> <p>ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி, அழுத்தி வெறிக்கத்தலாய்க் கத்துகிறேன். <br />அப்பாவும் கல்யாணியும் அதிர்ந்து போய் நிற்கின்றனர். நான் கோபித்துக் கொண்டு <br />மொட்டை மாடிக்குப் போய் உட்காருகிறேன். சண்பக மரத்தின் வாசனையோடு அங்கேயே இருக்கலாம். கல்யாணியும் அப்பாவும் இங்கே வரக் கூடாது. நானும் சண்பக மர வாசனையும் மட்டுமே. ஒன்றும் பேசாத, தொடாத அந்த வாசனை வீட்டு மனிதர்களை விட நெருங்கிய ஒன்றாகப் படுகிறது. இவர்கள் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அம்மா மாதிரி விழிகளை விரித்துச் சிரிப்பு.</p> <p>அம்மா அப்படி பார்த்தால் நெஞ்சினுள் ஏதோ செய்யும். வாய்விட்டு சிரிக்கத் <br />தோன்றும். பாடத் தோன்றும். அம்மா சிருஷ்டிப்பவள். ஆனந்தத்தை, உத்ஸாகத்தை, அழகை எல்லாம் தலையைத் திருப்பி ஒரு புன்னகையால் ஜாலம் செய்து வரவழைப்பவள்.</p> <p>கல்யாணி மேலே வருகிறாள்.</p> <p>"சாப்பிட வாடீம்மா சின்ன ராணி, அம்மா உன்னைச் செல்லம் கொடுத்து குட்டிச் <br />சுவராக்கிட்டா"</p> <p>அலட்சியமாக உதட்டைப் பிதுக்கியவாறே எழுந்து கொள்கிறேன்.</p> <p>மறுநாள் காலை அம்மா வருகிறாள். டாக்ஸியின் கதவைத் திறந்து கரும்பச்சைப் <br />பட்டுபுடவை கசங்கியிருக்க, அம்மா வீட்டிற்குள் வருகிறாள்.</p> <p>"என்ன ஆச்சு?" என்கிறார் அப்பா.</p> <p>"பொண்ணு கறுப்பாம். வேண்டாம்னுட்டான் கடங்காரன்"</p> <p>"உன் தங்கை என்ன சொல்றா"</p> <p>"வருத்தப்படறா பாவம்"</p> <p>"நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு"</p> <p>மொட்டென்று அம்மா முன் போய் நிற்கிறேன். கல்யாணி லெட்டரில் எழுதியதை விட <br />விளக்கமாய் நானே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. மெல்ல அவள் கழுத்துப் <br />பதிவில் உதடுகள் நடுங்க மென்குரலில் எல்லாவற்றையும் அரற்ற வேண்டும் போல் <br />படுகிறது. நெஞ்சில் நெளியும் பயத்தைக் கூற வேண்டும் என்று அடித்துக் கொள்கிறது.</p> <p>ஏதோ மர்மமான ஒன்றை - இரவு படுத்துக் கொண்டதும் தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை, என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை - அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன் உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.</p> <p>அம்மா என்னைப் பார்க்கிறாள். நான் ஒரு கணம் அவள் கண்முன் ராதுவாய் மாறுகிறேனா என்று தெரியவில்லை.</p> <p>"உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்" சுளீரென்று <br />கேள்வி.</p> <p>யாரைக் குற்றம் சாட்டுகிறாள்?</p> <p>ஒலியில்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன.</p> <p>அம்மாவின் உதடுகளும், நாசியும், நெற்றிக் குங்குமமும், மூக்குப் பொட்டும், <br />கண்களும் ரத்த நிற ஜ்வாலையை உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள். அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய் நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.</p> <p>அக்னியே ஸ்வாஆஆஹா... அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. மொட்டுக்களும் <br />மலர்களும் கூட கருகிப் போயின.</p> <p>******</p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-4556071935182752772010-06-12T10:06:00.001+05:302010-06-12T10:10:30.986+05:30காலமும் ஐந்து குழந்தைகளும்<p>அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் <br />இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.</p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S_gl6z-bsSI/AAAAAAAAGRA/et1TQo4mCp8/s1600-h/ashokam%5B6%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="ashokam" alt="ashokam" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S_gl7tUYV-I/AAAAAAAAGRE/q09s6S946fg/ashokam_thumb%5B4%5D.jpg?imgmax=800" align="right" border="0" width="277" height="216" /></a> ”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி, அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை பையாக இல்லாமல், ஓர் உருளை வடிவத்தில் உப்பிப்போயிருந்தது. அதனால் ஒரு கையைத் தொங்கவிட முடியாமல் ஓர் இறக்கை பொலத் தூக்கிக்கொண்டே ஓட வேண்டியிருந்தது. ஓர் இறக்கையுடன் ரெயில் பின்னால் ‘ஹோல்டான், ஹோல்டான்’ என்று கத்திக்கொண்டு போவது அவனுக்குப் பொருத்தமில்லாதது ஒன்றைச் செய்யும் உணர்வைக் கொடுத்தது. ஒற்றை இறக்கையுடன் பஸ் பின்னால் கத்திக்கொண்டு போவதாவது ஓரளவு சரியாக இருக்கும்.</p> <p>பஸ்! பஸ்ஸால்தான் இந்த அவதி. அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையம் போய்ச் சேர ஏன் பஸ்ஸில் ஏறினான்? மூட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்து, பெட்டியும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் பஸ்ஸில் ரெயில் நிலையம் போய்ச் சேரலாம் என்று தோன்றியே இருக்காது. பஸ்ஸில் அவன் ஏறிய நேரத்தில் கூட்டம் அதிகம். ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பின் வழியாக ஆண்களும் முன்வழியாகப் பெண்களுமாகப் பிரயாணிகள் ஏறியவண்ணமே இருந்தார்கள். யாருமே டிக்கெட் வாங்குவதைப் பற்றிய எண்ணமே இல்லாததுபோலத் தோன்றினார்கள். அவர்கள் டிக்கெட் வாங்காதவரை கண்டக்டர் பஸ்ஸை நகரச் செய்வதாக இல்லை. இதில் நடுவில் சிறிது நேரம் மழைத் தூறல். சாலையில் ஒரே மாடுகள்; அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த மட்டும் தன் பெருத்த, தினவெடுத்த உடலை மந்த கதியில் வளைத்துப் போவதுபோல, பஸ் முன்னேறிக்கொண்டிருந்தது. பெருச்சாளி வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நின்று கொண்டு அவன் ரெயில் நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் தங்கிவிட்டது. ரெயில் நிலையம் எங்கேயோ, ரெயில் நிலையத்தின் பெயரைச் <br />சொல்லி பஸ் நிற்கும் இடம் எங்கேயோ, அந்த இடத்திலிருந்து ஒற்றைச் சிறகுடன் ஒரு பர்லாங்கு ஓடி வந்தான். ஒரு பர்லாங்கா? ஒரு மைல் கூட இருக்கும்.</p> <p>வழியில் பட்டாணி வண்டிக்காரன். வாழைப்பழம் விற்பவன். செருப்புத் ட் ஹைபவன். ஒரு குஷ்ட ரோகி. ஐந்து குழந்தைகளை வரிசையாகத் தூங்க வைத்துப் பிச்சை கேட்கும் ஒரு குடும்பம். ஐந்து குழந்தைகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எப்படித் தூங்க முடியும்? குழந்தைகளைக் கொன்று கிடத்தி விட்டார்களா? ஐயோ! இன்று கொன்று கிடத்திவிட்டால் நாளை? இல்லை குழந்தைகளை எப்படியோ தூங்கப்பண்ணி விட்டார்கள். மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள். ஆமாம், அதுதான். குழந்தைகள் நாக்கில் மாசிக்காயை அரைத்துத் தடவிவிட்டிருப்பார்கள். பாவம், குழந்தைகள்.</p> <p>அப்புறம் மயக்கமுறாத குழந்தைகள் நொண்டிகளை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறவன். முட்டாள், இப்படிச் சைக்கிளை நடைபாதையில் உருட்டிக்கொண்டு வந்தால் ஒற்றைச் சிறகுடன் ரெயிலைப் பிடிக்க ஓடும் ஜந்துக்கள் எங்கே போவது? அவனைச் சொல்ல உடியாது. அவன் சைக்கிளில் காற்று இறங்கியிருக்கும். விளக்கு இல்லாமல் இருக்கும். விளக்கு இல்லாமற்போனால் போலீஸ்காரன் பிடித்துப் போய் விடுவான். இதோ இப்போது ஒரு போலீஸ்காரன் எதிரே நிற்கிறான். நடை பாதைக்காரர்களை நிறுத்திவிட்டு வரிசையாக நான்கு லாரிகள் கடந்து செல்ல வழி கொடுத்திருக்கிறான். நான்கு லாரிகள். ஒவ்வொன்றும் பூதமாக இருக்கிறது. பூதங்களால் வேகமாகப் போக முடியாது. மிக மிகச் சாவதானமாகத்தான் அவற்றின் அசைவு. பூதங்கள் நினைத்தால் மாயமாக மறைந்துபோக முடியும். அலாவுத்தீனுக்காக ஒரு அரண்மனையை அதில் தூங்கும் அரசகுமாரியுடன் ஒரு கணத்தில் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும். ஆனால் ரெயிலுக்குப் போகும் அவனை ஒரு யுகம் அந்த நடைபாதையோரத்தில் நிறுத்திவைத்து விடும்.</p> <p>ஆயிற்று, நிலையத்தை அடைந்தாயிற்று. ரெயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் <br />இருக்கிறது. டிக்கெட்டையாவது முன்னால் வாங்கித் தொலைத்திருக்கக் கூடாதா? நான்கு டவுன் புக்கிங்க் ஆபீஸ்கள். அங்கே டிக்கெட் கொடுப்பவர்கள் பகலெல்லாம் <br />வேலையில்லாமல் வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக்கொண்டு இருப்பார்கள். இவன் டிக்கெட் வாங்கப் போயிருந்தால் வெற்றிலை பாக்குப் போட்டு அரைப்பதிலிருந்து ஓர் இடைவெளி கிடைத்ததே என்று இவனுக்கு மிகுந்த நன்றியுடன் டிக்கெட் கொடுத்திருப்பார்கள். யாரோ சொன்னார்கள், ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளேன் என்று. யார் அந்த மடையன்? பக்கத்து வீட்டுத் தடியன். அந்த முட்டாள் சொன்னானென்று இந்த முட்டாளும், ‘எல்லாம் அப்புறம் <br />பார்த்துக்கொள்ளலாம்’ என்று இருந்துவிட்டான்.</p> <p>இப்போது ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஏகக் கூட்டம். கியூ <br />வரிசை. எல்லாரும் வரிசையாகவே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு சில்லறை சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம். ரெயிலைப் பிடிக்க வேண்டாமென்றால் கியூ வரிசையில் ஒழுங்காக நின்று, டிக்கெட் வாங்கிச் சில்லறை சரிபார்த்துக் கொண்டு போகலாம். ஒன்றுமே செய்ய வேண்டாமென்றால் எல்லாச் சட்ட திட்டங்களையும் ஒழுங்காக அநுசரித்துப்போய் நல்ல பிள்ளையாகப் பட்டினி கிடந்து சாகலாம். அந்த நடைபாதைப் பிச்சைக்காரக் குழந்தைகள்போல. அந்தக் குழந்தைகள் சாகாமல் இருக்க வேண்டும். பிச்சை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண் பெண் இருவரும் அந்தக் குழந்தைகளின் அப்பா அம்மாவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு அப்பா ஏது? அம்மா ஏது? அப்பா அம்மா இல்லாமலும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா அம்மா இல்லை. எங்கெங்கேயோ கிடந்த ஐந்து குழந்தைகளைச் சேர்த்து <br />மயக்க மருந்து கொடுத்து நடைபாதையில் கிடத்தி அவர்கள் பிச்சை <br />எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் தின்ன ஏதாவது <br />கொடுப்பார்களா? கொடுக்க வேண்டும். அப்படித் தின்னக் கொடுக்காமல் எத்தனைக் <br />குழந்தைகள் அப்படி மயக்கத்திலேயே செத்துப் போய்விடுகின்றனவோ? அப்பா அம்மா <br />இருந்து இதோ இவன் மயக்கம்போடாமல் பிச்சைக்காகக் காத்திருக்கிறான். பிச்சையில் <br />ஒரு கூட்டந்தான், இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது. <br />ரெயில் கிளம்ப இன்னும் ஓரிரு நிமிஷம் இருக்கும்.</p> <p>இவன் டிக்கெட் வாங்குவதற்கும் அந்த நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. <br />இப்போதுகூட ஓடிப்போய்ப் பிடித்து விடலாம். நல்ல வேளையாக மாடிப்படி ஏறி இறங்க வேண்டியதில்லை. அப்படியும் நூறு அடி தூரம் இருக்கும்போது வண்டி நகர <br />ஆரம்பித்துவிட்டது.</p> <p>ஓடினான். பிளாட்பாரத்தில் உலகத்தில் இல்லாதது இல்லை. எல்லாம் கூடை கூடைகளாக, மூட்டைகளாக, இருந்தன. தகர டப்பாக்களாக. இவன் மோதிய ஒரு கூடை திடீரென்று கிருச் கிரீச்சென்று கத்திற்று. கோழிகள். கூடை கூடையாக உயிரோடு கோழிகள். கூடைக்குள் நகர முடியாதபடி அடைத்துவைக்கப்பட்ட கோழிகள். அவற்றினால் கத்தத்தான் முடியும். கூவ முடியாது. அதைத்தான் செய்தன, இவன் மோதியவுடன். அப்புறம் இந்தத் தபால்காரர்களின் தள்ளுவண்டி. வண்டியில் மலைமலையாகத் தபால் பைகள். புடைத்துப்போன தபால் பைகள். எவ்வளவோ ஆயிரம் பேர் எவ்வளவோ ஆயிரம் பேருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரில் பார்த்துப் பேச முடியாததை எல்லாம் கடிதமாக எழுதியிருக்கிறார்கள். இவர்கள் நேரில் பார்த்தால்தான் எவ்வளவு பேச முடியப்போகிறது? கடிதத்தில், ‘இங்கு யாவரும் நலம். தங்கள் நலமறிய ஆவலாயிருக்கிறேன்’ என்று மறு சிந்தனை இல்லாமல் எழுதிவிடலாம். கடிதத்தில் அது ஒரு சௌகரியம்.</p> <p>இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரெயிலைப் பிடித்து விட முடியுமா? முடியலாம். <br />ரெயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு <br />சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த ரெயிலைப் பிடித்துவிட வேண்டும்.</p> <p>“ஹோல்டான், ஹோல்டான்!” என்று கத்திக்கொண்டு ஒற்றைச் சிறகை விரித்துக்கொண்டு பையில் திணித்திருக்கும் அலுமினியத் தம்ளர் கணத்துக்கு ஒரு தரம் அவன் விலா எலும்பைத் தாக்க, அவன் ரெயில் பின்னால் ஓடினான். திடீரென்று பிளாட்பாரம் முழுக்கக் காலியாகப் போய்விட்டது. அவன் அந்த ரெயில் இரண்டுந்தான். இப்போது நிச்சயம் ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். ஆனால் பெரிய முட்டுக்கட்டையாக ஒரு பெரிய உருவம் எதிரே நிற்கிறது. கடவுள்.</p> <p>“தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்! நான் அந்த ரெயிலைப் பிடிக்க வேண்டும்.”</p> <p>“அந்த ரெயிலையா?”</p> <p>“ஆமாம்.அதைப் பிடித்தால்தான் நான் நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேருவேன். நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேர்ந்தால்தான் நாளை பத்து மணிக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போக முடியும். தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுஙகள்!”</p> <p>”வேலை கிடைத்துவிடுமா?”</p> <p>“வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் நான் அந்த நடைபாதைக் குழந்தைகள் போல் சாகாமல் இருக்க முடியும். எனக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் நடைபாதையில் கிடத்தாமல் இருக்க முடியும். தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!”</p> <p>“நீ என்ன ஜாதி!”</p> <p>“நான் என்ன ஜாதியாக இருந்தால் என்ன? நான் ஒரு சடங்கு, கர்மம் செய்வதில்லை. <br />பெரிதாக மீசை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் சென்று எந்த மிருகத்தின் <br />இறைச்சி கொடுத்தாலும் தின்கிறேன். சாராயம் குடிக்கிறேன். எனக்கு ஜாதி கிடையாது. <br />தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!”</p> <p>“நீ உனக்கு ஜாதி இல்லை என்பதற்காக அவர்கள் உனக்கு ஜாதி இல்லை என்று நினைக்கப் போகிறார்களா?”</p> <p>“போ, தள்ளி! பெரிய கடவுள்.”</p> <p>மீண்டும் ஒற்றைச் சிறகு, ஹோல்டான். அலுமினியத் தம்ளர். இந்தச் சனியன் <br />அலுமினியத் தம்ளரை வேறு இடத்தில் திணித்திருந்தால் என்ன? இப்போது நேரமில்லை. </p> <p>இந்தத் தம்ளரே எதற்கு? தண்ணீர் குடிப்பதற்கு அல்ல; நாளை ஓரிடத்தில் உட்கார்ந்து <br />ஒழுங்காக சவரம் செய்துக்கொள்வதற்குத்தான். எது எப்படிப் போனாலும் <br />இண்டர்வியூவுக்கு முகச் சவரம் செய்துகொண்டு போக வேண்டும்! இந்தக் கடவுளுக்குத் தெரியுமோ எனக்கு வேலை கிடைக்காதென்று?</p> <p>இன்னும் இரண்டடி எட்டிப் பிடித்தால் ரெயில். மெதுவாகத்தான் <br />போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் ஓர் அவதி; ரெயலின் கடைசிப் பெட்டியில் ஏறிக் <br />கொள்ள முடியாது. அது கார்டு வண்டியாக இருக்கும் முற்றும் மூடிய பார்சல் <br />பெட்டியாக இருக்கும். ஆதலாம் ரெயிலை எட்டிப் பிடித்தால் மட்டும் போதாது. <br />ஒன்றிரண்டு பெட்டிகளையும் கடந்து செல்ல வேண்டும். மீண்டும் கடவுள்.</p> <p>”அட ராமச்சந்திரா! மறுபடியுமா?”</p> <p>“ஏதோ உன்மேல் பரிதாபம். அதனால்தான்.”</p> <p>“அப்படியானால் வண்டியை நிற்கச் செய்யும்.”</p> <p>“நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன்? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது?”</p> <p>“ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது?”</p> <p>“அப்போது அநுபவிக்க வேண்டியதுதான்.”</p> <p>“இதைச் சொல்ல நீ எதற்கு? நான்தான் அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளி போம்”</p> <p>இரண்டு முறை கடவுள் தரிசனம் ஆயிற்று. நேருக்கு நேராக. எத்தனை பக்தர்கள், <br />எவ்வளவு முனிவர்கள் எவ்வளவு ஆண்டுக்காலம் எப்படியெல்லாம் படாதபாடு <br />பட்டிருக்கிறார்கள்! இல்லாத தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்! <br />புதுமைப்பித்தனாவது வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு வேளைச் சோறு போட்டார். நானோ தள்ளிப் போகச் சொல்லிவிட்டேன். கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே?</p> <p>இப்படி ஓடி ஓடியும் ஐந்து நிமிஷப் பத்து நிமிஷக் கால தாமதத்தில் எவ்வளவோ <br />தவறிப்போயிருக்கிறது. தவறிப் போவதற்கென்றே திட்டமிட்டு காரியங்களைத் தாமதமாகச் செய்ய ஆரம்பித்து அப்புறம் இல்லாத ஓட்டம் ஓடி, கடைசியில் என்ன ஓடினாலும் முடியாது என்று ஆகும் போது, “பார்! என் துரதிர்ஷ்டம்! பார், என் தலையெழுத்து!” என்று சொல்லச் சௌகரியமாக இருக்காது?</p> <p>நாளையோடு இருபத்தைந்து முடிகிறது. இனி இந்த மாதிரி இடங்களில் உத்தியோகம் <br />எதிர்பார்க்க முடியாது. வேலை வாய்ப்பு என்பது நாளை என்பதால் அப்படியே <br />ஒன்றுக்குக் காலாகிவிடும். முழு வேலைவாய்ப்பில் படிப்பு முடிந்து இந்த ஆறு <br />வருஷங்களில் விட்டுவிட்டு எண்பத்தொரு நாட்களில் தினக்கூலி வேலை. ஒரு மாதம் <br />நான்கு நாட்கள் ஒரு பண்டாபீஸில் தற்காலிகமாக. அவ்வளவுதான். ஒரு வேளை <br />வேலைக்கென்று உண்மையாகவே தீவிரமாக முயற்சி செய்யவில்லையோ? முயற்சி. <br />விடாமுயற்சி. தீவிர முயற்சி. முயற்சி திருவினையாக்கும். முயற்சி திருவினை <br />ஆக்கும். பணக்காரன் ஆகலாம். பணம் வந்தால் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் வர <br />வேண்டாம். ஒரு டாக்ஸியில் குறித்த நேரத்துக்கு வரலாம். ரெயில் பின்னால் <br />சிறகொடிந்த நெருப்புக்கோழிபோல ஓட வேண்டியதில்லை; அதுவும் “ஹோல்டான். ஹோல்டான்” என்று கத்திக்கொண்டு. இந்த ஹோல்டான் என்ற சொல்லே தரித்திரத்தின் குறியீடு.</p> <p>நகர்ந்து கொண்டே இருக்கும் உலகத்தை ஹோல்டான் சொல்லி நிறுத்திவிட முடியுமா? <br />உலகம் நகர்ந்துகொண்டா இருக்கிறது? பயங்கரமான வேகத்தில் அண்ட வெளியில் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல. இன்னும் ஆயிரக்கணக்கான, <br />கோடிக்கணக்கான அண்டங்கள், உலகங்கள், தலை தெறிக்கும் வேகத்தில் சீறிப் பாய்ந்து <br />கொண்டிருக்கின்றன. இத்தனை அண்ட சராசரஙக்ளைச் சிருஷ்டித்துவிட்டு அவற்றைக் கன வேகத்தில் தூக்கி எறிந்துவிட்டு இந்தக் கடவுள் என் முன்னால் நின்று நான் <br />ஓடுவதைத் தடுக்கிறது!</p> <p>நான் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறேன்? ஒரு ரெயிலைப் பிடிக்க; இந்த ரெயில் <br />நிலையத்தில் பிளாட்பாரத்தில் நகர ஆரம்பித்துவிட்ட ஒரு ரெயிலைப் பிடிக்க. நான் <br />ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?</p> <p>எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுதத்து என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி, உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. ஆனால் அப்படி இல்லை. காலம் எனக்கு வெளியேதான் இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகள். ஆறு ஆண்டுகள். எண்பத்தொரு நாட்கள். ஒரு மாதம் நான்கு நாட்கள். பஸ்சில். பெருச்சாளி ஊர்தல். ஐந்து குழந்தைகள். கூட நிறையக் கோழிகள். கிரீச் கிரீச். கொக்கரக்கோ இல்லை. இம்முறை கடவுள் பிரத்தியட்சம்.</p> <p>கடவுள் என்றால் என்ன? என் மனப் பிராந்தி. கடவுளைப் பார்த்தவர் யார்? அவருக்கு <br />என்ன அடையாளம் கூற முடியும்? அவர் என்னும்போதே கடவுள் ஏதோ ஆண் பால் போல ஆகிவிட்டது. கடவுள் ஆண் பாலா? ஐந்து குழந்தைகள் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் காலம் நின்றுவிட்டது. நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரெயில் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்ன? எங்கே ரெயில்? எங்கே ரெயில்?</p> அவன் டிக்கட் கொடுப்பவர் கொடுத்த பாக்கிச் சில்லறையை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். உப்பியிருந்த தோள் பையால் ஒரு கையை மடக்க முடியாமல் அப்படியே அகற்றி வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரெயிலில் ஏறிக் கொண்டான். பையில் திணித்து வைத்திருந்த அலுமினியத் தம்ளர் விலா எலும்பில் இடிக்கும்போது அவனுக்கு வலிக்கத்தான் செய்தசுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-18592952110427404842010-06-12T09:59:00.001+05:302010-06-12T10:04:00.913+05:30மலத்தில் தோய்ந்த மானுடம்உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலம் என்று பெயருடைய தன் காதலியை (படத்தில் அவள் ஒரு தலித் பெண்) க மலம் என்று பிரித்து உச்சரித்து அழைப்பார் படத்தின் நாயகன் கமலஹாசன். பொது புத்தியின் மட்டமும் இதுவே. மலம் என்றவுடன் பெரும் அசூயை வந்து மனதைக் கவ்விக் கொள்கிறது. சுத்தம்-அசுத்தம் குறித்த நம்முள் படிந்துள்ள கருத்தாக்கங்களின் துணையுடன் அந்த வார்த்தையே அவ்வாறு அகத்துள் கிளைகிறது என்றால் என்றாவது நாம் தினமும் பாதாள சாக்கடைகளுக்குள் முத்து எடுப்பவர்களைப் போல் நுழைந்து கேசம் எல்லாம் மலத்துடன் வெளிவரும் மாந்தர்களின் மனநிலை குறித்து சிந்தித்திருக்கிறோமா? மனித மலத்தை மனிதர்களே கையால் அள்ளும், சுத்தம் செய்யும் இத்தகைய நடைமுறைகள் நம் காலத்திலும் நீடிப்பது சரியா.<br /><br /><img src="http://www.keetru.com/images/old_man_400.jpg" alt="Old man" align="right" border="0" width="400" height="256" /> நம் கரங்களையே வலது - இடது எனப் பிரித்து அவைகளின் பயன்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மலம் கழுவ இடது கரம், உண்ண வலது கரம் என்கிற இந்த வகைப்பாடுகள் வட இந்தியாவில் இத்தனை அழுத்தமாக இல்லை. (வட இந்தியர்கள் உண்ணும் பொழுது மிக சகஜமாக இடது கையை பாவிக்கிறார்கள்) உடலில் உள்ள உறுப்புகளைப் பிரிப்பதில் தொடங்கிய ஒழுக்க விதிமுறைகள் மெல்ல மெல்ல மனிதர்களையும் அவர்களின் வேலையின் அடிப்படையில் கூறுகூறாய்ப் பிரித்தது. இன்றும் ஜாதியின் பெயரால், அவர்கள் செய்யும் வேலையின் பெயரால் இந்த தேசத்தில் மனிதர்களை இந்து மதம் பிரித்து வைத்துள்ளது. உலகமே நிறவெறிக்கு எதிராக அணி திரளும் நேரம், நம் தேசத்தில் தினந்தோறும் தலித்துகள் பல விதமான அடக்குமுறைகளுக்கு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். மதத்தின் நடைமுறைகளுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் பல ஏட்டுச் சுரைக்காயாய் நம் சட்ட அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே அதனை மீறுபவர்களாக உள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் ஏதும் தேவையில்லை. நம் உடலின் ரத்தமும் சதையுமாம் சதா தங்கிக் கிடக்கும் 200 கிராம் மலத்தை நினைவில் கொன்டு பயணத்தைத் தொடருவோம்.<br /><br />இந்திய நாகரிகங்களைப் பற்றிப் பேசுகையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து, ஹரப்பா நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பொங்க நம் வரலாற்று அறிஞர்கள், அகழ்வாய்வாளர்கள் பேசுவார்கள். அந்த நாகரிகத்தின் குடியிருப்புகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள், கழிவுநீர் வடிந்தோட வாய்க்கால்கள் இருந்தன என ஒரு மிகப்பெரிய பட்டியல் பாடத்திட்டம் வரை எட்டியிருக்கிறது. அத்தகைய ஒரு சமூகம், அதன் கட்டமைப்புகளின் தொடர்ச்சி எப்பொழுது மறைந்து போனது. ஜாதியின் பெயரால் இந்தியாவில் தலித்துகள் மீது இன்று நடக்கும் கொடூரங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள இயலுமா?<br /><br />சுத்தம், சுகாதாரம், தூய்மை, மாசுபாடு, தலைவிதி குறித்த பார்ப்பனிய விழுமியங்களின் அடிப்படையில்தான் இன்று நடைமுறையில் உள்ள இழிவான ஜாதியப் படிநிலை உருவானது. அந்தப் படிநிலையின் கீழ்த் தளத்தில் தலித்துகள் மொத்த ஜாதிய கட்டுமானத்தின் சுமையைத் தாங்குபவர்களாக வடிவமைக்கப் பெற்றது. தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பெறுக்குவது, தோல் பயன்பாட்டுடைய தொழில், மனித-மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது/ எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது/ மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது /அப்புறப்படுத்துவது என இந்தப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாகப் பட்டியலிடப்பட்டது. 2000 ஆண்டுகளாக அது தொடர்ந்து நடைமுறையிலும் கச்சிதமாக இருந்தும் வருகிறது. பார்ப்னியர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுமானத் திட்டத்தை அப்படியே இடைநிலை ஜாதிகளும் அப்படியே சுவிகரித்துக் கொண்டனர்.<br /><br />ஹன், ஹாதி, பால்மிகி, தணுக், மேத்தார், பங்கீ, பாகீ, மிரா, லல்பெகி, பாலாஷ்ஹி, சுகுறா, மாதீகா, மாலா, தொட்டி, நீர்தொட்டி, சக்கிலியர்கள், அருந்ததியர் என விதவிதமான பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பெயர்கள் வேறுவேறாக இருப்பினும் இவர்களின் சமூக மதிப்பு ஒன்றாகவே உள்ளது. எல்லா நிலப்பரப்புகளிலும் பொதுவாக நிலமற்றவர்கள்தான் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் வேற்று மாநிலத்தவர்கள் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆந்திராவில் மலம் அள்ளுதலில் ஈடுபட்டுள்ள மேத்தார்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், மாதீகாக்கள் ஆந்திராவிலிருந்து வட தமிழகத்திற்குக் கொணரப்பட்டனர். ஒரிசாவைச் சேர்ந்தவர்கள் வட ஆந்திராவில் குடியமர்த்தப்பட்டனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான் இலங்கை மற்றும் பங்களாதேஷில் மலம் அள்ளுகிறார்கள். மியான்மர் மற்றும் பல தெற்காசிய நாடுகள் வரை நம் பெருமிதங்கள் விரவிக் கிடக்கிறது.<br /><br />நம் தேசத்தின் தலை நகரத்தில் பீ அள்ளுபவர்கள் பெரும்பகுதி தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களே. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.<br /><br />பார்ப்பனியர்கள் வசிக்கும் அக்கிரகாரத்தின் வீடுகளில் உள்ள கொல்லைக்குச் சென்று பீயை அள்ளுவது என்கிற நடைமுறையோடுதான் இந்த இழிவு தொடங்கியது. கிராமங்களின் தொழில்நுட்பவல்லுனர்களாக விளங்கிய தலித்துகளை மிகுந்த அடக்குமுறையின் பெயரில் கட்டாயப்படுத்தித்தான் இத்தகைய பணியில் ஈடுபடுத்தினார்கள். விவசாயம்சார் தோல் கருவிகளை அதுகாறும் தயாரித்து வழங்கிய தலித்துகளின் மீது திணிக்கப்பட்டதே இந்த இழிவு. சொந்த நிலத்தில் விவசாயம் செய்த தலித்துகள் மீதும் பல அடக்குமுறைகள் ஏவப்பட்டன. விவசாயம் மும்முரமாய் நடைபெற்று அறுவடையின் தறுவாயில் வயலின் விளைச்சலை ஆதிக்க சாதியினர் கொள்ளையடித்துச் செல்லுவது என்கிற நடைமுறை பல பகுதிகளில் காணப்பட்டது. ஓரிரு முறை விளைச்சலைப் பறிகொடுத்த பின் ஊரைவிட்டு வெளியேறி வேறு பிழைப்புத் தேடிச் செல்லும் தலித்துகளை இத்தகைய பணிகளில் தந்திரமாக ஈடுபடுத்தினார்கள். இவர்களின் நிலங்கள் ஆதிக்க ஜாதியினரால் பங்கிடப்பட்டது.<br /><br />காலனியகாலத்தில் வெள்ளையர்கள் இங்கு நிலவிய கட்டுமானத்தை அப்படியே தங்கள் சௌகரியத்திற்கு பாவித்துக்கொண்டனர். வெள்ளையர்களின் நிர்வாக வளாகங்கள், குடியிருப்புகள், நீதிமன்றங்கள், ராணுவ கண்டோன்மெண்டுகள் என எங்கும் உலர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. பார்ப்பனியம் ஏற்படுத்தி வைத்திருந்த நடைமுறையை வெள்ளையர்கள் ஸ்தாபனப்படுத்தினார்கள், நிர்வாகக் கட்டுமானமாக உருமாற்றினார்கள். இங்கு வந்த மிஷனரிகள் தலித்துகளின் வாழ்நிலையில் பெரும் மாற்றம் எதனையும் கொணரவில்லை. வெள்ளையர்கள் துவங்கிய ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான தலித்துகள் மலம் அள்ளும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்றும் உலகத்திலேயே அதிகப்படியான மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது இந்திய ரயில்வே துறையே. சாலைகள் போடுவதற்கென கிராமங்களில் இருந்து வெளியேறி சாலையோரம் மெல்ல மெல்ல பயணித்து நகரங்கள் வந்தடைந்த தலித்துகளை அந்த அந்த நகரமே விழுங்கிக் கொண்டது. எல்லா நகரங்களையும் சுகாதாரத்துடன் பேணுவதற்குக் குறைந்த கூலியில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் தேவை. சுகாதாரம் சார்ந்த பணிகளுக்குத் தொடர்ந்து மிகக் குறைந்த தொகையைத் தான் அரசாங்கங்கள் ஒதுக்கி வருகின்றன. சுகாதாரம் என்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றதில்லை.<br />1989ல் அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி இந்தியாவில் 6 லட்சம் பேர் மனித மலத்தை அப்புறப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விபரங்கள் தவறானவை என்கிறது சபாயி கர்மசாரி ஆந்தொலன் (Safai Karamchari Andolan). அவர்களின் கணக்குப்படி அது 13 லட்சம் ஆக உயர்ந்து கிடக்கிறது. 1996ல் விஜயவாடாவில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆந்திராவில் மிகப் பெரிய வீச்சுடன் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. தற்பொழுது தில்லியைத் தலைமையாகக் கொண்டு பல மாநிலங்களில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் விரவிக்கிடக்கிறது. இந்த அமைப்புத் தொடங்க முக்கிய காரணமாய் இருந்தவர்களில் ஒருவர் பெசவாடா வில்சன். கர்நாடக மாநிலத்தில் ஒரு மாதிகா குடும்பத்தில் பிறந்தவர் பெசவாடா வில்சன்.<br /><br />பெசவாடா வில்சனின் பெற்றோர், உறவினர்கள் கோலார் தங்கவயலில் வசிக்கும் 76,000 (1960-70ல்) தொழிலாளர்களின் குடியிருப்புகளில் உள்ள திறந்தவெளி உலர் கழிப்பிடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே. ஆந்திராவின் குப்பத்தில் தொடக்கக் கல்வி, பெங்களூரில் முதுகலைப் பட்டம் மற்றும் இறையியல் இளநிலை பட்டப்படிப்பும் அதன் பின்னர் சமூகப்பணியென அவரது பயணம் தொடங்கியது. பின்னர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயத் துவங்கினார், அவர்களில் பெரும் பகுதி குடிகாரர்களாக இருந்தனர். அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று சூழ்நிலையை விழுங்க முற்பட்டார் வில்சன். அந்த வீச்சம், நாற்றம்தான் அவர்களைக் குடியின் பால் இட்டுச் சென்றது. நாள்தோறும் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பெரிய தொட்டிகளில் கொட்டி, பின்னர் அதை வேறு ஒரு இடத்திற்குச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். மல வாளியைத் தூக்கி ட்ராக்டரில் ஏற்ற வேண்டும். இந்த வேலையைச் செய்யும் பொழுது அவர்களின் உடலில் மலம் வடிந்துவிடுவதைப் பார்த்த வில்சன் கதறக்கதற வெடித்து அழுதார்.<br /><br />வில்சன் அதனை இவ்வாறு தனது வார்த்தைகளில் கூறுகிறார், "நான் அந்தக்குழிக்குப் பக்கத்திலேயே விழுந்து அழுது புரண்டேன். நான் பார்த்த அந்தக் காட்சிக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. நான் சாக விரும்பினேன். நான் தொடர்ந்து அழுதேன். முதலில் அந்தத் தொழிலாளர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். இப்பொழுது அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு, எனக்கு என்ன ஆனது? ஏன் அழுகிறாய்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் கேள்விகள் என்னை மேலும் மேலும் அழ வைத்தது. நான் அந்தக் காட்சியைப் பார்த்த பின்பு, எனக்கு உலகமே தலைகீழாக மாறிப்போனது. நான் செத்துவிட வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் இந்த வேலையைச் செய்யக் கூடாது; நிறுத்திவிட வேண்டும் என்று சொன்னேன். என்னுடைய துயரம் அவர்களை பாதித்துவிட்டதாக நினைக்கிறேன். முதல் முறையாக, இந்த வேலை தங்களை பாதிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்களால் என்ன செய்ய இயலும்? அவர்கள் இந்த வேலையைச் செய்ய மறுத்தால், வேலையில் இருந்து தூக்கியெறியப்படுவார்கள். அவர்களின் வீட்டில் எப்படி உலைவேகும்?<br /><br />என்னால் சாப்பிட முடியவில்லை; தூங்க முடியவில்லை. எனக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். 1982 முதல் இயங்கத்துவங்கிய வில்சன் 1996ல் தீவிரமான மனித உரிமை ஆர்வலர்களான தனது நண்பர்களுடன் இணைந்து அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவுட்லுக் இதழ் 25 நபர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியாவில் எக்காலத்திலும் அதிகாரத்திற்குச் செல்ல முடியாத வர்களின் பட்டியல். மகத்தான போராளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அதிகாரத்திற்கு எதிரான அறிவுஜீவிகள், சமூகங்சார் களப்பனியாளர்கள் என நிண்டு சென்றது. அதில் பெசவாடா வில்சன் இடம் பெற்றிருந்தார். இது அவரது பணிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.<br /><br />1982 முதல் தொடர்ந்து பல வடிவங்களில் தன் போராட்டத்தை முன்னெடுத்தார். 1993ல் நாடாளுமன்றம் இத்தொழிலைத் தடை செய்து சட்டம் இயற்றியது (கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம்). இது வில்சனின் போராட்டத்திற்குக் கிடைத்த சட்டபூர்வமான வெற்றி. பின்பு இந்தச்சட்ட நகலை அரசாங்க அதிகாரிகளுக்குத் தொடர்ந்து அனுப்பத் துவங்கினார். மகஜர்கள் தினமும் திசைகள் எங்கும் பறந்தது. பத்திரிகைகள் கொஞ்சம் கருணை காட்டின. 1994ல் பெங்களூரூவில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் அனைத்தும் தண்ணீர் விட்டுக்கழுவும் வகையில் மாற்றம் செய்யப்பட்டன. அந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் வேறு பணியில் மாநகராட்சி அமர்த்திக்கொண்டது. ஆரம்பம் முதலே வில்சன் தனது பார்வையில் தீர்க்கமாக இருந்தார்.<br /><br />கட்டாயமாகக் கூலி உயர்வு, புதிய கருவிகள் எனப் பேரங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. இந்தியாவில் எந்தப் பகுதியிலும், ஒரேயொரு திறந்தவெளி கழிப்பிடம் கூட இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், இந்த ஜாதி அமைப்பு உடனடியாக மலம் அள்ளும் ஜாதியைத் தோற்றுவித்துவிடும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சவாலைத் தனது தோள்களில் ஏற்றுக்கொண்டு தேசமெங்கும் பயணம் செய்து வருகிறார். 1993ல் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பொழுதும்கூட, அது 1997வரை இந்திய அரசிதழில் (Gazetter of India) அறிவிக்கப்படவில்லை. 2000வரை எந்த மாநில அரசும் இதுகுறித்து மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.<br /><br />தொழில்மயம் ஏற்படுத்திய பெரும் இடப்பெயர்வுகளில் நகரங்கள் வளரத் துவங்கின. அவை இன்று வரை தடையற்று வீங்கிப் பெருத்து வருகின்றன. எந்த நகரத்திற்கும் இத்தனை லட்சம் மனிதர்களை அடைக்கலம் கொடுக்கும் விஸ்தாரம், தண்ணீர், சுகாதாரம் என அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது போன்று நம் அரசுகளிடம் எந்தப் புள்ளிவிபரங்களும் கிடையாது. மேம்பாடு, வளர்ச்சி, தொழில் எனச் சகல துறைகள் சார்ந்தும் நம் இயங்கு மாதிரிகள் மேற்கிலிருந்து பெறப்பட்டவை போன்ற கருத்தாக்கங்கள் நம்மிடையே புழங்குகிறது. அவைகளை கூட நாம் முறையே பெறவில்லை மாறாக அனைத்தையும் பாவனை செய்தே வருகிறோம். நம் பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என வருடம் தோறும் வெளிநாட்டுப் பயணங்களை சதா மேற்கொள்கிறார்கள், இத்தனை லட்சம் கோடிகளை செலவழித்து, வர்த்தக-கலாச்சார- தொழில்நுட்ப-அறிவு சார் பகிர்வுகளைப் பரிமாற்றங்களை நடத்தியும் ஏன் நம்மால் உருப்படியாக ஒரு பாதாள சாக்கடையை, கக்கூஸை கட்ட இயலவில்லை. நாடெங்கிலும் உள்ள பேருந்து நிலையங்களில் எப்படி ஒரே மாதிரியாக நாறுகிறது. ஒரு வேளை இது நம் தேசத்து நிலைமையைப் பறைசாற்றும் வீச்சமோ.<br /><br />கடந்த பத்தாண்டுகளில் சுகாதார நிலைமைகள் மோசமாக படுபாதாளம் நோக்கியே பயணித்துள்ளன. தண்ணீர்ப் பற்றாக்குறை ஒரு புறமும், மறுபுறம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக நம் நீர் நிலைகளைப் பாழ்படுத்தி வருகிறது. பல கிராமங்களின், நகரங்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்த ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் இன்று மாசுபடிந்து மனித உபயோகங்களுக்கு லாயக்கற்றதாக உருமாறிக்கிடக்கிறது. கழிவு நீர்க் குட்டைகளாக அவை இன்று கொசுக்களின் நாற்றங்காலாய் விளங்குகின்றன. பலவிதத் தொற்று நோய்களின் தொகுப்பாக அவை விளங்குகின்றன. இந்தக் கழிவுநீரைக் கடக்கும் பொழுது நம் மத்தியத் தரவர்க்கம் முகம் சுழிக்கும், கை லேஞ்சால் மூக்கை மூடிக்கொள்ளும். ஆனால் இந்தியாவெங்கும் சொல்லி வைத்தார் போல் தலித்துகளுக்கு எப்படி அரசாங்கங்கள் இந்தக் கழிவுநீர்க் குட்டைகளுக்கு அருகிலேயே வீடுகளை அமைத்துத் தருகிறது.<br /><br />குப்பை மேடுகளில்தான் சேரிகள் அமைக்க அரசுகள் அனுமதியளிக்கிறது. நகரத்தின் கழிவுகளை நாளெல்லாம் சுமப்பவர்களுக்கு அதன் மீதே குடியிருக்க அனுமதிக்கும் அரசுகள், உயர் ஜாதி மனோபாவம் கொண்ட இந்து அரசுகள்தானே. சென்னை கூவம் நதிக்கரையில் வசிப்பவர்கள் அந்த நகரத்தை அழுக்காக்குகிறார்கள், நகரம் வழியே பயணிக்கும் பொழுது அவர்களின் இருப்பு பார்வையை உறுத்துகிறது ஆதலால் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு பூங்காக்கள் அமைக்கும் திட்டம் துவங்கி உள்ளது. வெளியேற்றாவிட்டால் வெளிநாட்டு மூலதனம் நின்றுவிடும் அல்லவா.<br /><br />மலம் அள்ளுபவர்கள் தங்கள் வாழ்விடங்கள் சார்ந்தும், பணி சார்ந்தும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள். டெங்கு, மலேரியா, வயிற்றுப் போக்கு, சத்துக் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள் என ரகம் ரகமான நோய்களுக்குப் பஞ்சமில்லை. குழந்தைப் பருவத்திலேயே பல சிசுக்கள் இறப்பிற்கு இவர்களின் வாழ்விடங்களே காரணம் எனப்பல ஆய்வுகள் உரத்துத் தெரிவிக்கின்றன. மறுபுறம் இத்தகைய கழிவுகளை தங்களின் புதிய வாழ்க்கை முறையின் பயனாய், நுகர்வு மயத்தின் விளைவாய்க் குற்ற உணர்வின்றி பணத்திமிரின் அடையாளமாய் வெளியேற்றும் மத்திய தரவர்க்கத்திற்கு சுகதார வசதிகள் அனைத்தும் அரசு மானியத்துடன் வழங்குகிறது. இன்றும் கூட தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் இந்திய ஜனத்தொகையில் 33% பேருக்குத்தான் எட்டியிருக்கிறது.<br /><br />2003ல் சமூக நீதி மற்றும் மேம்பாட்டிற்கான அமைச்சகம் 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் இருப்பதாக அறிவித்தது. 2010 க்குள் உலர் கழிப்பிடங்களை இல்லாமல் ஆக்க வேண்டும், கையால் மலம் அள்ளும் நடைமுறை ஒழிய வேண்டும் என்கிற வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது. ஆந்திராவில் வில்சன் தனது அமைப்பின் விஸ்தாரத்துடன் தீவிரமான போராட்டங்களை நடத்தினார். அந்த அமைப்பு, போராட்டம், வில்சன் ஆகிய முப்பரிமாணங்களுடன் வெளிவந்துள்ள கீதா ராமசாமியின் India Stinking மற்றும் மாரி மார்சல் தக்கக்காராவின் Endless Filth நமக்கு விரிவான பார்வைகளைப் புரிதல்களை முன்வைக்கிறது.<br /><br />சபாயி கர்மசாரி ஆந்தொலன் தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் ஆந்திராவெங்கும் சென்று கெடு வைத்து உலர் கழிப்பிடங்களைத் தகர்த்து. அந்தத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு, மாற்றுப்பணி வழங்கும் திட்டங்களை நடை முறைப்படுத்த அரசை வற்புறுத்தியது. யெல்லா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த உலர் கழிப்பிடத்தைத் தகர்க்கச் சென்ற பொழுது நீதிபதி அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இது அரசாங்கத்தின் சொத்து என்றார் நீதிபதி. காவல் துறையிடம் சென்று 1993 சட்டத்தின் நகல்களை வழங்கி ஒரு வழியாக அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகள் அங்கு பணியாற்றியவர் தான் சம்மட்டியை எடுத்து முதல் அடியை வைத்து அன்றைய உடைப்பைத் தொடங்கினார். இது ஏதோ ஒரு காலத்தில் அல்ல மார்ச் 2005ல் நடந்த சம்பவமே.<br /><br />சபாயி கர்மச்சாரிகளின் தேசிய ஆணையம் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டது. ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் எனப் பல துறைகளில் இன்றும் இழிவான நடைமுறைகள் உள்ளதை அது சுட்டிக்காட்டியது. ராணுவத்தின் பல முகாம்களில் இன்றளவும் கையால் மலம் அள்ளும் வழக்கம் உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறைதான் அதிகப்படியான ஆட்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்தி வருகிறது. ஏறக்குறைய பெரு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களின் சுத்திகரிப்பு சார்ந்த பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ரயில்வேயிடம் ரூ.6500 கூலி கிடைத்தது, யுரெகா ஃபொர்ப்ஸ் போன்ற நிறுவனம் தன் தொழிலாளிக்கு வழங்குவது வெறும் ரூ.2500 மட்டுமே. ரயில்வே நிர்வாகம் எத்தனை வாசகங்களை எழுதிப் போட்டாலும் நாங்கள் ரயில் நின்ற பின்புதான் மலம் கழிப்போம் என்கிற ஒரு பெரும் வர்க்கமே நம்முடன் வாழ்ந்து வருகிறது. இவர்களின் விளைவாய் ரயில்வேயில் உள்ள 40,000 பெட்டிகளிலிருந்து தினந்தோறும் 2.74 லட்சம் லிட்டர் மலம் வெளியேறுகிறது.<br /><br />உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்டித்தும் ரயில்வே நிர்வாகம் செவிசாய்ப்பதாக இல்லை. 40,000 பெட்டிகளில் இதுவரை 261 பெட்டிகளில் மட்டுமே கலன்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 5 ரயில் நிலையங்களில் மட்டுமே முற்றிலும் நீராலான கழுவும் (Aprons) வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 145 ரயில் நிலையங்களில் தண்ணீரைப் பீச்சி அடித்து மலத்தை அகற்றி சாக்கடையில் தள்ளும் நடைமுறை உள்ளது. நாடெங்கிலும் 6856 ரயில் நிலையங்கள் உள்ளன என்பது இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறைய செலவு ஆகும், ரயில்வேயிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கைவிரிக்கிற மனோபாவம் தான் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது. 2010ல் நடைபெறவிருக்கும் காமன் வெல்த்து போட்டிகளை முன்னிட்டு தில்லியைச் சுற்றியுள்ள 18 ரயில் நிலையங்களை அழகுப்படுத்த 4000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது. மனம் இருந்தால் . . . மனம் இல்லையெனில் . . .<br /><br />சென்னையில் மட்டும் 2800 கிமீ நீளத்திற்கு பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி, கருவிகள் என எதுவும் இங்கு வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும் பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷ வாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொழில் சார் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 22,000. காஷ்மீர், வட கிழக்கு, ராணுவம் என எத்தனை சொற்றொடர்களை அடுக்கினாலும் இந்த எண்ணிக்கையை சமன் செய்ய இயலாது.<br /><br />1912ல் காலனிய முனிசிபாலிட்டி திட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு வெள்ளைய அதிகாரி கூறினார், நமக்கு தேவை மிகவும் அருமையான சுகாதார நடைமுறைகள் அல்ல, மாறாக குறைந்த செலவிலான திட்டங்களே. அந்த மனநிலைதான் இன்றும் நம் மத்தியில் புழங்குகிறது. மனித மான்புகளுக்கு மதிப்புடைய வழிமுறைகளைவிட, மலிவான நடைமுறைகளையே நாம் தேர்வுச் செய்கிறோம். மலம் அள்ளுவதைவிடக் கொடுமையானது நிலத்தடி மலத்தொட்டிகளை (Septic Tank) அப்புறப்படுத்தும் பணி. நம் சுற்றத்தில் மிக சகஜமாக இந்தப் பணி நடைபெறுகிறது. விஷ வாயுக்கள் நிரம்பிய தொட்டிகளில் இறங்கி வாளியால் அள்ளி ட்ரம்களில் நிரப்பி ஊருக்கு வெளியே அப்புறப்படுத்தி வருவார்கள்.<br /><br />மலம் மக்கத் துவங்கியதும் அங்குள்ள ஆக்சிஜனை மீதேன் வாயுவால் இடம் மாற்றம் பெறுகிறது. ஹைட்ரஜன் சல்பைடும் அத்துடன் இணைகிறது. இந்த வாயுவை சுவாசித்தால் உடன் மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடும், மயக்கம் வந்துவிடும். மீதேன்வாயு உடன் தீப்பற்றக்கூடியது. இந்த வாயுக்களின் அடர்த்தியை அறியும் கருவிகள்கூட நம்மிடம் கிடையாது. தற்சமயம் புதிய எந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மலத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவைகளில் மூலதனத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால் தலித்துகளின் கையிற்கு அது எட்டாக் கனியாக உள்ளது. ஹாங்காங்கில் பாதாள சாக்கடையில் இறங்கு பவருக்கு விண்வெளிக்கு செல்பவருக்கு ஒப்பான உடைகள் வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை நன்கு ஒளியேற்றப்பட்டுள்ளன. காற்றோட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடைக்குள் இறங்குபவர் 15 உரிமங்கள் பெற்றிருக்க வேண்டும்.<br /><br /><img src="http://www.keetru.com/images/cleaning_340.jpg" alt="Cleaning" align="right" border="0" width="340" height="252" /> மலம் அள்ளுபவர்களைப் புனரமைக்கும் திட்டங்களை ஆராய குழுக்களை அமைக்க நம் அரசுகள் தவறவில்லை. 1949 முதல் 1976வரை ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன. 1949ல் அமைக்கப்பட்ட பார்வே கமிஷன் (Barve Commission) மலம் அள்ளுபவர்கள் இந்தப் பணியினைச் செய்ய மறுக்கவில்லையே என்றார். மலம் அள்ளுபவர்கள் தொடர்புடைய பிரச்சினையை ஆராய பார்ப்பனியரை அமர்த்தினால் வேறு என்ன நடக்கும். 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்தொழில்சார் தலித்துகள் வாழ்க்கைப் புனரமைப்புக்கு 460 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் 146.04 கோடிகள் மட்டுமே வந்து சேர்ந்தது. தமிழகத்திலும் அந்தத் தொகை செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல மாநில அரசுகளும், ரயில்வே நிர்வாகமும் உச்சநீதிமன்றத்திடம் மனிதர்கள் மனித மலத்தை அள்ளும் நடைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் பொய் சொல்கிறது. தமிழக அரசு அவ்வாறு பொய்யான கூற்றுகளையே நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இப்படியான எல்லா வாசகங்களையும் சபாயிகர்மசாரி ஆந்தொலனின் தொண்டர்கள் புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர்.<br /><br />மலம் அள்ளுதலை யாரும் விருப்பத்துடன் செய்ய இயலாது. சமீபத்தில் நரேந்திர மோடி மலம் அள்ளுதல் ஒரு ஆன்மீகத் தொண்டைப் போன்றது என்றார். ஏறக் குறைய காந்தியும் இதை ஒத்த கருத்தையே முன்வைத்தார். சுத்தம் செய்யும் பணி தெய்வீகமானது, ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்யும் சேவையைப் போன்றது என்றார். சுழற்சிமுறையில் இங்குள்ள ஜாதிகள் அனைவரும் இந்த ஆன்மீகப் பணியைச் செய்யலாம் என ஏனோ எவரும் முன்வைக்கவில்லை. திண்ணியங்கள்தான் இன்றைய எதார்த்தங்களாக இருக்கும் பட்சத்தில் இந்த ஜாதியப் படிநிலையை ஒழிக்காமல் இங்குள்ள இழிவுகளைப் போக்கிக்கொள்ள இயலுமா?<br /><br />இவைகளை எல்லாம் கடந்து ஒரு மலம் அள்ளும் தொழிலாளியின் மகன்/மகள் கல்வி பெற்று மேற்படிப்பிற்கோ, வேலை கிடைத்தோ உயர் கல்வி நிறுவனங்களில்/ பொதுத் துறையில் நுழைந்து விட்டால் அல்லது முயன்றால் என்ன நடக்கும் என்பதனை நாம் கடந்த ஓர் ஆண்டாகக் கண்கூடாகப் பார்த்தோம். இந்தியாவின் நேசக் கரங்கள், ஊடகங்களின் குணமளிக்கும் தொடுதல் என இட ஒதுக்கீட்டு அறிவிப்பிற்குக் கிடைத்த எதிர் வினைகளை இந்தத் தேசம் கண்டது. மொத்தக் கட்டுமானத்தின் தரமும் கெட்டுப் போச்சு என இவர்கள் மாரடித்து அழுவது ஆபாசங்களின் உச்சம் அல்லவா. இந்து மதத்தின் சகல கரங்களும் அரசை, அதிகாரத்தைத் தன் பிடியில் வைத்திருக்க விழிப்புடன் இருக்கிறது.<br /><br />திருவிழாக்கள் வந்துவிட்டால் இவர்களுக்குப் பெரும் பிரச்சினையே. சித்திரைத் திருவிழா, மகா மகம், கந்த சஷ்டி, அரசியல் மாநாடு அல்லது லட்சக்கணக்கில் மக்கள் கூடும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அந்த ஒரு வாரகாலம் சோறுதிங்க இயலாது என்பது அவர்களுடன் உரையாடுகையில் புலப்படுகிறது. பெரும் திருவிழாக்களின் பொழுது நகரமே பீயால் மொழுகப்படுகிறது. ஆறுகள், தெருக்கள், சந்துகள், மறைவிடங்கள் என நகரமே கழிப்பிடமாக உருமாறுகிறது. இந்தப் பீயை அள்ளி அப்புறப்படுத்தும் வரை உறக்கம் இல்லை, சோறு தண்ணீர் இல்லை. அய்யப்பசாமி, பழனி சீசன் வந்துவிட்டால் ஊரை விட்டு ஓடிவிடலாம் போல் உள்ளது தான் ஆனால் குடும்பத்தை மனதில் வைத்துத்தான் இந்தக் கருமத்தைச் செய்து தொலைக்க வேண்டியுள்ளது என்பதே அவர்களின் மன வேதனையாக உள்ளது.<br /><br />ஹரியானாவில் ப்ரின்ஸ் என்கிற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பொழுது அதை நேரடி ஒளிபரப்பாகவே ஊடகங்கள் ஒளி பரப்பின. அப்படியிருக்க ஏன் பாதாள சாக்கடையில் வருடந்தோறும் இறக்கும் 22,000 பேரில் எவரையும் ஊடகங்கள் காட்டுவதில்லை. விவசாயிகள் தற்கொலையைப் போல் இதனையும் இந்தத் தேசம் சௌகர்யமாய் மறந்திடவே விரும்புகிறது. மொழியியலும் தன் பங்கிற்கு உதவிகள் செய்தது. Manual Scavengers என்கிற பதம் Sanitary Workers ஆக உருமாறியது. Human Excreta உருமாறி Night Soil ஆனது. Night Soil Cleaners என்றுதான் இவர்கள் ரயில்வேயில் அழைக்கப்படுகிறார்கள். நவதாராளவாத அரசுகள் பண்பட்ட மொழியில் தான் பேசும். நவதாராளவாத அரசுகளின் பண்பட்ட மொழி இது.<br /><br />அரசியல் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுடைய தலித்துக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அரசியல், அரசு சார்ந்த சலுகைகள் கிடைப்பதில்லை. ஆனால் அரசியல் ஒரு சாக்கடையென கூறும் மத்தியத்தர வர்க்கம்தான் அரசாங்கத்தின், அரசியலின் சகல பலன்களையும் அனுபவிக்கிறது. சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகும் தருவாயில் தன் குடிமக்களுக்குக் கக்கூஸ்கூட கட்டிக் கொடுக்க வக்கற்ற தேசமாகவே நம் தேசம் விளங்குகிறது. கழிவறையைக் கட்டத் தெரியாத தேசம் மறுபுறம் வல்லரசாகத் துடிக்கிறது. நல்ல சுகாதாரமான கழிவறைகள், பாதாள சாக்கடைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எனச் சுகாதாரம் சார்ந்து இயங்கும் விஞ்ஞானிகளை நாம் உருவாக்கத் தவறிவிட்டோமா, அல்லது இனம் காணத் தவறிவிட்டோமா? சுகாதாரம் சார்ந்த, மக்கள் சார்ந்த இயங்கும் விஞ்ஞானி எவரையும் இந்தத் தேசத்தின் ஜனாதிபதியாக நாம் கற்பனை செய்து பார்க்கும் காலம் வருமா . . .<br /><br />நாடெங்கும் இந்த இழிவை போக்க பயணமாக வரும் பெசவாடா வில்சனுடன் உரையாடும் பொழுது பல விதமான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். மொத்தம் உள்ள 602 மாவட்டங்களில் தற்சமயம் 140 மாவட்டங்களில் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த இழிவைப் போக்குவதற்கும் சற்றும் சளைத்ததல்ல அவர்களுக்கு சுயமரியதையுடன் கூடிய மாற்று வாழ்வுரிமைகளை பெற்றுத் தருவது. தில்லியில் 60கிமி மெட்ரோ ரயிலுக்கு 10,570 கோடி ரூபாய் செலவிடும் அரசு, மலம் அள்ளும் சக மனிதர்களின் வேதனையை புரிந்துகொள்ள மறுக்கிறது. வாழ்வுரிமை திட்டங்களுக்கு பணம் ஒதுக்க மறுக்கிறது.<br /><br />நம் சுற்றுப்புறத்தில் மாந்தர்கள் இத்தகைய இழிவுகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் சம காலத்தில்; சுயமரியாதையுடன் கூடிய நிறைவான வாழ்வு நம் சமூகத்திற்கு சாத்தியமா. நாம் ஆரோக்கியமான சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா, இதற்கும் நமக்கும் தொடர்பில்லை எனக் கூறி நாம் ஒதுங்கி வாழ்தல் தகுமா. தமிழகத்தின் ஜனத்தொகை 20% பேர் தலித்துக்கள், அவர்களை ஜாதி எனும் கொடிய அமைப்பின் மேலாதிக்கத்தின் கீழ்தான் மலத்தை கையால் அள்ளும் வழக்கம் நிலைப் பெற்றுள்ளது.<br /><br />அடுத்து நம் வசிப்பிடத்தில் யாரேனும் ஒருவர் பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறி வரக் கூடும், அவரின் முகத்திலும் கேசத்திலும் அப்பியிருக்கும் மலம் நம்முடையதாகக்கூட இருக்கக்கூடும்.<br />நன்றி- Endless Filth, India Stinking, Tehelka<br />--<br />Until lions have their own historians,<br />histories of the hunt will glorify the hunter.சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-10354410962915564032010-05-15T12:19:00.000+05:302010-05-15T12:20:18.685+05:30ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்----குவளைக் கண்ணன்<blockquote> <p><em>”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.</em></p> <p><em>கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'”</em></p> </blockquote> <p>மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.</p> <p>பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை <a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/SzF85j-oLBI/AAAAAAAAFS4/MTn1YHnAX0k/s1600-h/athmanam5.jpg"><img style="border-width: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="athmanam" alt="athmanam" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/SzF87J2aX1I/AAAAAAAAFS8/hPUtBBxghyI/athmanam_thumb3.jpg?imgmax=800" align="left" border="0" width="154" height="209" /></a>உமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.</p> <p>'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.</p> <p>'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.</p> <p>குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?</p> <p>'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம். <br />வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.</p> <p>இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.</p> <p>முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.</p> <p>இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.</p> <p>ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:</p> <p>முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.</p> <p>மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.</p> <p>தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.</p> <p>இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:</p> <p>'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.</p> <p>'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.</p> <p>இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.</p> <p>எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.</p> <p>மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.</p> <p>ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.</p> <p>மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.</p> <p>'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:</p> <p>தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?</p> <p>06.07.1984 அன்று மரணத்தில் மூழ்கியது, 18.01.1951இல் பிறந்த ஷி.ரி. மதுசூதன். இதற்கு இருபது ஆண்டுகள் கழித்தும் இப்போதும் ஆத்மாநாம் இருக்கிறார், இன்னும் இருப்பார். கவிதைகளின் வாழ்வல்லவா கவிஞர்களின் வாழ்வு.</p> <p>('கடவு' சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட 'கூடல்' கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)</p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-18150850844608206842010-05-15T12:17:00.000+05:302010-05-15T12:18:43.883+05:30தொட்டில் வாசனை----எஸ்.ராமகிருஷ்ணன்<p>ஊரிலிருந்து சென்னைக்கு கைக்குழந்தையோடு இடம் மாறி வந்த நாளில், என் மனைவி சிறிய பொட்டலம் ஒன்றை முடிந்து கையோடு எடுத்து வந்திருந்தாள். அந்தப் பொட்டலம் நீண்ட நாட்களாக குழந்தையின் தொட்டில் கம்பில் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தது.</p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S3rMhMONQqI/AAAAAAAAFpg/-aI3-p0l9QY/s1600-h/vannanilavan19.gif"><img style="border-width: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="vannanilavan" alt="vannanilavan" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S3rMiIwHbrI/AAAAAAAAFpk/PTVT6xEKt7I/vannanilavan_thumb17.gif?imgmax=800" align="left" border="0" width="309" height="241" /></a>ஒவ்வொரு முறை அதைக் காணும்போதும், என்ன இருக்கிறது அதில் என்று கேட்க வேண்டும் என்று தோன்றும். குழந்தையின் கண் திருஷ்டிக்காக எதையாவது கட்டி வைத்திருப்பார்கள் என்று கேட்காமலே விட்டுவிடுவேன். பையன் தொட்டிலில் உறங்கும் வயதைக் கடந்து வந்துவிட்ட பிறகு, இனி தொட்டிலின் தேவை முடிந்துவிட்டது என்பதுபோல அவிழ்த்துக்கொண்டு இருந்தார்கள். அந்தப் பொட்டலம் சுருங்கிச் சின்னதாகிக் கீழே விழுந்தது.</p> <p>என்னதான் இருக்கிறது அந்தப் பொட்டலத்தில் என்று எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே பிடி மண் இருந்தது. என் முகத்தைப் பார்த்தபடியே மனைவி சொன்னாள்… <br />Ô‘பிறந்த இடத்தின் மண் இல்லாவிட்டால் குழந்தை நிம்மதியாகத் தூங்காது. அதற்காக ஊரிலிருந்து வரும்போது ஒரு பிடி மண்ணைக் கொண்டுவந்து கட்டினேன்!ÕÕ <br />வியப்பாக இருந்தது. பிறந்த மண்ணின் வாசனையும் நெருக்கமும் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வராது என்பது எத்தனை ஆழ்ந்த நம்பிக்கை! அப்படியென்றால், பையன் தன் உறக்கத்திலும் கனவிலும் என் ஊரைத்தான் நுகர்ந்துகொண்டு இருந்திருக்கிறானா? ஊரின் வாசம்தான் உறக்கத்தை வரவழைக்கக் கூடியதா? இப்படிப் பிறந்ததிலிருந்து மண் வாசனையை நுகர்ந்துகொண்டு இருந்த நாம், வளர்ந்த பிறகு அதை எப்படி மறந்துவிடுகிறோம்? மண்ணோடு மனிதனுக்கு உள்ள உறவு விசித்திரமானதுதான், இல்லையா?</p> <p>ஊரைப் பிரிந்து வருவது எளிதானதில்லை. புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளரான டால்ஸ்டாய், தனது கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தது பற்றி அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும்போது, ‘ஒரு நூறு வருடப் பழைமையான ஓக் மரம் தன் வேரைத் துண்டித்துக்கொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து சென்றது போலிருந்தது அந்த நிகழ்ச்சி’ என்று எழுதுகிறார். ஊரின் அழகு அதன் விஸ்தாரணத்திலோ, வளத்திலோ இல்லை. மாறாக, அதோடு நாம் கொள்ளும் உறவில்தான் இருக்கிறது. ஒவ்வொரு ஊரும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பதிவேட்டைக் கொண்டு இருக்கிறது. அதில் எண்ணிக்கையற்ற நிகழ்ச்சிகள் பதிவாகின்றன. பிறந்தவர் எத்தனை, செத்தவர் எத்தனை, வாழ்ந்து உயர்ந்தவர் யார், வாழ்ந்து கெட்டவர் யார்… இப்படி எத்தனை ஆயிரம் கணக்குகள்! ஊரின் விசித்திரம் அதன் வெளிப்படுத்தப்பட முடியாத மௌனம்தான். கரும்புகை சுழல்வது போல நிசப்தம் ஒவ்வொரு ஊரையும் சுற்றிப் படர்ந்திருக்கிறது.</p> <p>மண் திமிறுகிறது என்று விவசாயிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மைதான். நிலம் சதா புரண்டுகொண்டேதான் இருக்கிறது. மண் நம் காலடியில் கிடக்கிறது என்பதற்காக, அற்பமானது என்பதுபோலப் புரிந்துகொண்டு இருக்கிறோம். உண்மையில் மண் ஒரு விசை. மண் ஒரு உயிர்ப் போராட்டம். மண்ணின் குணம் மிக விநோதமானது!</p> <p>ஒரு கொய்யாப்பழத்தைத் தின்னும்போது, அதன் ருசியாக இருப்பது அந்த மண்வாகுதான். கிராமத்துப் பெண்கள் கத்திரிக்காயை எந்த ஊர்க் காய் என்று கேட்டுதான் வாங்குவார்கள். மண்வாகு காய்கறிகளுக்கு காரலையோ, கசப்பையோ கொண்டு வருகின்றன. இளநீரின் ருசி அது விளையும் மண்ணைத் தான் சார்ந்திருக்கிறது! கொய்யாப்பழமாக, இளநீராக, அரிசியாக, கீரைகளாக மண் தன் ருசியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்றுவரை மண்ணை நாம் புரிந்துகொள்ளவே இல்லை.</p> <p>மண்ணின் கருணைதான் மனிதர்களை வாழ வைக்கிறது. காய்கறிகளுக்கே இப்படி ருசியும், சத்தும் மண் தருகிறதென்றால், இந்தக் காய்கறிகளையும், கீரைகளையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து அந்த மண்ணில் புரண்டு திரியும் மனிதனை எத்தனை உரமேற்றியிருக்கும்! </p> <p>ஊர் ஒவ்வொருவர் உடல் மீதும் கண்ணுக்குத் தெரியாத சில முத்திரைகளைக் குத்தி அனுப்பிவிடுகிறது. அந்த மண் கவிச்சிதான் நம் பேச்சில், சாப் பாட்டில், பழக்கவழக்கத்தில், உடை களில், உறவில் வெளிப்படுகிறது. <br /></p> <p>பழைய டெல்லியில் சுற்றித் திரிந்துகொண்டு இருந்தபோது, ஓட்டல் நடத்தும் ஒரு தமிழ்க் குடும்பம் பரிச்சயமானது. அவர்களிடம் பேச்சுவாக்கில் டெல்லி பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். அவர்கள் பிழைப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது என்றார்கள். ஊருக்கு வரும் யோசனை இருக்கிறதா என்று கேட்டதும் ஓட்டல் நடத்தும் நபரின் மனைவி, ‘அங்கே என்ன இருக்கு, வருவதற்கு? எங்களுக்கு எல்லாமே இனி இந்த ஊர்தான்’ என்றாள். நான் வேண்டுமென்றே ‘இந்த ஊரில் உங்களை வெளியாள் என்றுதானே சொல்கிறார்கள்?’ என்று கேட்டேன். அந்தப் பெண், குரல் உடைந்து போனவளாக, ‘எங்களோட ஒரு வயசுக் குழந்தை குளிர்காய்ச்சல் வந்து செத்துப் போய் இந்த ஊர்லதான் புதைச் சிருக்கோம். டெல்லி மண்ணுல என் பிள்ளையோட எலும்பும் கலந்திருக்கு. எங்களை வெளியாள்னு சொல்றதுக்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது சார்! நாங்க இந்த ஊர்தான்!’ என்றாள். <br />அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. பிறப்பு மட்டுமல்ல, சாவும்தானே ஊரோடு உள்ள பந்தம்! </p> <p>ஊரைப் பிரிந்து செல் வதைப் பற்றிய கதைகளில் மிக அபூர்வமானதும் உயர் வானதும் வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதை. வண்ணநிலவனின் நுட்பமான விவரிப்பும் மொழியும், துக்கத்தை வெளிப்படுத்தும் பாங்கும் இக்கதையை என்றும் உயிர் வாழும் சாஸ்வதமான கதையாக மாற்றியிருக்கின்றன. எஸ்தரை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று கணக்கிட்டுச் சொல்லவே முடியாது. வண்ணநிலவன் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளை இன்னொரு பரிமாணத்துக்கு உயர்த்தியவை. அவர் எதையும் உரத்துச் சொல்பவரில்லை. ஆனால், அவரது கதைகள் ஏற்படுத் தும் வலியும் துக்கமும் ஒரு வடுவைப் போல நீண்ட நாட்கள் நம்மோடு கூடவே இருக்கக் கூடியவை. </p> <p>வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் பெரும் பாலும் பெண்கள். அவர்கள் சூழலால் அலைக்கழிக்கப் படுபவர்கள். ஆனாலும், தங்களின் தைரியத்தாலும், எளிய அன்பினாலும்தான் உலகம் இயங்குகிறது என்னும் உண்மையை வெளிப்படுத்துபவர்கள். </p> <p>‘எஸ்தர்’, மழையற்றுப் போய் பஞ்சம் பீடித்த ஒரு ஊரின் கதையைச் சொல்கிறது. ‘முடிவாக பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாகியது’ என்று தொடங்கும் இக்கதை… ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் வாழ்க்கைப் பாடுகளை விவரிக்கிறது. </p> <p>மரியதாஸ் என்பவரின் பிள்ளைகள் அகஸ்டினும் டேவிட்டும். இருவரது மனைவியர் பெயரும் அமலம். ஆகவே, ஒருத்தி யைப் பெரிய அமலம் என்றும், மற்றவளை சின்ன அமலம் என்றும் அழைக்கிறார்கள். அவர்களுடன், வயதான பாட்டி ஒருத்தி கூரையைப் பார்த்தபடி தனது அந்திம நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாள். </p> <p>இந்த வீட்டை நிர்வகிப்பது எஸ்தர் சித்தி. புருஷனோடு வாழப் பிடிக்காமல் பல வருட காலத்துக்கு முன்பு, அந்த வீட்டுக்கு வந்து தங்கிவிட்டவள். வீட்டின் சகலபாடுகளையும் கவனித்துக் கொண்டு, வீட்டை தன் கைக்கூட்டுக்குள் பொத்தி காப்பாற்றி வருகிறாள். வீடே சித்திக்காக இயங்கியது. வேலைக்காரர்கள்கூட சித்திக்காகத்தான் வேலை செய்தார்கள். எஸ்தர் சித்தி மிக அன்பானவள். யாரையும் ஒரு சொல் திட்டாதவள். </p> <p>வீட்டு வேலைகளை அவளைப்போல் அக்கறையாக யாரும் செய்ய முடியாது. <br />பஞ்சகாலத்தில், வீட்டில் உணவு தட்டுப்பாடாகியது. மனிதர்களை விடவும், ஆடு மாடுகளின் தீவனத்துக்காக அதிகம் அலைந்து திரிய வேண்டி இருந்தது. வீட்டில் ஒரேயரு தீப்பெட்டிதான் இருந்தது. ஆகையால் தீக்குச்சிகளைக்கூட எஸ்தர் சித்தி பாதுகாத்து வைத் திருக்கிறாள். பீடி புகைக்கும் டேவிட், ஒரு தீக்குச்சியை ரகசியமாக எடுத்து உரசும்போது, அதன் சத்தம் கேட்டு வந்து பார்க்கும் சித்தியின் கண்களில் படிந்துள்ள வேதனை, டேவிட்டை மிகவும் துக்கப்படுத்துகிறது. பஞ்சம், வீட்டு மனிதர் களின் சுபாவத்தை முற்றிலும் ஒடுக்கிவிடுகிறது. யாவரும் மனக்கலக்கம் கொண்டவர்களாக நடந்துகொள்கிறார்கள். </p> <p>பஞ்சம் பீடித்த ஊரில் ஆட்கள் காலி செய்து போய்விடவே, தெரு<a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S3rMjPou8RI/AAAAAAAAFpo/yBfrJK7M8Kc/s1600-h/sraa%5B7%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="sraa" alt="sraa" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S3rMkMLtWrI/AAAAAAAAFps/nM0SOZ1PiaQ/sraa_thumb%5B5%5D.jpg?imgmax=800" align="right" border="0" width="209" height="280" /></a>வில் ஆள்நடமாட்டம் குறைந்து போய், ஊரெங்கும் அழிவற்ற இருட்டு பெருகியது. பேச்சரவம் ஓய்ந்து போய், ஊறிய இருட்டு ஊரெங்கும் பயத்தைப் பெருக்கியது. அதோடு இருட்டு சதா எதையோ முணுமுணுத்துக்கொண்டு இருப்பது போலிருந்தது. <br />எஸ்தர் சித்தி இருட்டின் குரலைக் கேட்டுக் கொண்டு இருந்தாள். ‘நீயும் உனக்குப் பிரியமானவர் களும் இங்கிருந்து போவதைத் தவிர, வேறு வழி என்ன? மழை பெய்வதற்காகக் காத்திருந்து மடிவீர்களா?’ என்று இருட்டு, எஸ்தர் சித்தியிடம் கேட்டது. வீட்டில் நிலைகுத்திப்போன கண்களுடன் பாட்டி கூரையைப் பார்த்தபடி இருந்தாள். அப்படி என்னதான் பார்க்கிறாள் என்று எஸ்தருக்குப் புரியவே இல்லை. ஊரைவிட்டுச் செல்லும்போது பாட்டியை என்ன செய்வது என்று அவளுக்கு யோசனையாகவே இருந்தது. </p> <p>மதுரைக்குச் சென்று கொத்து வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று அந்தக் குடும்பம் முடிவு செய்கிறது. அன்றிரவு சித்தி எழுந்து பாட்டியின் அருகில் போய்ப் படுத்துக்கொள்கிறாள். மறுநாள் காலை பாட்டி இறந்துபோயிருப்பது தெரிய வருகிறது. மலிவு விலையில் வாங்கிய ஒரு சவப்பெட்டி யில் வைத்து பாட்டியைக் கல்லறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டு, ஊரைவிட்டு விலகிப் போகிறார்கள். அதன்பிறகு, நெடு நாட்களுக்கு எஸ்தர் சித்திக்கு மட்டும் கூரை பார்த்தபடியிருந்த பாட்டியின் ஈரமான கண்கள் நினைவுக்கு வந்தபடி இருந்தன என்பதோடு கதை முடிகிறது. </p> <p>எஸ்தர் சித்தி பாட்டியைக் கருணைக் கொலை செய்து விட்டாளா… இல்லையா என்று தெரியாதபடி கதை ஓர் இடைவெளியை விட்டுச் செல்கிறது. ஊரின் மீதுள்ள வேர் பிடிப்பும், மழையற்றுப் போன பஞ்ச காலமும் மனிதர்களை வாட்டி எடுக்கும் சோகமும் கதையெங்கும் நீக்கமற நிரம்பியிருக்கிறது. வண்ணநிலவன் அடங்கிய குரலில், கவித்துவமும் நுட்பமான சித்திரிப் போடும் இக்கதையை எழுதியிருக்கிறார். <br />தினமும் ஆயிரம் பறவைகள் பறந்தபோதும், வானில் எந்தப் பறவையின் சுவடும் இருப்பதே இல்லை. மண் அப்படி இல்லை. அதில், நம் வாழ்வின் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன. மண்ணின் பாடல் முடிவற்ற ஒரு சங்கீதமாக எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதை நின்று கேட்டுப் போவதற்கோ, புரிந்து கொள்வதற்கோ நாம் தயாராகவும் இல்லை… விரும்பவும் இல்லை! </p> <p>வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் தமிழ் இலக்கியத்தின் அரிய சாதனையாளர்களில் ஒருவர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். </p> <p>1948&ல் பிறந்த வண்ண நிலவன், துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றி உள்ளார். இவரது Ôகடல்புரத்தில்Õ நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்றுள்ளது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள். </p> <p>சிறந்த நாவலுக்காக தமிழக அரசின் பரிசை வென்றது இவரது ”கம்பா நதி” நாவல். இவரது ”ரெயினீஸ் ஐயர் தெரு” தமிழ் நாவல்களில் மிகவும் தனித்துவமானது. திரைப்படத் துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக, ”அவள் அப்படித்தான்” படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் வண்ணநிலவன்.</p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-58304223233042271352010-05-15T12:15:00.001+05:302010-05-15T12:15:47.145+05:30அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் - ஜெயமோகன்<blockquote> <p><b><br /></b></p> </blockquote> <p>சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை.அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில் காலத்தில் உறைந்து நின்று விட்ட துளியையே நாம் காண்கிறோம். ஆனால் நுட்பமாக பார்க்கும்போது அத்துளியின் தொடர்ந்த மாறுதலை நாம் காண முடியும். தங்கு தடையற்ற மகத்தான பிரவாகம் இப்படி ஓர் துளியின் நிலை மாறுதலாக அசோகமித்திரனில் வெளிப்படுகிறது. </p> <p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S6C3_cd1kmI/AAAAAAAAF5M/BI7AtyNZtcg/s1600-h/90akc7%5B8%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="90akc7" alt="90akc7" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S6C4AXyX8lI/AAAAAAAAF5Q/LlnwYPNFvuc/90akc7_thumb%5B6%5D.jpg?imgmax=800" align="left" border="0" width="387" height="295" /></a> அவருடைய அத்தனை சிறுகதைகளுக்குமே 'மாறுதல் ' என்று அர்த்தப்பூர்வமாக பெயர் சூட்டி விடலாம். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கலைவடிவங்கள் அவருடைய மொழி உத்திகள் அனைத்துமே வாழ்க்கை பற்றிய அவருடைய இந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் தன்மைஉடையனவாக அமைந்துவிட்டிருக்கின்றன. நுண்மைக்குள் பொறிக்கப்பட்ட விரிவு என அவர் கதைகளை சுருக்கமாக குறிப்பிடலாம். அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தேர்ச்சி அவருக்கு நிறையவே உண்டு. தமிழில் அசோகமித்திரனின் சிறப்பிடம் இந்ததுளித்தன்மை மூலம் அவர் உண்டுபண்ணிய அழகியல் கூறுகளினாலேயே உருவாகியுள்ளது. அவ்ரால் விரிவின் முழுமையை சித்தரிக்க இயலாது. அவருடைய நாவல்களே இதற்குச் சான்று. </p> <p>பெருமளவு சிவராம காரந்தின் யதார்த்தவாத உலகாதய நோக்குகள் கொண்டவராக இருப்பினும் கூட அசோகமித்திரனால் 'மண்ணும் மனிதனும் ' போன்ற ஒரு படைப்பை உண்டு பண்ண முடியாது போன்மைக்கு காரணம் இதுவே ஆகும். இலக்கியத்தில் எது ஒருவரது பலமோ அதுவே பலவீனமும் ஆகும் விந்தை அனேகமாக மாற்றமில்லாதது ஆகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல.</p> <p><b>'</b><b>சாதாரணத்</b><b> '</b><b>துவத்தின்</b><b> </b><b>கலை</b><b>.</b></p> <p>ஐம்பதுகளில் எழுத ஆரம்பித்த ஐ. தியாகராஜன் அசோகமித்திரன் என்ற இன்றைய முகம் பெற்றதற்கு முன்புள்ள சலனங்களை கற்பனை செய்து பார்ப்பது சுவையானதாக இருக்கும். தியாகராஜன். எப்பேற்பட்ட பெயர்!. எளிய, நடுத்தர வர்க்கமுகமொன்றை நினைவிற்கு கொண்டு வருகிறதும், எந்த பட்டியலிலும் சர்வ சாதாரணமாக கரைந்து போகிறதுமான ஒரு பெயர். அந்த வயதில் 'எழுத்து ' போன்ற இதழ்களில் 'மஞ்சள் கயிறு ' போன்ற கதைகளை எழுதியபோது அவருக்கு தன் பெயரின் சர்வ சாதாரணத்தன்மை மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம். புஜகீர்த்தியும், கிரீரமும், சரிகைகளும் குஞ்சலங்களும் நினைவிற்கு வரக்கூடிய அசோகமித்திரன் என்ற பெயரை அவர் தனக்கென தேர்வு செய்வதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்பெயரேகூட தங்கு தடையற்ற எளிமையின் ஜ்வலிப்பையும் கூர்மையையும் நம் நினைவிற்கு கொண்டுவருமளவு அவருடைய ஆளுமை அதில் ஏறிவிட்டிருக்கிறது. </p> <p>எந்த கும்பலிலும் அடையாளமின்றி தங்களை கரைத்துக்கொள்ளக்கூடியவர்கள் அவருடைய கதாபத்திரங்கள். 'வெறும் ' ஜனங்கள். யதார்த்தவாத இலக்கியத்தின் உதயத்துடன் உலகமெங்கும் இலக்கியப் படைப்புக்களில் வெறும் ஜனங்களின் முகங்கள் தென்பட ஆரம்பித்தன. ஆனால் அவற்றின் தன்மைகலில் அடிப்படையான மாறுதல்கள் உண்டு. தன் எளிமையை சரித்திரத்தின் முன் பிரகடனம் செய்வதற்காக கந்தலுடன் மேடையேறி வருபவன் தல்ஸ்தோயின் குடியானவன். ஏதோ தேவதையின் கரம் பட்டு எழுந்து மகத்தான மானுட தரிசனங்களின் விவாத அரங்காக மாறி ஜ்வலிக்கும் மனம் கொண்டவன் தஸ்தாயெவஸ்கியின் குற்றவாளி- எனவேதான் அது யதார்த்த வகைக்குள் அடங்காததாகவும் அவர்கள் சாமானியர்களாக இல்லாமலும் தோன்றுகிறார்கள் போலும். </p> <p>தீர்க்கதரிசிக்கு இணையான மனிதாபிமானத்துடனும், இரக்கத்துடனும் மேலிருந்து பார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்டவன் சேகவ்வின் தொழிலாளி. புதுமைப்பித்தனின் கணக்குப்பிள்ளையின் சர்வசாதாரணத்தன்மை எபோதுமே இரண்டு முறை அடிக்கோடு போடப்பட்டு அசாதாரணமாக்கப்படுகிறது. ஜெயகாந்தனின் சாமானிய ஜனங்களுக்கு கருத்துப்பிரதிபலிப்புச் சுமை உண்டு. தமிழில் முதல்முறையாக சர்வசாதாரணமாக கறிகாய் கடைக்கு மஞ்சள்பையுடன் போகும் விதத்தில் சாமானிய முகங்கள் படைப்பில் வந்தது அசோகமித்திரனின் கதைகளில் தான். அவன் எதற்கும் குறியீடு அல்ல. அனுதாபத்துக்கு உரியவனோ, பிரியத்துக்கு உரியவனோ அல்ல.</p> <p> எந்த இலட்சியத்துக்கும் வடிவம் அல்ல. ஆசிரியரில் அவனைப்பற்றி நெகிழ்வுகள் ஏதும் எங்கும் செயல்படுவது இல்லை. அவருடைய பழுத்த யதார்த்தவாதம் அவனை மிக நாசுக்காக கும்பலில் இருந்து சற்று முன்னகர்த்திக் காட்டுகிறது. தன் வரிசையெண்ணை சொல்லி வணங்கிவிட்டு அவன் மீண்டும் முகங்களின் கடலுக்குள் சென்று விடுகிறான். அவனுடைய ஒரு கணம் சரித்திரம் முழுக்க நிரம்பியிருப்பதும், சரித்திரத்தை படைத்து அழித்து சரித்திரமே ஆகி நிற்பதுமான, ஜனங்களின் முகமாக ஆகிறது. ஒரு துளி, அந்தத் துளியில்தான் அலைகளையும் கொந்தளிப்பையும் பிரவாகத்தையும் நாம் காண்கிறோம்.</p> <p>தன் படைப்புகளில் எப்போதுமே அசோகமித்திரன் சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். சர்வ சாதாரணமான சம்பவங்கள்தாம் - அனேகமாக அபூர்வமாக உத்வேகம் மிகுந்த சம்பவங்கள் நிகழும்போது கூட தன் சித்தரிப்பின் கச்சிதமான தொழில்நுட்பம் மூலம் அதை சாதாரண சம்பவங்களின் தளத்தில் சரியாக பொருந்த வைத்து விடுகிறார். மொத்தத்தில் அவர் படைப்புலகமே சாதாரணத்தன்மையை தன்னுடைய தனித்தன்மையாக கொண்டுள்ளது. அவருடைய படைபூலகில் எதுவுமே விசேஷமானதல்ல. ஒரு படைப்பாளி என்ற முறையில் வெகுஜனம் என்ற முகமின்மையின் உள்ளேயிருந்து அதன் குரலாகவே பேசுகிறார். மொத்தமாக அசோகமித்திரனின் கலையையே 'சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு ' என்று கூட நாம் வகைப்படுத்திவிட முடியும்.</p> <p><b>நடை</b><b>, </b><b>பாணியின்</b><b> </b><b>ஊற்றுக்கண்கள்</b></p> <p>அசோகமித்திரனின் படைப்புலகின் மிக முக்கியமான தனித்தன்மையாக விளங்குவது அவருடைய நடை. அனேகமாக தமிழின் முதல் 'சாதாரணமான ' நடை என்றுகூட அதை கூறிவிடலாம். அவரைப் படிக்க ஆரம்பிக்கும் பெரும்பாலான வாசகர்கள் இந்த எளிமையால் ஏமாற்றமடைவது வழக்கம். தமிழில் ஆரம்பத்தில் இந்த நடை கவனிக்கப்படவில்லை. பிற்பாடு அதை தவிர்க்க இயலாது என்ற நிலை உருவாகியபோது அது பற்றிய விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. அசோகமித்திரனில் என்ன இருக்கிறது என்று நிறையபேர் கேட்டிருக்கிறார்கள். தங்களை முக்கியமான வாசகர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் கூடக் கேட்டிருகிறார்கள். இன்றும் கூட கேட்கப்படுகிறது. அசோகமித்திரனின் மொழிநடையை வகப்படுத்டுவது ஒரு வகையில் அவருடைய எழுத்தையும் அவருடைய தரிசன நிலைபாடுகளையும் வகைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கு நிகர்தான்.</p> <p>அசோகமித்திரனின் மொழிநடைக்கு இந்திய மரபிலும் சரி, தமிழ் மரபிலும் சரி, வேர்கள் இல்லை என்று பொதுவாக கூறலாம். பழங்குடித்தன்மை பெருமளவு உள்ள தமிழ் உரைவடிவத்தில் ஒருவிதமான வெளிப்பாடமைதி பொதுவாக உள்ளது. இதை நாம் வசதிக்காக 'சொலவடைகள் ' எனலாம். இவற்றை தவிர்த்து நமது உரை வடிவில் எதையும் தீர்க்கமாக கூறுவது இயலாது. நவீன உரைநடை - வாய் மொழியை பின்பற்றுவது- மேற்குறிப்பிட்ட சொலவடைகளின் அடிப்படை அமைப்பைப் பின்பற்றி நவீன சொலவடைகளை உருவாக்கிக்கொண்டே பேசமுடிகிறது. உதாரணமாக சுந்தர ராமசாமியின் மொழிநடை. மிக நவீனமாக கருதப்படும் இந்நடை உண்மையில் நாட்டார் உரைமரபின் - நாகர்கோவில் வட்டார வழக்கின் - கொச்சை தவிர்த்து நவீனமாக மாற்றப்பட்ட மறுவடிவமேயாகும் - 'ஒரு புளிய மரத்தின் கதை 'யின் மொழி நடையில் இதை தெளிவாகக் காணமுடியும். 'ஜே. ஜே. சில குறிப்புகளி 'ல் புழங்கும் மேலும் சிக்கலான மொழி நடை கூட இதன் அடுத்த பரிணாமமேயாகும்.</p> <p>இந்திய மரபில் இரண்டாவது நடைவடிவம் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் பண்டித நடை. இதை(Elite Style) நாம் கருத்து நடை அல்லது அறிவுலகின் மொழிநடை எனலாம். இது பெரும்பாலும் தர்க்கங்களினால் கோர்க்கப்பட்டு உருவாவது. படைப்புக்கு நிச்சயம் உதவாதது. உதாரணமாக இந்த கட்டுரையின் மொழிநடையிலேயே அதைக்காணலாம். நவீன உரைநடை வடிவங்களை எடுத்துப் பார்த்தால் கூட இதன் இரு முகங்களைக் காணமுடியும். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று முதலில் குறிப்பிட்ட ஒரு போக்கு சி. வை. தாமோதரம்பிள்ளை, மறைமலை அடிகளார் முதல் மு. வ வரையிலான இரண்டாம் போக்கு.</p> <p>அசோகமித்திரன் மொழிநடையில் இவ்விரண்டின் பின்புலப்பாதிப்பும் இல்லை. அலாதியாக, துண்டாக அது தமிழ்ச் சூழலில் நிற்கிறது. எனவேதான் வினோதமாக பார்க்கப்படுகிறது, வியக்கப் படுகிறது. அத்துடன் பலசமயம் புறக்கணிக்கவும் படுகிறது. நம்மைஅறியாமலேயே அத்துடன் ஒரு விலகல் உருவாகிறது, குறிப்பாக கிராமப் பின்புலம் உடைய வாசகர்களுக்கு. இத்தனை எளிமையான மொழிநடை பலரால் படிக்கமுடியாததாக கூட கருதப்ப்டுகிறது. வெட்டி எடுத்து ஒப்பிடும்போது வித்தியாசம் பளீரென்று தெரிகிறது.</p> <p>அசோகமித்திரனின் நடையின் வேர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய உலகைப்பாதித்த எழுத்தாளர்களின் மொழிநடையில் தெளிவாக இனம் காணுமளவு தெரிகிறது. 'தாமஸ் மன் 'னின் மெல்லிய புன்னகையுடன் கூடிய, இயல்புத்தன்மை மாறாத நடையில் ாசோகமித்திரனிடம் நாம் காணும் பல அம்சங்களை காணமுடிகிறது. உத்தி மற்றும் சொற்றொடர் அமைப்புக்களில் நேரடியான பாதிப்பை அசோகமித்திரனில் செலுத்தியவர் என்று 'ஹெமிங்வே ' யைக் குறிப்பிடலாம். பொதுவாக அமெரிக்க எழுத்தின் பாதிப்புதான் அவரில் நிறைய உள்ளது என்று கூறலாம். அதே சமயம் ஹெமிங்வேயின் வாழ்க்கைக்கண்ணோட்டத்திற்கும் அசோகமித்திரனுக்கும் நிறைய இடைவெளி உண்டு. அதிலுள்ள வன்முறை, தாக்கும் வேகம் ஆகியவை இதில் இல்லை. அசோகமித்திரனின் சாமானியனில் முக்கியகுணமாக கோழைத்தனமும், செயலின்மையும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆயினும் சிறு வட்டத்திற்குள் நுட்பமும் கவனமும் என்ற தன்மை இருவருக்கும் பொதுவாக உள்ளது.</p> <p>ஒருவகையில் அந்தரத்தில் நிற்பதாயினும் அசோகமித்திரனின் நடை அவருடைய கதையுலகிற்கு மிகச்சரியாகப் பொருந்திவிடுகிறது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டும். நவீன அமெரிக்க எழுத்தில் வேர் உள்ள மொழிநடை இந்திய, தமிழ்நாட்டு சாமானிய வாழ்வின் சித்தரிப்புக்கு ஏன் இந்த அளவு பொருத்தமாக உள்ளது ? அசோகமித்திரன் காட்டும் உலகம் நம்முடைய கைத்தொடும் தூரத்தில் புழங்குவதாயினும் அவருடைய கோணம் எவ்வகையிலும் இந்ஹ்திய வேர்கள் உடையது அல்ல. இன்று கிட்டத்தட்ட இந்திய புனைகதையுலகில் பாதிப்பங்கை ஆட்சி செய்யும் இந்தக் கோணத்டிற்கும் ஐரோப்பிய ஜனநாயக மறுமலர்ச்சிகாலத்திற்கும் ஆழமான தொடர்பு உண்டு. முதன் முதலாக சாமானியனை மையம் கொண்ட கோணம் அங்கு உருவாகியது. இன்னும் கூறப்போனால் பிரஞ்சுப் புரட்சியும் அக்காலகட்டத்து உணர்வுகளுமே இதற்குப் பிறப்புக்காரணம் எனலாம். இந்தக் கோணத்தின் வளர்ச்சி ஜனநாயக முறைமைகளாகவும், சாமானியனை நோக்கிச் செயல்படும், நலம் நாடும் அரசுகளாகவும் (Welfare States) வளர்ந்து முற்றிய பிறகு உருவான இலக்கியப் போக்குகளிலிருந்து உத்வேகம் கொண்டவர் அசோகமித்திரன். </p> <p>மிக இயல்பாகவே அவரில் ரஷ்ய இலக்கிய மேதைகளின் அதிக பாதிப்பு இல்லாமலிருப்பதையும் நாம் காணலாம். உணர்ச்சியற்ற தனிமனிதப் பார்வை எனும் கோணம், சாமானியனிஒன் தனிப்பிரக்ஞையை மையமாக்கி எதையும் விவாதிக்கும் மனோபாவம் ஆகியவை மேற்குறிப்பிட்ட ரஷ்ய இலக்கியமேதைகளின் வாழ்க்கைப்பார்வைக்கு அன்னியமானவை. தஸ்தாயெவ்ஸ்கி, தல்ஸ்தோய் முதலியவர்களின் சமூகக் கூட்டுப்பார்வை மட்டுமல்ல, சேகவ்வின் எளிய பிரகாசம் மிகுந்த மனிதாபிமானம் கூட அசோகமித்திரனின் படைப்புக்களில் இல்லை. சாமானியர்களைப் பற்றி நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் இந்த கலைஞனை நாம் மிகவும் தயங்கியே ஒரு 'மனிதாபிமானி ' என்று கூற முடிகிறது.</p> <p>அசோகமித்திரனின் தார்மீக உணர்வு பெருமளவு மேற்கத்திய தன்மை உடையது. தனிமனித அறச்சார்பு என்ற அந்த மையம்தான், மேற்கத்திய லிபரல் ஜனநாயக முறைமைகளுக்கு அடித்தளம். அது, அசோகமித்திரனின் உலகின் தார்மீக அடிப்படையை தீர்மாணிக்கிறது. சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவில் ஒரு வேளை பெரிதும் அன்னியமாக பட்டிருக்கக்கூடிய இம்மையம் இன்று மிகவும் முக்கியத்துவம் பெறக்கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. மேற்கத்திய ஜனநாயக முறைமைகள் மற்றும் தனிமனித மனோபாவங்களை அடியொற்றி வெகு வேகமாக தன்னை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் இந்தியச் சூழலில் அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பது இயல்பானதாகும். அதே சமயம் பழங்குடித்தன்மை கொண்ட இந்திய மரபின் தொடர்ச்சிக்கு அசோகமித்திரனின் இத்தன்மை அன்னியமாக இருப்பதும் இயல்புதான்.</p> <p><b>யதார்த்த</b><b> - </b><b>நிதர்சன</b><b> </b><b>வாதத்தின்</b><b> </b><b>வெற்றிகளும்</b><b> </b><b>எல்லைகளும்</b></p> <p>அசோகமித்திரனை யதார்த்தவாதி என்று வகைப்படுத்துவது எளிதாகச் செய்யப்பட்டு வரும் செயல். உண்மையும் கூட. நடுத்தர வர்க்க லெளகீகவாதியின் விவேகத்தால் எப்போதும் கட்டுப்படுத்தப்படும் படைப்புலகம் அவருடையது. அவருடைய நோக்கை பழைய பாணியில் வரையறுக்கமுயல்வது என்றால் அவருடைய படைப்பு நோக்கின் அடிப்படை கருத்து முதல்வாதமா இல்லை பொருள்முதல்வாத்மா என்ற கேள்வியை கேட்கலாம். அசோகமித்திரனை கருத்துமுதல்வாதி என்று கொள்ள இயலாது என்பது வெளிப்படை. கருத்து முதல்வாதத்தின் இரு முக்கிய ஓட்டங்களுடனும் அவருக்கு இயைபு இல்லை. மாபெரும் பிரவாகத்தின் காரணத்தை புனிதமான ஒரு புள்ளியில் குவிக்கும் கடவுள்வாதம் அவரிடம் இல்லை. அவருடைய படைப்புலகில் எங்குமே கடவுள் தென்படுவது இல்லை. பிரவாகத்தின் சலனங்களை தொகுத்து, அதற்கு திசையை நிறுவி, அத்திசையின் முனையில் லட்சியப்புள்ளிகளை நிறுவும் ஹெகல் பாணி மேற்கத்திய கருத்துமுதல்வாதமும் அவரிடம் இல்லை. </p> <p>அவருடைய படைப்புகளில் அசோகமித்திரன் வாழ்வின் பிரவாகத்தை வெறுமே பார்க்கிறார். சலனம் வழியாக அது எந்த விதமான நோக்கத்தையும் நிறைவேற்றுவதை நாம் அங்கு காணமுடிவதில்லை. அது ஒரு முதலிறுதி இருப்பின் இலக்குகளை நிறைவேற்றவில்லை. அதன் சலனங்களுக்கு ஒட்டுமொத்தமான தருக்கமும் தெரிவதில்லை. இந்த பார்த்தல் ஒரு அத்வைதிக்கு உரியதான விலகல் சார்ந்தது அல்ல. கா. நா. சுவின் 'பார்த்தலில் ' செயல்களை மீறிய பிரவாகம் இது என்ற பிரக்ஞைதரும் விச்ராந்தி உள்ளது. இந்த 'வெறும் பார்வை 'யே பொய்த்தேவுவில் சாத்தியமாகியுள்ளது. அசோகமித்திரன் மாயாவாதி அல்ல. நிதரிசன வாதி. அல்லலுறுபவர். கோபப்படுபவர். நெகிழ்பவர். அத்தனை மன எதிrவினைகளுடனும் வெறுமே பார்த்தபடி இருப்பவர். விமரிசனக்குரல் அவர் படைப்புகளில் உள்ளடங்கியதாக விரக்தி தோணிப்பதாக எதிர்மறையானதாகவே உள்ளது பெரும்பாலும். </p> <p>இந்தக் கோணத்திற்குக் காரணம் பிரவாக சலனத்தின் தருக்கம் முற்றிலும் பிடிபடாததாக இருக்கிறது என்பதேயாகும். முழுமையான யதார்த்தவாதி நடைமுறை வாழ்வு சார்ந்த தருக்கத்துடன் வாழ்வை அளக்க முயலும்போது ஏற்படும் பிரமிப்பு இது. இது அவரை எங்கும் இட்டுச்செல்ல இயலாது. அதே சமயம் முற்றிலும் பவுதிகவாதம் சார்ந்ஹ்த கோணத்தின் அதீத எல்லையான வெறுமையையும் அசோகமித்திரன் அடைவது இல்லை. தற்செயல்களின் தொடர்நிகழ்வான பிரவாகம் என வாழ்க்கையை பார்த்தார் என்றால் மாபெரும் அபத்தமாக ஒவ்வொன்றும் ஆகக்கூடிய - கடவுள் தரிசனத்திற்கு இணையான - அபத்த தரிசனம் அவருக்கு வாய்த்திருக்கும். அசோகமித்திரனின் லெளகீக வாதம் எப்போதுமே அதற்கு ஒரு படி முன்னதாகவே நின்று விடுகிறது. பலவிதங்களில் அவருடைய கதையுலகை கம்யூ, சார்த்ரின் உலகுகளோடு ஒப்பிடலாம். சார்த்தரின் - மதில் - (The Wall) கம்யூவின் 'விருந்தாளி ' - அசோகமித்திரனின் 'காத்திருத்தல் ' ஆகிய கதைகளை பரஸ்பரம் ஒப்பிட்டு பார்க்கலாம். நம்பி கோஷமிட்டு செயற்பட்ட ஒரு அரசியல் கோணத்தின் வீழ்ச்சியும் அதனால் உருவாகும் தனிமையும், துரத்தப்பட்டு தாக்கப்படும் நிலையும் ' காத்திருத்தலின் ' கதைப்பாத்திரத்தை திரும்பிப் பார்க்கவைக்கின்றன. தனது வெறியையும் நம்பிக்கை உத்வேகத்தையும் துணுக்குற வைக்கும் அளவுக்கு அர்த்தமற்றதாக அவன் பார்க்கிறான். </p> <p>சார்த்தரின் கதையில் மையகதாபாத்திரம் முற்றிலும் அவனை மீறிய தற்செயல் நிகழ்வுகளினால் துரோகியாக ஆக்கப்படுகிறது. கம்யூவின் கதையில் உருவாக்கிக் காட்டுகிறது. அசோகமித்திரனின் கதையில் அர்த்தமின்மை ஒரு எல்லை வரை வந்து நின்று விடுகிறது. மத்தியதரக் குடிமகனாகிய தனக்கு இந்த போராட்டங்களும் நம்பிக்கைகளும் உண்மைஒயில் எதற்க்காக என்று அம் மையக்கதாபாத்திரம் நினைக்கலாம். அடிப்பவன் - அடி பட்பவன் இருவருமே மத்திய வர்க்கத்தினர். காரணமோ அவர்களுக்கு எவ்வகையிலும் சம்பந்தமற்றது. முற்றிலும் அவர்களை மீறிய வேறு எவருடையவோ இச்சைகளுக்காக சம்பந்தமில்லாத நாடகம் ஒன்றில் நடிக்கும்படி ஆகியிருக்கிறார்கள் - இவ்வளவுதான். அசோகமித்திரனின் உலகில் கதாபாத்திரங்களின் இந்த மனநிலையானது மீண்டும் மீண்டும் தென்படுகிறது. 'பதினெட்டாவது அட்சக்கோட்டில் ' ரசாக்கர்களுக்கு எதிராக போராடும்படி தூண்டி மாணவர்ககளுக்கு கைவளையல் தந்து கிண்டல் செய்யும் மாணவிகளைப் பார்த்தபடி சந்திரசேகரன் நினைப்பது ஒர் உதாரணம்.</p> <p>அசோகமித்திரனின் எக்கதாபாத்திரமும் அர்த்தமின்மையின் எல்லைக்குச் செல்வதில்லை. 'இன்னும் சில நாட்களி 'ன் சாம்பசிவமாக இருப்பினும் கூட, செயலின் அந்த தளத்தின் உள்ளீடற்ற தன்மை ஒரு ஓசையுடன் வெடித்துத் திறப்பது மட்டுமே அவர் கதைகலில் தெரிகிறது. அவை காட்டும் உருவம் நிதரிசனங்களில் மட்டுமே நம்பிக்கை உள்ள யதார்த்தவாதியினுடையது. இது ஒரு குறைபாடோ பிழையோ அல்ல, ஒரு தன்மை மட்டுமே ஆகும். இப்பார்வைக்கு எல்லைகள் நிறைய. பிரவாகத்தை அசோகமித்திரன் பார்ப்பதில்லை, துளிகளைத்தான் என்று கூறுவது இதனால்தான். அவருடைய கதைகளை எந்த பிரமாண்டத்திலும் கச்சிதமாக பொருத்தலாம். ஆனால் அவை பிரம்மாண்டத்தின் சிறு மாதிரிகள் அல்ல. அவை வாழ்வை தனித்த துண்டுகளாக எடுத்து அவற்றில், அவற்றின் அசைவில், வாழ்வின் முழுஓட்டத்தையும் பார்ப்பதுபோல. இதனால் தான் அவர் சிறுகதையில் வெற்றிகரமாக செயல்படமுடிகிறது.அவருடைய குறிப்பிடத்தக்க சில கதைகளை உலகத்தளத்துக்கு இணையானவையாக நிச்சயம் கூறமுடியும்.</p> <p>துளிக்குள் சலனமாக பிரவாகத்தை பார்க்கும் முயற்சியினால் அசோகமித்திரன் தரும் வாழ்க்கைச்சித்திரம் 'ஓட்டம் ' அல்ல. 'சுழலும் ' அல்ல. அதற்கு திசையே இல்லை. அது மிக நெருங்கி அமர்ந்து, நதியின் நீரோட்டத்தை பார்க்கும் புழுஒன்றின் பார்வைபோல. அதிக பட்சம் பார்க்க முடிந்த ஒரு துளியில் அது காணும் நதி என்பது நீரின் அசைவு மட்டுமேயாகும். எனவேதான் அசோகமித்திரனின் கதைகளின் பொதுவான சித்திரம் 'மாறுதல் ' என்பது மட்டுமாக உள்ளது.</p> <p>அவருடைய முக்கியமான அத்தனை கதைகளிலும் நுணுக்கமான - மிக நுணுக்கமான - ஒரு மாறுதலின் கணம் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளது. எல்லையா கார் கற்றுக் கொளவது ஓர் உதாரணம். போலீஸ்காரர் கையை உயர்த்த எப்படியோ எல்லையாவிற்கு கிளட்சின் சூட்சுமம் தெரிந்துவிடுகிற ஒரு கணமே அக்கதை. அதற்கு முன் எல்லையா வாரங்கலில் மாடு மேய்ப்பவன். அதற்குப் பிறகு பெருநகரில் உழலும் ஒரு தொழிலாளி. இம்மாறுதலின் முன்னும் பின்னும் எவ்வளவோ உள்ளன. நமது சமகால இந்தியாவின் மாபெரும் சமூக மாற்றத்தையே நாம் இதன் பிண்னணியாக நிறுத்திக்கொண்டு இதை பார்க்க முடியும். இம்மாற்றத்தை ஒரு பெரிய நாவலின் கருவாகக்கூட மாற்ற முடியும். அசோகமித்திரனின் உலகில் அது ஒரு கணம்தான். அதுவும் இக்கணத்தை எப்போதுமே மிக மெளனமாகவும் கண்ணுக்குத் தெரியாததாகவுமே அமைக்கிறார் அசோகமித்திரன். 'விமோசனத்தி 'ல் அடிக்கக் கையோங்கிய கணவனின் கரம் அந்தரத்தில் நின்றிவிடும் கணம். சந்திரசேகரனின் முன் அகதிப்பெண் நிர்வாணம் காட்டும் கணம் - இப்படியே கூறியபடிச் செல்லலாம். இக்கணங்களில் அவரது மொழி தேய்ந்து மவுனத்திற்குப் போவதும், கண்ணுக்குத் தெரியாத் அவருடைய தொழில்நுட்பத்திறமை அதி சூட்சுமமாகச் செயல்படுவதும், மொழியும் உத்தியும் கூடி முயங்கி உச்சமெய்துவதுமே அவருடைய படைப்புலகின் முக்கியமான தருணங்கல். எம்மொழியிலும் அவை போன்ற தருணங்கள் அபூர்வமானவையாகவே மதிக்கப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.</p> <p>மாறுதல்களை சித்தரிப்பதுடன் நின்று விடுகிறார் அசோகமித்திரன். அவற்றை குறியீட்டுத்தன்மை நோக்கி நகர்த்தி விடுவது இல்லை. முன்பு குறிப்பிட்டதுபோல அவர் எந்த சித்தாந்த தளத்தையும் ஏற்காத ஒரு யதார்த்த வாதியென்பதே இதற்குக் காரணம். பவுதீக வாதத்தின் எல்லையில் அபத்ததையோ, லட்சியவாதத்தையோ அவர் அடைவது இல்லை. அவரால் கருத்து முதல்வாத அம்சத்தை ஏற்க முடியாது போனமையால்தான் மார்க்ஸீயத்தை ஏற்க முடியவில்லை. மார்க்ஸீயத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹெகலிய லட்சியவாதம் அவருக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றே அவர் படைப்புக்கள் காட்டுகின்றன.எவ்வகை சித்தாந்த அடிப்படையுமற்று காரணமற்ற நிகழ்வுகளை பதிவுசெய்யும் கோணமானது உலர்ந்த கரிய ஹாஸ்யம் எதிர்மறைத்தன்மையும் உடையதாக உள்ளது. அவருடைய கதைகளின் விரக்தி மற்றும் நிராகரிப்பின் எதிர்வினையாகவே அவர் படைப்புலகுக்கு உள்ளேயே பிரகாசமான ஒரு தளம் அபோதமாக உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். உற்சாகம், கபடின்மை, சுதந்திரம் ஆகியவை நிரம்பிய அவரது பாலிய கால அனுபவங்களை கூறுவது போன்ற கதைகள் தாம் அவை. அவருடைய பொஅடைப்புலகின் இருளுக்கும் அழுத்தத்திற்கும் எதிரான சமன் தான் இது. எந்த பெரிய ப்டைப்பாளியிலும் இப்படி கறுப்பு - வெள்ளை என்று இருவிதமான பரஸ்பரம் சமன் செய்யும் இரு கூறுகளைக் காண முடியும். இரண்டுக்கும் மையம் ஒன்றுதான். ஒரு தளத்தில் நேரடியாகவும், மறுதளத்தில் தப்பித்து இளமைக்குத் திரும்பும் கனவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எதிர்மறையான மனோபாவத்தை தற்போதைய இந்தியாவின் நகர்சார்ந்த சாமானியனின் பொதுவான கோணமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம்.</p> <p>பொதுவாக அசோகமித்திரனை தமிழில் விரிவான பாதிப்புகளை ஏற்படுத்டிய எழுத்தாளர் என்று கூறலாம். இளம் கலைஞர்களின் நடையில் அசோகமித்திரனின் பாதிப்பு என்பது சகஜமாக காணப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. திலீப்குமார், விமலாதித்த மாமல்லன், கோபி கிருஷ்ணன் என அவருடைய பாதிப்புள்ள நடை உடைய படைப்பாளிகளின் நீண்ட பட்டியலையே போட முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் பெரு நகரப் பிண்னணியுடைய வாசகர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி, அசோகமித்திரனை எளிதாக ஏற்று அதன் நேரடியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதும்; பிற வாசகர், படைப்பாளிகளில் அவருடைய நடை மீதான மன எதிர்ப்பு ஆரம்பத்திலேயே உருவாகிவிடுகிறது என்பதும்தான். இவ்வெதிர்ப்பு பிற்பாடு பல விதங்களில் மாறுதல்கள் அடைந்து , அவர்களின் தனித்தன்மைகளின் சில அம்சங்களை தூண்டி, சில புது ஆளுமைகளை உண்டு பண்ணக் காரணமாக அமைகிறது. உதாரணமாக வண்ணதாசன். அவரது உலகம் அசோகமித்திரனுக்கும் பொதுவானதே. ஆனால் அவரது மொழியில் அசோகமித்திரனின் நேரடித்தன்மையும், இறுக்கமும், உள்ளார்ந்த அமைதியும் இல்லை. இத்தன்மையும் சரி, காட்சி மற்றும் கதாபாத்திரங்கள் மீது வண்ணதாசன் கொள்ளும் நெகிழ்ச்சியும் சரி, அசோகமித்திரன் மீதான எதிர்வினையாகும். வண்ணதாசனின் கதை கூறும் முறையில் உள்ள 'வக்கணை ', மிகவும் அசலான ஒரு கிராமத்துப் பார்வை சார்ந்தது. ஒரு விதமான சமையலறைத் திண்ணை சார்ந்த வக்கணை அது. காட்சிகளை அதீதமாக பிரகாசப்படுத்தும் போக்கு கூட இந்தப் பின் திண்ணையிலிருந்து வந்ததேயாகும். இதுவே வண்ணதாசன் கதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தை பெண்மை கனிவு போன்றவை அடங்கியதும், உத்வேகம் ஆழம் இவற்றை இவற்றை விடவும் அதி நுட்பங்களில் கவனம் செலுத்துவதுமான பரிணாமத்தை - உண்டு பண்ணி வண்ணதாசனின் தமிழிலக்கிய இடத்தை உறுதி செய்கிறது. இத்தகைய எதிர்வினையை வண்ணநிலவன், சுப்பிரபாரதி மணியன், அஸ்வகோஷ், பாவண்ணன் ஆகியோரிடம் பல நிலைகளில் காண முடிகிறது. கணிசமான அளவு பெருநகர் சார்ந்த படைப்பாளிகள் இத்தகைய எதிர்வினை அம்சம் இல்லாமல் அசோகமித்திரனின் குட்டி பிம்பங்களாகத் தெரியும் காட்சியை நாம் கணையாழி, விருட்சம் முதலிய சிற்றிதழ்களில் வரும் நிறைய கதைகளில் காண முடியும்.</p> <p>இத்தகவல்களை முன்வைத்து ஆராயும் போது அசோகமித்திரனின் படைப்புலகின் வேறு சில தனித்தன்மைகள் தெரிய வருகின்றன. அது ப்ரும்பாலும் இந்திய பெரு நகர் மனோபாவம் சார்ந்தது. அசோகமித்திரனின் சாமானியன் திரளான ஒற்றை வடிவம் கொண்டவனும், கிராமங்களில் நிறைந்து வாழ்பவனுமாகிய அசல் இந்திய சாமானியனின் பிரதிநிதி அல்ல. அவன் நகரத்தில், உபரி மதிப்பின் பங்கு பெற்று அதிகார அமைப்பின் நேரடியான சுரண்டலுக்கும் பாதுகாப்பிற்கும் ஆட்பட்டு, வாழும் சாமானியன். அவனை இயக்கும் தார்மீக அடிப்படைகளுக்கு மேற்கத்திய ஜனநாயக முறைமைகளின் அடிப்படையான தனிநபர் தன்மை கொண்ட உலகப்பார்வையின் பாதிப்புபெருமளவில் உண்டு. பழங்குடித்தன்மை கொண்ட மரபுகளினால் கட்டுப்படுத்தப் படும் கிராமத்துத் தார்மீக அடிப்படைகளுக்கு இத்துடன் பெரிய வேறுபாடு உண்டு, இந்த சாமானியரில் ஒருவரால் தீட்டப்பட்ட சுய வர்க்கச் சித்திரமே அசோகமித்திரனின் படைப்புலகம்.அதன் தத்துவ அடிப்படைகளை நாம், இவ்வடிப்படைகளிலேயே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அசோகமித்திரனின் படைப்புகளின் பெரும்பாலான வாசல்களை திறக்க உதவக்கூடிய பாதையே இதுவேயாகும்.</p> <p>**********</p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-14950195632173686952010-05-15T12:12:00.000+05:302010-05-15T12:13:33.838+05:30தனிமையின் உபாக்கியானம் - ஞானக்கூத்தன்<p>1974ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு புத்தகக் காட்சி நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் ஏதோ நிகழ்ச்சி. கொண்டாட்டம். அதை ஒட்டித்தான் புத்தகங்கள் விற்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு வாக்கில் பல இளைய படைப்பாளிகள் நவீன இலக்கியத் தொடர்பாக அறியப்பட்டிருந்தனர். பல இளைய படைப்பாளிகள் கல்லூரிக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்றுப் பயன் அடைந்தவர்கள்தாம் என்றாலும் <a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S7p5LCkMuLI/AAAAAAAAF_g/JRzHXuPnqZA/s1600-h/nagulanbyviswamithran36.jpg"><img style="border-width: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="nagulan-by-viswamithran-3" alt="nagulan-by-viswamithran-3" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S7p5LylyIOI/AAAAAAAAF_k/qZ1_IHHLxQk/nagulanbyviswamithran3_thumb4.jpg?imgmax=800" align="left" border="0" width="240" height="316" /></a> தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை கல்லூரிப் பதவிகள் அவ்வளவாக அவர்களிடம் மதிப்புப் பெற்றதில்லை. பழைய தமிழ் இலக்கியக் கல்வியே இலக்கிய மதிப்பைத் தரவல்லது எனவும் நவீன இலக்கியம் தேவை அற்ற ஒன்று எனவும் ஒரு கருத்து கல்லூரிகளில் 70களில் நிலவிவந்தது. கவிதையில் குமரகுருபர ஸ்வாமிகள் செய்யாத புரட்சியில்லை என ஒரு பேராசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரேதான் பின்னாளில் பாரதியாரின் பாடல்களுக்கு முறையான தொகுப்பை வெளியிட்டவர். பல்கலைக்கழக-கல்லூரித் தமிழாசிரியர்களுக்கு வெறுப்பூட்டும் ஒரு முயற்சியாக நவீன இலக்கியம் தோற்றம் தர, தமிழ்த் துறையை முற்றிலும் புறக்கணிக்கத் தகுந்த ஒரு துறையாக இளைய படைப்பாளிகள் எண்ணிக்கொண்டிருந்த சூழலில்தான் 1974இல் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தகக் காட்சியும் விற்பனையும் நடைபெற்றன. அங்கே விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்களில் நானும் ஒருவன். மற்ற நண்பர்களில் கசடதபற ஆசிரியர் ந. கிருஷ்ணமூர்த்தியும் க்ரியா ராமகிருஷ்ணனும் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக ராமகிருஷ்ணன் ஒரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்துப் பார்வையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தது என் நினைவில் உள்ளது. அன்று நகுலனை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 'யாருக்கும்' என்றால் பொதுவான வாசகர்களுக்குத் தெரியாது. மற்றும் மு.வ., அகிலன் முதலான எழுத்தாளர்களின் அபிமானிகளுக்குத் தெரியாது. இலக்கிய உலகில் சிலருக்குத் தெரியும். ஆனால் பிடிக்காது.</p> <p>நகுலன் என்றால் புரியாத கதைகளையும் புரியாத கவிதைகளையும் எழுதுகிறவர் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர். மதுரையில் 1980களில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் இக்கருத்தை என்னிடம் கூறி, அப்படி எழுதினால்தான் இலக்கியமாகுமா என்று கேட்டார். இலக்கிய வட்டம் மற்றும் எழுத்து பத்திரிகைகளில் அவர் வித்தியாசமான கவிதைகளை வெளியிட்டிருக்கிறார். ஆனால், நகுலன் எந்த ஒரு பத்திரிகையிலும் வாசகர்களின் கவனத்தைப் பெற முடிந்ததில்லை. இலக்கிய வட்டத்தில் அவர் கவிதைகளை வெளியிட்டதாகத்தான் நினைவு. ஆனால் உறுதியாகக் கூற முடியவில்லை. தன் வாழ்நாளில் பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு படைப்பாளியாக நகுலன் இருந்ததில்லை. அதை அவர் அறிவார். ஆனால், அதற்காகக் கவலைப்பட்டதே இல்லை. இந்த நிலைமையைச் சரி செய்ய அவர் சில வழிகளை மேற்கொண்டார். அவை வெறுமனே வாய்பேசாத சில நண்பர்களைக் கொடுத்ததுதான் மிச்சம்.</p> <p>1970களின் தொடக்கம் மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் இலக்கிய வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தின் தொடக்கமாகவும் அமைந்திருந்தது. மூத்த தலைமுறையினரில் ந. பிச்சமூர்த்தியும் க.நா. சுப்ரமணியமும் சி.சு. செல்லப்பாவும் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு நிமிர்ச்சி உண்டென்று கண்டுபிடித்தனர். புதுக்கவிதையின் முன்னோடி தான்தான் என்று 1976இல் ந. பிச்சமூர்த்தியால் சொல்லிக்கொள்ள முடிந்தது. விமரிசனத்தையும் புதுக்கவிதையையும் ஸ்தாபித்த பெருமை தங்களுக்கு உண்டென்பதை க.நா. சுப்ரமணியமும் சி.சு. செல்லப்பாவும் அறிந்திருந்தனர். ஆனால், இதற்குரிய கௌரவத்தை அவர்கள் அடைந்தார்களா? 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் இதற்குப் பதில் அமைகிறது. இலக்கிய வெளியை இவர்களே உருவாக்கினர். அதற்கு முன்பு அப்படி ஒரு வெளி கிடையாது. இவர்களைத் தங்களின் முன்னோடிகளாக இனம் காணத் தொடங்கிய ஒரு தலைமுறை இவர்களுக்கு அடுத்து வந்ததே இவர்கள் பெற்ற கௌரவமாகக் குறிப்பிடவேண்டும். ஆனால் வேறு இடத்தில் இவர்கள் அறியப்படாதவர்களாகவே இருந்தனர். ந. பிச்சமூர்த்தியை ந. பிச்சமுத்து என்றே சிலர் குறிப்பிட்டதை நான் அறிவேன். பாரதிதாசன் வாழ்ந்த வீட்டில் வைத்திருக்கும் போட்டோ ஒன்றில் ந. பிச்சமூர்த்தி பாரதிதாசனோடும் மற்ற சில கவிஞர்களோடும் இருக்கிறார். ஆனால், அவர் பெயர் ந. பிச்சமுத்து என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.</p> <p>1930களிலிருந்தே தொடர்ந்து இலக்கியப் படைப்பாளிகளாக அறியப்பட்டிருந்த பலரைத் தேசியம் அல்லாத அரசியல் இயக்கங்கள் மறைக்கும் மனப்பான்மையை மேற்கொண்டதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு. மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூத்தி இவர்கள் இலக்கியம் படைத்து முன்னோடிகளாகிவிட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு பேனா பிடித்தவர்கள்தாம் முன்னோடிகளென்று சிலர் சொல்ல முற்பட்டனர். சிறுகதை, நாவல், கவிதை, விமரிசனக் கட்டுரை என்ற ஒவ்வொரு வடிவத்துக்கும் புதிய தந்தைமார்களைத் தேடும் முயற்சிகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டன. திராவிட இயக்கத்தின் எதேச்சாதிகார மனப்போக்குகளுக்கு <a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S7p6sgMuT5I/AAAAAAAAF_o/5eqLkwugr94/s1600-h/gnanakoothan3%5B6%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="gnanakoothan3" alt="gnanakoothan3" src="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S7p6tjAjIwI/AAAAAAAAF_s/ABr_3gYnazI/gnanakoothan3_thumb%5B6%5D.jpg?imgmax=800" align="left" border="0" width="240" height="180" /></a> மாறாகச் சுதந்திரமான இலக்கியப் போக்கு எதுவும் வளர்வதை இயக்க அனுதாபிகள் விரும்பியதில்லை. 'தமிழ் இலக்கியத்தின் பரந்துபட்ட ஜனநாயகப் போக்கு, தம் இலக்கிய மேலாண்மையை நிறுவ முயன்ற இலக்கிய சட்டாம்பிள்ளைகளுக்கு உவப்பானதாக இல்லை. சிறுபத்திரிகைகள் என்ற பண்பாட்டு வடிவத்தின் தோற்றம் இதன் வெளிப்பாடே. திராவிட இயக்க இலக்கிய முறைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. தமக்குச் சாதகமான வகையில் இலக்கியத் தன்மை, கலை நுட்பம், அழகியல் முதலானவை வரையறுக்கப் பட்டன. 'மணிக்கொடி' 'மௌனி' என்று மாயைகளும் புனைவுகளும் உருவாக்கப்பட்டன'* என்று ஒரு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். புதுக் கவிஞர்களில் இருநூறு சொற்களுக்கு மேல் பயன்படுத்திய கவிஞர்கள் உண்டா என்று அக்கட்டுரையாளரே ஒரு கேள்வியையும் எழுப்பி உதவியிருக்கிறார். புதுக்கவிஞர்களில் ந.பி., சி. மணி, க.நா.சு. போன்றவர்களின் புலமையை இக்கட்டுரையாளர் கண்டுகொள்ளவில்லை. இங்கே நகுலன் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதைக் கட்டுரையாளரின் கூற்று மறைத்துவிடுகிறது.</p> <p>நகுலன் வெளியிடத் தொடங்கியபோது மணிக்கொடியின் காலம் முடிந்துவிட்டது. மணிக்கொடிக் காலம் எனவும் இன்னின்னார் மணிக்கொடியில் எழுதிய எழுத் தாளர்கள் எனவும் பேசப்பட்ட காலம் தொடங்கிவிட்டது. க.நா.சு. மணிக்கொடி எழுத்தாளர் அல்லர் என சி.சு. செல்லப்பா சொல்லத் தவறியதில்லை. ஆனால், க.நா.சு. மணிக்கொடியில் வெளியிட்டவர் தான். மணிக்கொடியை சிறுகதைப் பத்திரிகையாக நடத்திய பி.எஸ். ராமையாவே முதலில் க.நா.சுவை மணிக்கொடி எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். பின்னர் 'மணிக்கொடி காலம்' என்ற தொடர்கட்டுரை எழுதத் தொடங்கிய பிறகு க.நா.சு.வும் மணிக்கொடி எழுத்தாளர்தான் என்பதைக் கண்டுபிடித்தார். க.நா.சு.வை மணிக்கொடி எழுத்தாளர் இல்லை என்று சொல்லிவந்த சி.சு. செல்லப்பா, க.நா.சு. மணிக்கொடி எழுத்தாளர் என்ற முத்திரை குத்துவதற்குத் தகுதி யானவர் இல்லையென்று குறிப்பிடத் தொடங்கினார். ஆக, வெவ்வேறு விதமான அங்கீகாரத்துக்கு வெவ்வேறு விதமான அளவுகோல் வைத்து யாரையாவது கதவுக்கு வெளியே நிறுத்திவிடும் வழக்கம் எல்லாத் துறைகளிலும் இருந்துவந்தது. மணிக்கொடியின் பங்கை எடுத்துக்காட்டி அதில் வெளியிட்ட புதுமைப்பித்தன், மௌனி மற்றும் கு.ப.ரா. இவர்களை வாசகர் மனதில் நிலை நாட்டிய க.நா.சுவின் பணியே அதிகார மையங்களால் புறக்கணிக்கப்பட்டதென்றால் நகுலன் எம்மாத்திரம்? மணிக்கொடி எழுத்தாளர், எழுத்துவின் எழுத்தாளர் என்ற முத்திரை எல்லாம் நகுலனுக்குக் கிடையாது. நகுலன் தனியானவர். அந்தத் தனிமை அவருக்குப் பிறப்பிலிருந்தே வாய்த்த ஒரு குணாம்சம் போலும்.</p> <p>நகுலனின் கவிதைகள் சில என்னைக் கவர்ந்திருந்தாலும் அவரது கவிதைகள் எல்லாமும் படிக்கக் கிடைக்கவில்லை. அவரிடம் அவரது கவிதைகளைக் குறித்துப் பேசியது கிடையாது. ஆனால் அவற்றைப் பற்றி என் கருத்து உயர்வானதுதான் என்று அவருக்குத் தெரியும். என்னைப் பார்க்க நகுலன் கசடதப<a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/S7p6uEoAuzI/AAAAAAAAF_w/HeCnQ4jsCts/s1600-h/nagu%5B5%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="nagu" alt="nagu" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S7p6u_wXTgI/AAAAAAAAF_0/JrqRsRpguic/nagu_thumb%5B3%5D.jpg?imgmax=800" align="right" border="0" width="257" height="339" /></a>ற ஆசிரியர் ந. கிருஷ்ணமூர்த்தியுடன் வந்திருந்தார். நான் ஜெரார்ட்மான்லி ஹாப்கின்ஸ் என்பவருடைய கவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். நகுலன் நான் ஹாப்கின் ஸைப் படித்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். அவரது குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. பேசியதைவிட அதிகமாகச் சிரித்தார். பல சந்தர்ப்பங்களில் அவர் சிரிப்புக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது. சிரிக்காமலும் பேசுவார். அப்படிப் பேசும்போது அவருடைய முகபாவம் படு சீரியஸாக இருக்கும். தனக்குப் பிடிக்காத கருத்தை மறுப்பதற்குத் தயங்குவார். தன்னைவிட மற்றவர்கள் புத்திசாலியாக இருக்கக்கூடும் என்றே நம்புவார். அதிக நேரம் பேச நேர்ந்தால் சுந்தர ராமசாமியைப் பற்றியும் கிருஷ்ணன் நம்பியைப் பற்றியும் இரண்டு முறையாவது குறிப்பிடுவார். சுந்தர ராமசாமியை மறுப்பதுபோல் பேச்சைத் தொடங்கி இறுதியில் சுந்தர ராமசாமி பெரிய படைப்பாளிக்குரிய லட்சணங்கள் உள்ளவர் என்று முடிப்பார்.</p> <p>நகுலனுக்கு ஷண்முக சுப்பையாதான் பிடித்த கவிஞர். நகுலனைச் சந்திக்கும் முன்பே நான் ஷண்முக சுப்பையாவைச் சந்தித்தேன் என்று நினைக்கிறேன். நகுலனின் நட்பு, க.நா.சுவின் விமரிசன ஆதரவு இரண்டும் ஷண்முக சுப்பையாவைத் தன்னம்பிக்கை உடையவராக ஆக்கியிருந்தன. ஆனால் அவரது கவிதைகளில் எனக்குச் சிறிதளவும் ஈடுபாடு ஏற்படவில்லை. இதை நகுலன் அறிவார். அவருக்கு என்மீது வருத்தம். ஆனால், நகுலனும் க.நா.சுவும் குமாரன் ஆசான் பரிசுக்கு ஷண்முக சுப்பையாவைப் பரிந்துரை செய்ததுண்டு. சுப்பையாவுக்குக் கிடைத்ததோ இல்லையோ தெரியாது. பிற்பாடு சுந்தர ராமசாமியும் சி. மணியும் இந்தப் பரிசைப் பெற்றார்கள். நகுலன் இந்தப் பரிசைப் பெற்றிருந்தார். நகுலனை அவர் வீட்டில் சந்தித்தபோது ஆசான் விருதைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டார். என்ன காரணமோ தெரியவில்லை, தனக்குக் கொடுக்கப்பட்ட ஆசான் பரிசுதான் அசலானது என்று சொல்லிச் சத்தமில்லாமல் சிரித்தார்.</p> <p>நகுலனை எனக்குத் தெரிய வந்தபோது அவர் 50 வயதைக் கடந்திருந்தார். இலக்கிய உலகில் தன் நிலைமை என்ன என்று அவர் அக்கறை காட்டத்தொடங்கினார். என்று நம்புகிறேன். தனக்கு வாசகர்கள் உண்டா என்று ஆராயத் தொடங்கினார். நான், ஆத்மா நாம், ஆர். ராஜகோபாலன், எஸ். வைத்யநாதன், ஆனந்த், தேவதச்சன் பிறகு அழகியசிங்கர் போன்றோர் அவரிடம் அக்கறை உள்ளவர்கள் என்பதை அவர் தெரிந்துகொண்டது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், என்னை நீக்கி மற்றவர்களை இணைத்து ஒரு வட்டத்தை அவர் கற்பித்துக்கொள்ளத் தொடங்கினார். சென்னைக்கு வந்தால் மற்ற யாருக்காவது விவரம் தெரிவிப்பார். தனக்குப் பிடித்த கவிஞர்களில், இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுவார். தன் கவிதையின் செல்வாக்கு மற்றவர் கவிதையில் இருப்பதாகக் காணும் படைப்பாளியின் வழக்கத்துக்கு மாறாக மற்றவர் கவிதைகளின் சாயல் தனது கவிதையில் இருப்பதாகக் கூறிக்கொண்டார். இப்படிக் கூறியதால் சம்பந்தப்பட்ட கவிஞர்களை மகிழ்விக்க முயன்றார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், நகுலன் கவிதையில் யாருடைய சாயலும் கிடையாது என்பதுதான் உண்மை. நகுலன் அப்படிக் கூறியது தனக்கு நெருக்கமான வாசகர்களை உருவாக்கிக்கொள்ளத்தான். இதை நான் தவறாகக் குறிப்பிட விரும்பவில்லை. நகுலன் வாய் திறந்து சொல்லாததை உரத்துச் சொன்னவர்கள் உண்டு.</p> <p>நகுலனுக்குக் கவலை இருந்தது. அந்தக் கவலை தனது படைப்புகள் காலத்தை வெல்லுமா என்பது பற்றி அல்ல. அவை வாசகன் மனதில் எப்படிப்பட்ட சலனத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அறியத்தான் அவர் விரும்பினார். நன்றாகப் படித்து விமரிசித்துச் சொல்லப்படும் கருத்துகளைவிட எடுத்த எடுப்பிலேயே என்ன சொல்லப்படுகிறதோ அதைத்தான் அவர் விரும்பிக்கேட்டார். ஒரு கதை, கவிதை அனுப்பினால் அது கிடைக்கப் பெற்றதும் அவருக்குப் பதில் எழுதிவிட வேண்டும். அது பிடித்திருந்ததா இல்லையா என்பதை யும் தெரிவித்துவிட வேண்டும். ஒரு நாள் தாமதத்தைக் கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவரே சில சமயம் தன்முகவரியிட்ட அஞ்சல் அட்டையை அனுப்பிவிடுவார் அல்லது அவர் படைப்பு கிடைத்த மறுநாளே ஓர் அஞ்சல் அட்டை வந்துவிடும். அவருடைய கடிதத் தொடர்பின் கீழே அவர் மனதின் தீவிரமான ஜுரம் வெளிப்படும். ஆனால் நேரில் அது குறித்துப் பேச மாட்டார். அவருடைய புத்தகம் ஒன்றை 'ழ' சார்பில் வெளியிட்டோ ம். அதில் ஒரு பிரதிகூட விற்கவில்லை. அதுகுறித்து அவருக்கு வருத்தம். புத்தகம் விற்கவில்லை என்ற தகவலைச் சொல்லவில்லை என்பதற்காக வருத்தம். தனது சொந்தச் செலவிலேயே நகுலன் தனது புத்தகங்களை வெளியிட்டார். எனக்குத் தெரிந்து அவரது கோட்ஸ்டாண்ட் கவிதைகள் பல பிரதிகள்விற்றன. அதற்கு நான் முன்னுரை எழுதியது ஒரு காரணமல்ல. அவருக்குப் புத்தகங்கள் வெளியிடுவதில் ஊக்கம் குறையத் தொடங்கியது. 'இடைக்காலத்தில் என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பலவித அனுபவங்களால் நான் மேலும் மேலும் தனிமையில் ஈடுபட வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது' என்று நகுலன் எழுதியிருக்கிறார். சதா சர்வ காலமும் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் ஒரு மனிதனாக/சிந்தனையாளனாகத் தன்னை அவர் தன் மனதில் வடிக்கத் தொடங்கினார் என்று நம்புகிறேன். 'எனக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற இன்றும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஓய்வுப் பெற்ற பிறகு என் சொந்தச் செலவில் புஸ்தகங்களைப் பிரசுரிக்க முடியுமா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அந்த நிலையில் இந்த இலக்கியச் சூதாட்டத்தில் என் கடைசிப் பைசாவையும் வைத்து விளையாட முற்பட்ட துணிவே இந்த 'ஐந்து', என ஐந்து கவிதைத் தொகுப்பில் நகுலன் எழுதியிருக்கிறார். உட்கார்ந்த இடத்திலேயே உடைமைகள் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும் சூதாட்டத்தோடு புத்தக வெளியீட்டை நகுலன் ஒப்பிட்டிருப்பது கவனிக்கத் தகுந்தது. தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல ஒரு படைப் பாளியைத் தள்ளிவிட, வாசகர் கவனத்துக்கு வராமல் செய்துவிட வெளியீட்டு அரசியல் பெரிதும் உதவுகிறது. 'அவருக்குத் தரமுடியாதே. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது புத்தகம் ஒன்றும் வரவில்லையே' என்று சொல்லிவிடலாம்! 'அவர் காணாமல் போய்விட்டார்' என்று சொல்லலாம். சொல்லியிருக்கிறார்கள். அரசியல் முதலாளித்துவம்போலவே பத்திரிகை முதலாளித்துவம் கொடுமையானது என்பதை உணர்ந்தவர்கள்தாம் சிறு பத்திரிகை என்ற சிந்தனையைக் கண்ணீர்விட்டு வளர்த்தவர்கள். நகுலன் சொன்ன சூதாட்டத்தில் தோற்றுப்போனவர்கள் ஏராளம். வென்றவர்கள் இல்லை. பத்திரிகை முதலாளித்துவத்தை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களைக்கூடத் தூற்றியவர்கள் உண்டு. நகுலன் தான் தோற்றுக்கொண்டு வரும் ஓர் எழுத்தாளன் என்று 1970இல் நினைக்கத் தொடங்கினார் என்று நம்புகிறேன்.</p> <p>நகுலன் தன் தோல்வி உணர்வுக்கு ஒருவகையில் தனது தனிமைதான் காரணம் என்று நம்பினார். அவர் உணர்ந்த தனிமைப் பல நிறங்களை உடையது. சில சமயம் அது முதன்மையினால் நிகழ்வது. சில சமயம் பிரதி ஏகத்தன்மையால் நிகழ்வது. இந்நிறங்களும் வேறு நிறங்களின் சாயையைப் பெறுவதுண்டு.</p> <p>'இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான <br />கட்டத்தில் நான் இருக்கிறேன். பெரிய <br />அண்ணா ஒரு மாதிரி என்றால், உடன் <br />பிறந்தவன் அவனினும் வேறு என்றால் <br />அவனும் சில அடிப்படைகளில் அவனைப் <br />போலத்தான். இவர்களில் கடைசியானவன் <br />நான். இவ்வளவு பெரிய இராஜ்ஜியத்தில் <br />நான் தனிப்பட்டவனாக இருந்திருக்கிறேன்.'</p> <p>'வீடணன் தனிமொழி' என்ற கவிதையில் விபீஷணன் சொல்வதாக நகுலன் எழுதியிருக்கிறார். இந்தப் பகுதியின் நடையைத் தற்காலத் தன்மை உடையதாக அமைத்திருக்கிறார். விபீஷணன் இராவணனைப் 'பெரிய அண்ணா' என்று குறிப்பிடும்போது இராவண-விபீஷணர்கள் ஒரு குடும்பத்தினர் என்பதை நமது மறதியிலிருந்து அது வெளிக் கொண்டுவருகிறது. 'ஒரு கும்பல் அடிப்படையில் ஒரு கொள்கை உருவாகிறது என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை' என்ற விபீஷணனின் கூற்று காலத்தைக் கடந்து நீந்துகிறது.</p> <p>நகுலன் தன்னைத் தோற்றுப்போன கலைஞனாக உருவகித்துக்கொண்டது கலைஞர்களில் அப்படியும் ஒரு வகை உண்டென்று அவர் கருதியதால்தான். வடக்கு அல்லது வடகிழக்கு இந்தியாவில் எங்கோ ஓர் அரங்கத்தில் அவர் படித்த கவிதை வரவேற்பைப் பெறவில்லை. இந்தச் செய்தியை அவர் என்னிடம் சொன்னபோது அதில் எந்த வருத்தமும் தொனிக்கவில்லை. 'நான் ஒரு ஃபெயில்ட் ஆர்ட்டிஸ்ட்' என்று அவரே ஒருமுறை சொல்லிக்கொண்டபோதும் அதைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து எந்த அனுதாபத்தையும் அவர் எதிர்பார்க்கவில்லை.</p> <p>அவர் அப்படிச் சொன்ன கூட்டத்தில் நான் இருந்தேன். திருவனந்தபுரத்தில் நடந்த தென்னிந்திய கவிசம்மேளனத்தில்தான் அவர் அப்படிச் சொன்னார். நிகழ்ச்சிக்கு முதல் நாள் நகுலனை அவர் வீட்டில் சந்திக்கப் போயிருந்தேன். 1980களில் ஒருமுறை அவருடைய வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஓட்டலில் தங்காமல் அவரைத் தவிர வேறு யாரும் இல்லாத அவர் வீட்டு வராந்தாவில் தங்கினேன். இரவு நீண்ட நேரம் பேசிவிட்டுப் பின் தூங்கப் போனார். இந்த முறை நான் சந்திக்கப் போயிருந்தபோது அவர் பெரிதும் மாறிவிட்டிருந்தார். எழுத்தாளர்களைப் பற்றி வம்புதும்பு பேசும் இயல்பு நகுலனுக்கு உண்டு. அது அப்படியே இருந்தாலும் இடையிடையே நீண்ட நேரம் மௌனமாகிவிட்டார். என்னை அவர் உடனே தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான்தான் மாறிவிட்டேனா அல்லது அவர் கண்டுகொள்ளாமல் இருக்க முயல்கிறாரா என்று தெரியவில்லை. அவருக்கு என்மீது மனஸ்தாபம் ஏற் படும்படி யாரோ ஏதோ சொல்லிவிட்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால், சிறிது நேரத்தில் சகஜமாகிவிட்டார். மறுநாள் நிகழ்ச்சிக்கு அவர் வந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன். அப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பதை அவர் நினைவில் கொள்ளவேயில்லை. மறுநாள் அவரே நிகழ்ச்சிக்கு வந்தார்.</p> <p>அந்த அமர்வுக்கு நான்தான் தலைவர். நகுலனைச் சம்பிரதாயமாக அறிமுகம்செய்து அவரைப் பேச அழைத்தேன். நகுலன் என்னைப் பார்த்துக் கேட்டார் தமிழில்: 'இவள்ளாம் யார்? ஏன் வந்திருக்கா?' அரங்கில் இருந்தவர்களைப் பார்ந்து 'இவாள்ளாம் யார்' என்று அவர் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அரங்கு அமைதியாக இருந்தது - இந்த வயதில் இது இயல்பு என்பது போல. நான் அவருக்கு விளக்கிச் சொன்னேன். 'நான் தமிழில்தான் பேசுவேன். தலைவர் என்ற முறை யில் நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என்றார் நகுலன். நான் இசைந்தேன். அது தென்னிந்தியக் கவிஞர்களின் அரங்கு என்பதால் ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நடந்தது. நகுலன் தமிழிலேயே பேச விரும்புவதால் அவர் தமிழில் பேசி ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிப்பார் என்று நான் அறிவித்தேன். அவர் தமிழிலேயே பேசட்டும் என்று அரங்கில் பலர் சொன்னார்கள். ஒலிபெருக்கிக்கு முன் வந்து நின்ற நகுலன், 'ஐ ஆம் எ ஃபெயில்ட் ஆர்ட்டிஸ்ட்' என்று ஆங்கிலத்தில் சொன்னார். அரங்கம் அதை ஒரு தமாஷாக எடுத்துக்கொண்டதுபோல் சிரிப்பில் ஆழ்ந்தது. அரங்கில் இருந்த தென்னிந்தியப் படைப்பாளிகள் பலரும் தோற்றுப் போய்விட்டதாக நம்பப்படும் படைப்பாளிகளே சிறந்தவர்களாக இருப்பார்கள் என்ற கருத்துடையவர்களாகத் தெரிந்தனர். இப்படிப்பட்ட கருத்துடையவர்களை வேறு அரங்கிலும் நான் பார்த்திருக்கிறேன். திருவனந்தபுரத்து அரங்கம் நகுலனை மதித்தது. நகுலன் தன் கவிதைகளைப் படிக்கச் சில நிமிடங்களே எடுத்துக்கொண்டார்.</p> <p>நிகழ்ச்சிக்குப் பிறகு நகுலனை நான் சந்திக்கவில்லை. அவருக்கு வயது முதிர்ந்துவந்ததும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதும் அங்கலாய்ப்பைத் தந்தன. அவரது கவிதைகள் பலவற்றை நான் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அவரது வாக்கு மூலம் சிறந்த நாவல் என்றும் சாகித்திய அகடமியைச் சார்ந்த சிலரிடம் அது இந்திய மொழிகளில் வெளிவர வேண்டும் எனவும் நான் சொன்னதுண்டு - அகடமிக்குக் காது கொஞ்சம் மந்தம் என்றாலும்.</p> <p>'மழை: மரம்: காற்று' என்ற கவிதையில் <br />'சவத்தைத் தேய்க்கும் <br />சோப்பை எனக்குக் கொடுத்துவிட்டும் <br />போய்விட்டான்.'</p> <p>என்று நகுலன் எழுதியிருக்கிறார். நகுலனைப் பற்றி ஒரு பெரிய பத்திரிகையில் ஓர் எழுத்தாளர் ரொம்பச் சோகம் தொனிக்க எழுதியிருந்தார். அதைப் படித்த ஒரு வாசகி - வெளிநாட்டில் வாழ்பவர் - நகுலன் இறந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு என்னிடம் விசாரித்தார். நகுலன் நன்றாகத்தான் இருக்கிறார் என்றேன். இது நடந்து மூன்றாண்டுகள் இருக்கும். நகுலனிடம் இதைச் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? 'இப்போதாவது நான் இறந்துபோய்விட்டதை நம்புகிறார்களே' என்றிருப்பார். அந்த மனப்பண்பு அவரிடம் இருந்தது.</p> <p>நகுலன் ஓர் அத்வைதி - ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்ரமணியம், மௌனி இவர்களைப் போல. ந.பி., க.நா.சு., மௌனி, ஆத்மாநாம், சம்பத், சுப்ரமண்ய ராஜு, காசியபன், கு. அழகிரிசாமி, எம்.எஸ். ராமசாமி, சுந்தர ராமசாமி இப்படிப் பலரை நான் இழந்துவிட்டேன். ஆனால், எவ்வளவு ஆழமான நினைவுகளை அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள்! இவர்களைப் பார்த்தேன், பேசினேன் என்பதையே ஒரு வாசகன் என்ற முறையில் நம்ப முடியாத ஒரு பேறாகக் கருதுகிறேன். ஓர் உணர்வு அலைமோதுகிறது:</p> <p>'அந்தப் பெரிய மீனைப் பிடிக்க <br />நடுக்கடலில் சாண்டியாகோ <br />கரையிலிருந்து தொலை தூரம் சென்ற <br />சாண்டியா கோவின் நினைவு எனக்கு வந்தது.'</p> <p>'நகுலன்' - மழை: மரம்: காற்று</p> <p>*******</p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-3052139919176543672010-05-15T12:09:00.002+05:302010-05-15T12:12:15.466+05:30பஷீர் : மொழியின் புன்னகை---ஜெயமோகன்<p>1</p><p>நூற்றாண்டு காணும் எந்த ஓர் எழுத்தாளனும் வேறு வழியில்லாமல் தொன்மமாக ஆகிவிட்டிருப்பான். பஷீரைப் பொறுத்தவரை அவர் வாழும்போதே அப்படி ஆகிவிட்டவர். அதற்கு அகக் காரணம் என்பது பஷீரின் ஆக்கங்களே. அவை முழுக்க <a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/S758bKFR72I/AAAAAAAAGAc/31uWJi8OmqY/s1600-h/baseer26.jpg"><img style="border-width: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="baseer2" alt="baseer2" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S758d4wvFxI/AAAAAAAAGAg/yENn2UaHCw4/baseer2_thumb4.jpg?imgmax=800" align="left" border="0" width="238" height="312" /></a> முழுக்க அவரது குரலில் ஒலிப்பவை. பஷீரின் எப்போதைக்கும் உரிய பேசுபொருள் அவரேதான். 'வினீதனாய சரித்ரகாரன்' (பணிவுள்ள வரலாற்றாசிரியன்) எல்லாக் கதைகளிலும் தன் இளம் புன்னகையுடன் வந்து நின்று பேச ஆரம்பிக்கிறான். "அன்று காலைச் சூரியன் கிழக்கு வானத்தில் வந்து நின்று கீழே ஸ்தலத்தை நோக்கினான். வேறு விசேஷம் ஒன்றுமில்லை. எல்லாம் வழக்கம்போல" (ஸ்தலத்தே பிரதான திவ்யன்) என்று கதையைச் சொல்ல ஆரம்பிப்பவனே அவன்தான். பஷீர் எழுத்தாளரே அல்ல, கதை சொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது கதைகளை நாம் நினைவுகூரவே முடிவதில்லை. வாசகன் பஷீரைத் தொடர்ந்து பார்த்தபடியே இருக்கிறான். பஷீர் திருடனாக, நாடோடியாக, சமையற்காரராக, கைஜோசியக்காரராக மாறுவேடமிட்டு அவன் முன்வந்துகொண்டே இருக்கிறார். மெல்ல மெல்ல அவன் நெஞ்சில் ஒரு படிமமாக ஆகி நாள்கள் செல்லச் செல்லத் தொன்ம வடிவம் ஆகிறார்.</p><p>பஷீரின் இந்தத் தொன்மத் தன்மையைக் கண்டுபிடித்த வணிகர் என டொமினிக் சாக்கோ கிழக்கேமுறியைச் சொல்ல வேண்டும். கேரள இலக்கியச் சூழலில் எழுபதுகளில் பஷீர் கிட்டத்தட்ட மறைந்தே போயிருந்த ஒரு காலகட்டம் இருந்தது எனச் சொன்னால் இன்று மலையாளிகளே நம்ப மாட்டார்கள். எழுபதுகளில் கேரளத்தில் இடதுசாரித் தீவிரவாதம் இலக்கியத்தை மூழ்கடித்தது. அதன் வீழ்ச்சி உடனடியாக இருத்தலிய அலையை உருவாக்கியது. இந்த மனநிலைகள் பஷீரைப் பொருட்படுத்துவன அல்ல. இவை அரசியலை மையமாக்கியவை. பஷீர் ஓர் 'அரசியலற்ற' பிராந்தியத்தில் நின்று எழுதிக்கொண்டிருந்தார். தன் அலைச்சலையும் குடும்பச் சூழல்களையும் வைத்து எளிய நகைச்சுவைக் கதைகளை எழுதும் ஒரு பழைய எழுத்தாளராக பஷீர் நோக்கப்பட்டார். தகழி ஓரளவுக்கு இக்காலகட்டத்திலும் கவனிக்கப்பட்டமைக்கு அவரது இடதுசாரித்தனம் காரணம். பி. கேசவதேவ் மேடை மேடையாகப் போய் கர்ஜனை செய்து தன்மீது மேலோட்டமான கவனத்தை ஈர்த்தார். உறூப் (பி.சி. குட்டிகிருஷ்ணன்), காரூர் நீலகண்டபிள்ளை ஆகியோர் மறக்கப்பட்டனர். பஷீர் பொருட்படுத்தப்படவில்லை.</p><p>இக்காலகட்டத்தில்தான் சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் (இலக்கியவாதிகள் கூட்டுறவுச் சங்கம்) என்ற மாபெரும் பிரசுர நிறுவனம் அதன் தூண்களில் ஒருவராக இருந்த டி.சி. கிழக்கேமுறியை வெளியேற்றியது. அவர் டி.சி. புக்ஸ் என்ற இந்திய மொழிகளில் இன்று மிகப்பெரிய பிரசுர நிறுவனமாக விளங்கும் அமைப்பைத் தொடங்கினார். பஷீரின் நூல்களை வெளியிட ஆரம்பித்தார். பஷீரின் நூல்களை ஒரு ரூபாய் விலையில் சிறுசிறு பிரசுரங்களாக வெளியிட்டார் டி.சி. இவற்றைக் கேரளம் முழுக்க வழக்கத்துக்கு மாறான கடைகளில் வைத்து விற்றார். இந்நூல்களில் பஷீர் குறித்த அறிமுகக் குறிப்பு விரிவாகவே இருக்கும். இன்றுவரை கிட்டத்தட்ட அதே வரிகள் அவரது நூலறிமுகங்களில் தொடர்கின்றன. பஷீரின் நாடோடி + புரட்சிக்காரன் + சூஃபி படிமத்தை இவை கட்டமைத்தன. அவர் செய்த பதினாறுக்கும் மேற்பட்ட தொழில்கள் அவற்றில் பட்டியலிடப்பட்டிருக்கும். அன்றைய இருத்தலியல் அலை, இலக்கியம் வாசித்துப் பழகிய மேநிலைக் குழுவுக்கு உரியதாகவே இருந்தது. மசக்கிய<a href="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/S758gj8xQqI/AAAAAAAAGAk/8EeKXwsAGV4/s1600-h/baseermaruthu26.jpg"><img style="border-width: 0px; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="baseer-maruthu2" alt="baseer-maruthu2" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S758imPsXfI/AAAAAAAAGAo/ZB3y42dtIn0/baseermaruthu2_thumb4.jpg?imgmax=800" align="right" border="0" width="274" height="398" /></a> கப்பையைச் சாளைமீன் சேர்த்து, குழைத்து உண்ணும் சாதாரண மக்களுக்கு ஏது இருத்தலியம்? டி.சி. கிழக்கேமுறி வழியாக பஷீர் அம்மக்களை நேரடியாகச் சென்று சேர்ந்தார். அவர்களைச் சிரிக்க வைத்தார். அவரது அழியாத இலக்கிய இடம் இவ்வாறாக உருவானதேயாகும்.</p><p>பஷீரைப் புரிந்துகொள்ள அக்கால நவீனத்துவத் திறனாய்வாளர்களால் இயலவில்லை என்பதை இப்போது வாசிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. கேரள வாசகர்களில் மிகப்பெரும்பான்மையினர் நுண்ணிய இலக்கிய ஆக்கங்களை உள்வாங்கும் திறனற்றவர்கள் என்பதே என் அவதானிப்பாகும். பல்வேறு அரசியலியக்கங்களால் இலக்கியக் களத்தில் கொண்டுவந்து கொட்டப்படும் பெரும் தொகையினர் இவர்கள். அதிகமாகப் பேசப்படுவதை வாசிப்பார்கள், மேலே தட்டுப்படும் கருத்துகளை எடுத்துக்கொள்வார்கள். ஆகவே, கேரள இலக்கிய விவாதங்களில் இலக்கியத்தின் மேல்தளத்து அரசியலே எப்போதும் இலக்கியம் என்ற தோரணையில் பேசப்படுகிறது. சீரிய இலக்கிய வாசகர்கள் தமிழகத்தின் அளவே இருப்பார்கள். அவர்களை இந்த லட்சக்கணக்கான பேர் கொண்ட திரை முற்றிலும் மறைத்துவிடுகிறது.</p><p>ஆகவே, இயல்பாகப் பொதுவாசகர்கள் பஷீரைப் புரிந்துகொண்டார்கள், கொள்கிறார்கள் என நான் எண்ணவில்லை. பஷீரை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் என்றால் பஷீருக்குச் சமானமான உலகத்தில் இயங்கிய காரூர் நீலகண்டபிள்ளை, பட்டத்துவிளை கருணாகரன், விகேஎன் போன்றவர்கள் மேல் அதேயளவுக்கு ஆழ்ந்த கவனம் இருந்திருக்கும், அப்படி இல்லை. பஷீர் கேரளம் முழுக்க எளிய வாசகர் நடுவே ஆழமான நேரடிப் பாதிப்பைச் செலுத்த ஆரம்பித்த பின்னரே இந்தப் பெரும்பான்மையினரான அரசியல் வாசகர்கள் அவரை அணுகினர். அவரது 'சூஃபி' படிமத்தைத் தாங்களும் ஏற்றுக்கொண்டு பேச ஆரம்பித்தனர். பஷீர் கேரளத்தின் நவீன இலக்கியத் தொன்மமாக மாறியது இவ்வாறுதான்.</p><p>எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தத் தொன்மமயமாதல் அதன் முழுவீச்சில் நடந்த காலகட்டத்தில் தான் நான் கேரளத்தில் இருந்தேன். தொடர்ச்சியான பத்திரிகைக் கட்டுரைகள் மூலமே இது நிகழ்ந்தது. பஷீரின் போப்பூரில் உள்ள வீடு, மங்கோஸ்டைன் மரம், சாய்வு நாற்காலி, கட்டன் சாயா, பீடி, மூக்குக் கண்ணாடி என வர்ணனைசெய்யும் கட்டுரைகள் மாதத்துக்கு மூன்று வீதம் வெளியிடப்பட்டன. இக்காலகட்டத்தில் பஷீர் அவரது முதுமையை எய்திக் கால, இட போதத்தை இழந்து கோர்வையில்லாமல் பேசுபவராக ஆனார். அதை ஞானமொழிகளாக ஆக்கும் கற்பனை வளம் இதழியலாளர்களுக்கு இருந்தது. இத்தகைய கட்டுரைகளைப் பற்றி அப்போதே பலரும் கிண்டல்செய்து எழுதியிருக்கிறார்கள். கட்டுரையாளர் கோழிக்கோட்டில் இருந்து கிளம்பும்போதே தொடங்கிவிடும் கட்டுரைகள் விரிவான வர்ணனைக்குப் பின் பஷீர் சொல்லும் உதிரி வரிகளுக்குத் தத்துவ அர்த்தம் அளித்துக் கற்பனாவாதச் சொற்களில் முடியும். 'போப்பூர் சுல்தான்' 'மலையாளத்தின்றெ சூஃபி' போன்ற சொல்லாட்சிகள் உருவாகிச் சலித்து ஒருகட்டத்தில் எம். கங்காதரன் போன்ற திறனாய்வாளர்கள் இச்சொற்களை மலையாளத்தில் தடைசெய்ய வேண்டும் என்று சொல்லும் அளவுக்குச் சென்றது.</p><p>இதேயளவுக்கு ஓவியர் நம்பூதிரி வரைந்த பஷீரைப் பற்றிய கோட்டோவியங்களும் பங்களிப்பாற்றின. அவை பஷீர் ஒருவரல்ல, ஏராளமான ஆளுமைகளின் தொகை என்ற சித்திரத்தை உருவாக்கி இன்றுவரை நிலைநிறுத்தியிருக்கின்றன. எம்.ஏ. ரஹ்மான் தயாரித்த பஷீர் த மான் ஆவணப்படத்துக்காக வரையப்பட்டவை இவை.</p><p><a href="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S758nOtmvlI/AAAAAAAAGAs/M0LpRtixuW8/s1600-h/jemo%5B6%5D.jpg"><img style="border: 0px none; display: inline; margin-left: 0px; margin-right: 0px;" title="jemo" alt="jemo" src="http://lh5.ggpht.com/_zmZAoGSCETs/S758pIbGgaI/AAAAAAAAGAw/6PDigrz9XQI/jemo_thumb%5B9%5D.jpg?imgmax=800" align="left" border="0" width="214" height="240" /></a> பஷீர் மலையாள இலக்கியத்தின் வாழும் தொன்மமாக ஆன பின்னர் அதிலிருந்து அவரது கதைகளுக்குள் சென்று அர்த்தம்கொள்ளும் போக்கு வாசகர்கள் நடுவே உருவாயிற்று. பஷீரின் கதாபாத்திரங்களைத் தேடி நிருபர்கள் காமிராக்களுடன் சென்றார்கள். பாத்துமாவிடமே அவரது ஆட்டைப் பற்றிக் கேட்டுக் கட்டுரைகள் எழுதினார்கள். மெல்ல மெல்ல நாம் இன்று காணும் 'மூலவிக்ரஹ'த் தன்மை பஷீருக்கு உருவாயிற்று. இப்போது நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் அது உச்சமடைந்திருக்கிறது. பஷீரைக் கொண்டாட அவரைப் படிக்கவே வேண்டியதில்லை என்கிற அளவுக்கு.</p><p>இது பஷீரை அணுகுவதற்கு மிகப் பெரிய தடைகளை உருவாக்கும் அம்சம் என்று சொல்ல வேண்டியதில்லை. சென்ற காலங்களில் பஷீர் பற்றி உற்சாகமாகப் பேசிய பல மலையாள வாசகர்களிடம் விவாதித்திருக்கிறேன். பஷீரின் ஒரு சொல்லாட்சியைக்கூட அவர்களால் நினைவுகூர்ந்து சொல்ல முடியவில்லை. அவர்கள் அத்தனை பேருமே அவர் சூஃபி என்றும் சிரிக்கும் கலகக்காரர் என்றும் சொன்னார்கள். அந்த முடிவுக்கு எப்படி வந்துசேர்ந்தீர்கள் என்று கேட்டபோது பஷீரின் கதைகளுக்கு உருவக வாசிப்புக் கொடுத்து, கோட்பாட்டு விளக்கம் அளிக்கத் தொடங்கினார்கள். அதைவிடப் பஷீர் நூல்கள் மேல் சாணியடிக்கலாம். அவர்கள் எவருமே பஷீரை அறிந்தவர்களல்ல என்றே எண்ணுகிறேன்.</p><p>இன்றைய மலையாளப் பொதுவாசகன் படைப்பில் அரசியல் நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே எடுக்கத் தெரிந்தவன். அவனால் பஷீரை அணுகவே முடியாது. அவன் பஷீர் பற்றி வைக்கும் விளக்கங்களையே வாசிக்கிறான். அதனால்தான் பஷீர் பற்றிக் கடந்த இருபதாண்டுகளில் ஒரு புதிய வாசிப்புகூட மலையாளத்தில் நிகழவில்லை. ஒரே விதிவிலக்கு, கல்பற்றா நாராயணன் எழுதிய "ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்..." என்னும் கட்டுரை. அது பஷீரை ஒரு நடையியலாளராக (ஷிtஹ்றீவீst) மட்டுமே அணுகி அவரது சொல் விளையாட்டுகளை நோக்கி நம்மைக் கொண்டுசெல்கிறது.</p><p>2</p><p>பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல. திட்ட வட்டமான கதைக்கட்டு மானம் உடையனவல்ல. ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும் மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும் அவற்றில் இல்லை. புனைவுத் தருணங்கள் கவித்துவத் தரிசனத்தின் ஒளியுடனோ தத்துவ தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை. நாம் எந்த அம்சங்களினால் தல்ஸ்தோயை, தஸ்தயேவ்ஸ்கியை, மாப்பஸானை, தாமஸ் மன்னை இலக்கிய மேதை என்கிறோமோ அந்தக் கூறுகளைப் பஷீரில் காண முடியாது. பஷீரில் என்ன இருக்கிறது, வெறும் சுயபுராணமும் அசட்டு நகைச்சுவையும் எட்டாம் கிளாஸ்தரத்து மலையாளமுந்தானே என ஒரு விமரிசனக் குரல் எழுந்தது மலையாளத்தில் (உப்பூப்பான்றே குழியானகள் என்ற நூல். கெ. ரகுநாதன்). வழக்கமான ஒரு வாசகன் பஷீரைப் பார்த்தால் என்ன கிடைக்குமோ அதுதான் அந்நூலாசிரியருக்கும் கிடைத்தது. அவருக்குப் பொருட் படுத்தும்படியான ஒரு பதில் அங்கே சொல்லப்படவில்லை.</p><p>பஷீரின் ஆக்கங்கள் அவற்றின் மொழிநடையால் மட்டுமே பேரிலக்கியங்களாகின்றன. தன் நாற்பது வயதுவரை 'அனல் கக்கும்' இலக்கியங்களையே எழுதி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவற்றையெல்லாம் துணிந்து கொளுத்திவிட்டு இன்றைய நடைக்கு வந்ததாகவும் பஷீர் எழுதியிருக்கிறார். பஷீரின் தலைக்கு பிரிட்டிஷ் அரசு விலைவைத்த, திருவிதாங்கூர் அரசு அவரைச் சிறையில் அடைத்த எழுத்துக்கள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பஷீர், பஷீராக ஆன பிறகுள்ள எழுத்துக்களே இன்று கிடைக்கின்றன.</p><p>பஷீரின் முந்தைய காலகட்டத்தின் எச்சம் என்று சப்தங்ஙள் குறுநாவலைச் சொல்லலாம். அது ஒருவகையில் எதிர்ப்பு ஓங்கிய ஆக்கம். அனல் இருக்கிறது. இன்றைய வாசிப்பில் அது பலவீனமான ஒரு பஷீர் படைப்பாகவே தெரிகிறது. அதில் உள்ள அமைப்புக்கு எதிரான அராஜக நோக்கு மட்டுமே இன்றைய பஷீரில் ஒட்டும்.</p><p>பஷீரின் ஆக்கங்களில் இன்று நமக்குக் கிடைக்கும் குறிப்பிடத்தக்க ஆரம்பகாலப் புனைகதை என்பது பால்யகால சகி தான். இது மிக எளிமையான ஒரு காதல் கதை. எளிய நேரடியான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. பஷீர் இரண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்திருக்கிறார். ஒன்று சூழல் விவரணை. அக்கால எழுத்துக்களில் இது மிக அதிகம். மஜீதின் வீடும் குடும்பமும் சரி சுஹராவின் குடும்பமும் சரி எளிய வேகமான கோட்டுச்சித்திரங்கள் போலத்தான் நமக்கு அறிமுகமாகின்றன. அதேபோல மன உணர்வுகளை விரிவாகச் சொல்வதையும் பஷீர் தவிர்த்துவிடுகிறார். பிற்பாடு பஷீரில் உருவாகிவந்த நுண்ணிய மொழி நிகழ்வுகள் எதுவுமே இந்நாவலில் இல்லை. ஆகவே, இந்நாவல் இன்றைய வாசிப்புக்கு ஒரு கதைச்சுருக்கம் போலவே உள்ளது.</p><p>ஆயினும் இதை இன்றும் முக்கியமான ஆக்கமாக நிலைநாட்டும் அம்சம் இதில் மிக இயல்பாக உருவாகி வந்திருக்கும் படிமத்தன்மை. இந்த எளிய காதல் கதையை நெஞ்சுருக்கும் கவிதையாக ஆக்குவது இந்த அம்சமே. வாழ்க்கையைத் தேடி வீடு விட்டிறங்கித் தோற்றுத் திரும்பிவந்து மஜீத் நட்டுவளர்க்கும் ரோஜாத் தோட்டம் ஓர் உதாரணம். சுஹரா ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே இறக்கிறாள். 'அவள் சொல்லவந்தது என்ன?' என்ற வினாவுடன் நாவல் முடியும்போது அந்தக் கடைசிச் சொல் ஒரு பெரும் படிமமாக ஆகிவிடுகிறது.</p><p>பஷீரின் நடை இதில் உருவாகவில்லை என்று சொன்னேன், ஆனால், உருவாக ஆரம்பித்துவிட்டிருந்தது என அதில் மஜீத் - சுஹரா உரையாடல்கள் காட்டுகின்றன. மெல்லிய புன்னகையுடன் மட்டுமே மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க உரையாடல். உலகமே தெரியாத முஸ்லிம் பெண்ணின் குழந்தைத்தனமான மனம். அந்தக் கள்ளமின்மையில் தன் இளமையைக் கண்டுகொள்ளும் இளைஞன். அவர்களின் உள்ளங்கள் மாறிமாறிப் புன்னகைகளைப் பரிமாறிக்கொள்வது அந்த உரையாடல்களில் தெரிகிறது. அதுதான் பஷீர். அங்கிருந்து முளைத்துத்தான் அவர் கிளை விரித்தார்.</p><p>பிற்கால பஷீரின் கதைகளில் எப்போதுமே அந்தப் புன்னகை இருந்துகொண்டிருக்கிறது. மஜீத், சுஹரா போன்ற கதாபாத்திரங்களை நாம் பிற்பாடு பஷீரின் ஆக்கங்களில் காண முடிவதில்லை. நாம் காண்பது நகைச்சித்திரங்களையே (சிணீக்ஷீவீநீணீtuக்ஷீமீ). மண்டன் முத்தபா, பொன்குரிசு தோமா, ஒற்றைக்கண் போக்கர், ஆனவாரி ராமன்நாயர், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, சைனபா, எட்டுகாலி மம்மூஞ்ஞு போன்று எல்லாக் கதாபாத்திரங்களும் பஷீரின் புன்னகையால் கோணலாக்கப்பட்டுள்ளார்கள். மஜீத் வாழ்ந்த நிலம் அதேபோலத் திரிபுகொண்டு 'ஸ்தலம்' ஆக மாறிவிட்டிருக்கிறது. அதன்பின் இந்த ஸ்தலத்தில் துயரமே இல்லை. சிக்கல்களும் மோதல்களும்கூட இல்லை. கொண்டாட்டம் மட்டுமே உள்ளது.</p><p>உலகமெங்கும் நகைச்சித்திரங்களை உருவாக்குபவர்கள் அவற்றை விமரிசனம் கலந்து கேலிச்சித்திரங்களாக (சிணீக்ஷீtஷீஷீஸீ) ஆக்குவதே வழக்கம். பஷீர் அதிலிருந்து முற்றாக வேறுபடுகிறார். பஷீரில் கேலியே இல்லை. காரணம், அவர் எதையுமே விமரிசனம் செய்வதில்லை. பஷீர் நாம் நம்மைச் சுற்றிக் காணும் எதிர்மறைக் கூறுகள் ஏதுமில்லாத ஓர் உலகத்தை உருவாக்கி நம்முன் காட்டுகிறார், அவ்வளவுதான். அது அவரது சிரிப்பு மூலம் நிகழ்கிறது. அந்தச் சிரிப்பு பஷீரின் மொழியிலேயே உள்ளது. பஷீரின் கலையின் சாரம் அதுவே.</p><p>கேலி இல்லாததனால் சம்ஸ்கிருதத்தில் பிரஹஸனம் என்று சொல்லப்படும் கேலிக்கூத்துத் தன்மையும் பஷீரின் கதைகளில் இல்லை. எந்த விஷயமும் தரம் தாழ்த்தப்படுவதில்லை, திரிக்கப்படுவதில்லை. ஏன் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக வைக்கப்படுவதுமில்லை. நகைச்சுவையாக எழுதிய பிற எழுத்தாளர்களிடமிருந்து பஷீர் மாறுபடுவதும் இங்கேதான்.</p><p>ஓர் உதாரணம் மூலம் சொல்லலாம். 'முச்சீட்டு களிக்காரன்றே மகள்'. மகாபுத்திமானும் சந்தையையே தன் வாயடி கையடியால் அமுக்கி வைத்திருப்பவனுமாகிய மூன்று சீட்டு ஆட்டக்காரன் ஒற்றைக்கண் போக்கரின் மகள் சைனபா. அவளும் 'சில்லறைக்காரி' அல்ல. ஆற்றுக்கு மறுபக்கம் சந்தைக்குக் கொண்டுபோக வைத்திருக்கும் வாழைக்குலைகளில் சிலவற்றை அவ்வப் போது தூண்டில் மூலம் தன்னை நோக்கி நீந்திவரச் செய்யும் கலை தெரிந்தவள்தான். மண்டன் முத்தபாவுக்கு ஒன்றும் தெரியாது, திக்குவதைத் தவிர.</p><p>ஆனால், மண்டன் முத்தபா மீசையில் மணிகட்டிய கிண்ணன்கள் தோற்கும் மூன்றுசீட்டு ஆட்டத்தை ஆட, போக்கர் முன்சென்று நெளிந்து நிற்கிறான். ஆட்டம் நடக்கிறது. மண்டனுக்குத் தொடர் வெற்றி. பந்தயப் பொருளான சைனபாவை அவன் மணக்கிறான். போக்கருக்கு உலகப்போக்கே புரியவில்லை. அல்லாவுக்கு என்ன ஆயிற்று? குழம்பிப்போய்விட்டாரா என்ன? ஆனால், உண்மையில் அல்லாவின் நியதிப்படியே எல்லாம் நடக்கிறது. மகாபுத்திசாலியின் மகள் மடையனைக் காதலித்துத்தானே ஆக வேண்டும்? சைனபா சீட்டுகளில் போட்ட ரகசிய முத்திரைதான் போக்கரை மண்டனாக்கிவிட்டது.</p><p>என்றும் எப்போதும் மண்ணில் நிகழும் அந்த மூன்று சீட்டு ஆட்டத்தைத்தான் பஷீரும் சொல்கிறார். ஆனால், சொல்லும் விதத்தில் அது வலியில்லாத விளையாட்டாக ஆகிவிடுகிறது. "கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்து செத்தது மரச்சிலுவையில். பின்னே எதுக்கு சர்ச்சுக்குப் பொன் சிலுவை?" என்ற பொன்குரிசு தோமாவின் தரிசனம் அந்த விளையாட்டின் உச்சமாகத் திரண்டுவருகிறது.</p><p>ஜெ. சைதன்யா கதை சொல்லுவாள். "..அப்றமா அந்தத் திவிடன் மாமா திவிடிக்கிட்டு ஓடினாங்களாம். அப்போ போலீஸ் மாமா தொப்பி போட்டுகிட்டு வேகமா அவங்களைத் தொரத்தினாங்களாம். போலீஸ் மாமா டேய் நில்லுடா திவிடான்னு சத்தம் போட்டாங்களாம்.....திவிடன் மாமா நிக்கமாட்டேன் நீ என்னைய அடிப்பேன்னு சொல்லிட்டே ஓடினாங்களாம்..." போலீசும் திருடனும் மாமாக்களாக மாறி உற்சாகமாகத் தங்கள் கடமைகளைச் செய்யும் ஜெ. சைதன்யாவின் உலகில் வன்முறைக்கு இடமில்லை. எல்லாம் விளையாட்டுகள் மட்டுமே.</p><p>பஷீரின் உலகமும் அத்தகையதே. சொல்ல வரும் கதைகளை எல்லாம் குழந்தையின் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார். அவ்வகையில் நோக்கும் வாசகர் பஷீருடன் ஒப்பிடத்தக்க படைப்பாளி லூயிஸ் கரோல் மட்டுமே என உணரலாம். பஷீரின் கதையில் கதையைச் சொல்வதும் சரி, கதைநாயகனும் சரி, பஷீர் தான்- குழந்தை அல்ல. ஆனால், சொல்லும் விதமும் சொல்லும் கோணமும் ஆலீஸ§க்குச் சமானமாகவே உள்ளன. பஷீரின் மொழியாட்டம்கூடப் பலவகையிலும் லூயிஸ் கரோலுடன் ஒப்பிடத்தக்கது. ஆம், பஷீர் தன்னை ஒரு குழந்தையாக ஆக்கிக்கொண்டு தன் புனைவுலகை உருவாக்கியிருக்கிறார்.</p><p>லூயிஸ் கரோலின் தரிசனங்கள் அவரது மொழிவிளையாட்டிலேயே வெளிப்படுகின்றன. எது உண்மையெனக் கேட்டால் யார் முக்கியம் என்று பதில் சொல்லும் பூசணிக்காய் போல. பஷீரும் அப்படித்தான். அவரது உரையாடல் வரிகளின் வழியாக அவரது தரிசனங்களின் உலகை எளிதாகச் சென்றுசேரலாம். அது ஒரு தனிப் பயணம்.</p><p>3</p><p>"ஆனைத்தூவல் ஒரு திருட்டின் கதை! கொலைக் கொம்பனாகிய ஒரு ஆனை! மிதித்து அரைத்தும் குத்தியும் அவன் ஒன்றிரண்டு யானைக்காரர்களைக் கொன்றிருக்கிறான். அவனுடைய வாலில் உள்ள ஒரு தூவலைத் திருட வேண்டும். திருடுவது என்று சொன்னால் யாருமே பார்க்கக் கூடாது. யானைக்காரர்களும் வாப்பாவும் உம்மாவும் யாரும்...ஆசாமி நானேதான். ஒரு ஆனை அல்ல. மூன்று. இரண்டு பிடியும் ஒரு கொம்பனும். அந்தக் கொம்பனின் வாலில் உள்ள முடிதான் தேவைப்படுகிறது. என்னுடைய சொந்தத் தேவைக்காக அல்ல. ராதாமணிக்காக...." என்று தொடங்குகிறது பஷீரின் 'ஆனப்பூட' என்னும் கதை. யானையின் வால்மயிரை யானையின் தூவல் என்று எண்ணிக்கொண்ட பஷீரின் இளமைப்பருவம். புத்தகத்தில் வைக்கும் மயில்தூவலைப் போன்றுதானே யானை முடியும் இருக்கிறது? அப்படிச் சொல்லிப் பள்ளிவட்டாரத்தில் ஆனப்பூட எனப் புகழ் அடைந்த கதாநாயகன் கதை சொல்ல ஆரம்பிக்கிறான்.</p><p>ஆனப்பூட ஒரு குழந்தைக் கதையல்ல. ஆனால், அதன் மொழி அப்படியே ஒரு குழந்தைக் கதைக்குரியது என வாசகர் காணலாம். ஒரு எட்டுவயதுப் பையன் உற்சாகமும் களங்கமின்மையும் கலக்க, சவடாலடிக்கும் தோரணையிலேயே மொத்தக் கதையும் அமைந்துள்ளது. இந்த பாணி அக்கதைக்கு அலாதியான உற்சாகத்தை அளித்துவிடுகிறது. தம்பி அப்துல்காதர் பாயில் படுத்து மூத்திரம் பெய்கிறான். ஆகவே, அண்ணா பஷீர் யானைக்கு அடியில் நுழைந்து சென்றாக வேண்டும். அப்துல் காதர்தான் ஒருகால் பலவீனமான 'சட்டுகாலன்' ஆயிற்றே. சண்டைகளில் நல்ல காலை ஊன்றி மெல்லிய காலை அந்தரத்தில் சுழற்றி அவன் அடிக்கும் அடிகளையும் பஷீர் வாங்கிக்கொண்டாக வேண்டும். ஒரே ஒரு முறை ஊன்றிய காலில் ஒரு அடி அடித்து அவனை விழவைத்தபோது பஷீருக்குத்தான் அடி கிடைத்தது. இந்தக் கொடுமைகளுக்குக் காரணபூதமாக இருப்பவள் சமையற்காரி நாணி. அவளுடைய முலையைச் சிறு வயதில் பஷீர் குடித்தான் என்பதனால் அவள் அவனைப் பற்றி என்ன சொன்னாலும் அது உண்மையே. அவளது மகன் நத்து தாமுவை பஷீர் கல்லால் அடித்தால் அதற்கும் அடி - கல் கூடையிலேயே பட்டது என்றாலும் இந்தக் கொடுமைகளைத் தீரமாக எதிர்கொண்டு, தோழி ராதாமணிக்காக உயிரைப் பணயம் வைத்து ஆற்றுவெள்ளத்தில் மூழ்கிச்சென்று கொம்பன் யானையின் வாலைக்கடித்து அதை அலறவைத்தான் பஷீர். ஒரே களேபரம். கடைசியில் தேடினால் பஷீரைக் காணவில்லை. கடைசியில் வீடு திரும்புகிறான். "உம்மா என் வேட்டி போச்சு" "எல்லாருக்கும்தான் வேட்டி போச்சு" என்றாள் உம்மா. குற்ற உணர்வு தாளாமல் வாப்பாவிடம் ஒரு ஒப்புதல் "வாப்பா நான் ஆனையைக் கடிச்சேன்!" "என்னது, நீ கொம்பனைக் கடிச்சியா?" அன்பின் சிரிப்பில் முடியும் இந்தக் கதை ஒரு தேர்ந்த வாசகனில் பலவிதமான நுண் அதிர்வுகளை உருவாக்கக் கூடியது. ஆனால், கதையை ஒரு நல்ல குழந்தைக் கதை என்றும் சொல்லிவிடலாம்.</p><p>பின்னர் கதாநாயகன் குழந்தையாக இல்லாத கதையிலும் குழந்தைநோக்கு இயல்பாக வந்துசேர்கிறது. "மந்திரச் சரடு வருவது அப்துல் அஸீஸின் வழுக்கைத் தலையில் ஒரு மாம்பழம் ப்டுக்கென்று விழுந்த நாளில் தான்" (மந்திரச் சரடு) மாம்பழத்தை அது மண்ணில் விழுவதற்கு முன்னரே அப்துல் அஸீஸ் போய்ப் பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அதை கான் எடுத்துத் தின்றுவிடுவான். அவனுக்கு மாம்பழம், பலாப்பழம் எல்லாமே பிடிக்கும். கான் ஒரு ஆண்நாய். "கானை பூட்டியிட்டால் பிறகு செவிதலை கேட்க முடியாது. அய்யோ பொத்தோ என்று கதறல். ஆகவே பூட்டுவதில்லை. கான் இளம்சிவப்பு நிறத்தில் பெரிய வட்டங்கள் கொண்ட வெளுத்த சுந்தரன். அவன் ஒரு காதல் தோல்வியின் துயரத்தில் இருக்கிறான்..."</p><p>ஆகவே, ஹிந்து ஸ்திரீகளை விரும்பிக் கடிக்கும் பழக்கம் கானுக்கு இருக்கிறது. மாளு என்ற ஹிந்து நாயுடன் முஹபத் ஆகி அது மத வேற்றுமையால் கைகூடாமல்போன வெறி. வேறுவழியில்லாமல் அஸீஸ் ஒரு மந்திரச் சரடை வாங்கி கானின் கழுத்தில் கட்டுகிறார். கழுத்தில் சரடு கட்டப்பட்டதும் கான் ஆளே மாறி முஸ்லிம் ஸ்திரீகளைக் கடிக்க ஆரம்பிக்கிறான். "உம்முசுல்மயின் உம்மா கொண்டாட்டமாக நடந்து வரும்போது கான் பாய்ந்து காலில் ஒரு கடி வைத்தான். நியாயமான கடி! உம்முசுல்மாவின் உம்மா "றப்பே -ன்னே கொந்நே ஓடிவாயோ.."என்று பெரியவாயில் கதறினாள். அப்துல் அஸிஸ§ம் ஓடிப்போனார். கழுத்தில் மந்திரச்சரடு கட்டி கான் ஸிம்ப்ளனாக நின்றுகொண்டிருந்தான்..."</p><p>பஷீரின் நடையில் வரும் இந்த வாய்மொழி வேடிக் கைகளைக் கவனிக்க வேண்டும். மாம்பழம் 'ப்டுக்கேந்நு' விழுகிறது. உம்மா 'ஆஹோஷமாக' வருகிறாள். கான் 'ஸிம்ப்ளனாக' நிற்கிறான். இவ்வாறுதான் பஷீரின் நடை உருவாகிவருகிறது. அது நம்மையும் ஒரு குழந்தையாக எண்ணி நம்முடன் கொஞ்சிச் சிரித்துப் பேச முற்படுகிறது. 'செவிதலை கேட்கில்ல' என்ற நாட்டுப்புறச் சொல்லாட்சியைச் சாதாரணமாக பஷீர் சொல்லிச் செல்கிறார். பஷீரின் ஆகச்சிறந்த படைப்பான பாத்தும்மாவின் ஆடு இந்த அம்சங்கள் மட்டும் அடங்கிய முழுமையான ஆக்கம். அதில் வேறு ஒன்றுமே இல்லை! பஷீரின் இந்த அம்சத்தை மொழியாக்கம் செய்வது மிகமிகக் கஷ்டமான காரியம். ஆனால், இதுதான் பஷீர்.</p><p>ஒரு சிறிய நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம். பஷீர் மனைவி குழந்தைகளுடன் பஸ் ஏறிக் கோழிக் கோட்டுக்குச் செல்கிறார். வீட்டிலிருந்தே குடும்பத் தலைவனின் அலம்பல்கள் ஆரம்பம். பொருட்களை எடுப்பது, உடைமாற்றுவது எல்லாவற்றைப் பற்றியும் உரத்த குரல் கட்டளைகள். அறிவுரைகள். குழந்தைகளுக்கு அதட்டல்கள். பஸ் ஏறியதுமே "ஃபாபி மேலே கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக்கொள். மக்கு மாதிரி ஆடி விழுந்துவைக்கக் கூடாது..." சொல்லி முடிப்பதற்குள் 'ப்படே' என்று விழும் ஒலி. விழுந்தது பஷீர்தான். (மாந்திரிகபூச்ச).</p><p>எளிமையான இந்த நகைச்சுவைக்கு ஓர் இலக்கியப் படைப்பில் என்ன இடம்? பஷீர் சொல்வது குழந்தைகளுக்கான கதை என்ற பாவனையில். அங்கே ஒரு 'பெரிய ஆள்' நிலைதடுமாறி விழுவதைப் போல உற்சாகமான விஷயம் வேறு ஏதுமில்லை. முதிர்ந்தவர்களின் உலகம், கட்டளையிடும் உலகம், குப்புற விழுந்து கிடக்கிறது. அதன் பிறகுதான் கதையே ஆரம்பம். இந்தக் 'குப்புறச்சரித்தல்' பஷீரின் எல்லாக் கதைகளிலும் உண்டு. நாய்க்கு 'கான்' என்று பெயர் வைத்த பிரக்ஞை அதுதான். எது வெளியே மிக முக்கியமோ அது உள்ளே கவிழ்க்கப்பட்டிருக்கும். 'ஆனைவாரி' என்றால் யானைமீதுள்ள அம்பாரி என்று பொருள்கொள்பவர்கள் பெரியவர்கள். பஷீரின் சிறியவர்களின் உலகில் ராமன் நாயர் காட்டுக்குப் போய்க் குவிந்துகிடக்கும் சாணி என்று தூங்கும் யானையை மண்வெட்டியால் வாரப்போய் அந்தப் பட்டம் பெறுகிறார்.</p><p>தன்னைத் திருடன் என்று முத்திரை குத்தும் 'ஸ்தலத்துக்கு' எதிராக ஒரு நாசகார ஆயுதத்துடன் பொன்குரிசு தோமா வந்து சேர்கிறான். சொரியன்புழு! அதை வீசிவிடுவான். சொரிந்து சொரிந்து சாக வேண்டியதுதான்! ஸ்தலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது. ஆனவாரி ராமன்நாயர் பீதியுடன் சொன்னார், "ச்ச்சொரியன்புழு!" மண்டன் முத்தபா சொன்னான், "ஜ்ஜ் -ஜ்ஜ் -ஜ்ஜொரியன்புடு!" சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு அவரது ராஜதந்திர மூளையை முழுக்கப் பயன்படுத்தி உழைக்கும் வர்க்கத்தை அணிவகுக்கச் செய்து போலீஸ் நிலையம் நோக்கி ஓர் ஊர்வலத்தை நடத்துகிறார்- அதே வேகத்தில் திரும்பிவருவதற்காக.</p><p>பஷீரின் உலகில் அணுகுண்டுகூட 'ஜ்ஜொரியன்புடு'ஆகிவிடுகிறது. பொதுவாகக் கேரள வாசகர்களுக்குத் தெரியும், சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இ.எம். எஸ்தான் என. ஆனவாரி ராமன் நாயர் ஆர்.எஸ்.பி தலைவர் சி.என். ஸ்ரீகண்டன்நாயர் என்பார்கள். பிரம்மசாரியான ஆனவாரிக்குப் பெண்களைப் பிடிக்காது. ஆகவே, ஆற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் பெண்யானைமீது மண்கட்டிகளை விட்டெறிந்து தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இன்பக்கிளர்ச்சியும் அடைகிறார். இவ்வாறு நுண்ணிய நகலி உருவங்களைப் படைத்தபோதும் பஷீர் அவர்களின் அரசியல், கருத்தியல் எதையும் அவற்றை வைத்துக்கொண்டு கிண்டலோ விமரிசனமோ செய்யவில்லை. அவரது குழந்தைக்கு அதெல்லாம் பெரிதாகப்படவும் இல்லை. அந்தப் பெரியவர்கள் கால்தடுமாறி 'ப்படே' என்று விழும் தருணங்களில் கெக்கலி கொட்டிச் சிரிப்பது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது</p><p>'சீரியஸ்நெஸ்' கால்தடுமாறி விழுந்து கிடக்கும் குழந்தை உலகில் வைத்துச் சொல்லப்படும் கதைகள் இவை. பஷீரின் மொழி கொள்ளும் எல்லா நெளிவுகளும் சுளிவுகளும் இதற்காகவே. சாதிமதம் எல்லாமே விழுந்து விழுந்து சிரிப்பதற்குரியவை. ஏன், அங்கே அல்லாவேகூட ஒரு மாபெரும் வேடிக்கைதான். சொல்லிய விஷயத்தின் வழியாக பஷீர் சூஃபி ஆகவில்லை, சொல்லும் நடை வழியாகவே அவர் சூஃபி.</p><p>4</p><p>நாடோடியான பஷீருக்கு இந்தியப் பிரிவினை பிடிக்கவில்லை. ஊருக்குத் திரும்பிப் புத்தகக் கடை வைக்கிறார். மூளை குழம்பி அப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்ததனால்தான் மூளை குழம்புகிறது. கையில் கத்தியுடன் "அவன் பல பேர்களில் வருவான்! விடமாட்டேன்" என்று உறுமி நிற்கிறார். எம்.டி. வாசுதேவன்நாயரைப் பார்த்து "அவன் எம்.டி. வாசுதேவன்நாயரின் வடிவிலும் வருவான்!" என்கிறார். உஸ்தாதை ஒருவழியாகக் கையைக் காலைக் கட்டித் தூக்கி எடுத்துக்கொண்டுபோய் ஆயுர் வேத சிகிச்சைக்கு ஆளாக்குகிறார்கள். அதில் முக்கிய அம்சமே கண்களில் அஞ்சனம் எழுதுவதுதான். நாழி குறுமிளகைச் சுக்கில் அரைத்து மையாக்கிக் கண்களில் பூசுவதுபோல் இருக்கும். அதை மூக்கில் ஏற்றும் நஸ்ய சிகிச்சையும் உண்டு. உஸ்தாத் தெளிவாகப் பேசுகிறார், சிரித்து அருகே அமரும்படி உபசரிக்கிறார். வலிய கைகளில் ஆள் அகப்பட்டதுமே பிடித்து அஞ்சனம்பூசி நஸ்யம் ஏற்றிவிடுகிறார். உலகமே மூளை குழம்பி இருக்கும்போது அப்படிச் செய்வது அவரது கடமை.</p><p>வேறுவழியில்லாமல் அவரை நூலன்வாசு அல்லது கடாரி வாசு என்ற எம்.டி. வாசுதேவன்நாயர், என்.பி. முகம்மது என்கிற மம்மு, எஸ்.கெ. பொற்றெகாட், நடிகர் சத்யன் ஆகியோர் அடங்கிய கும்பல் வலுக் கட்டாயமாக நிக்காஹ§க்கு ஆளாக்குகிறது. துணிந்த மனத்துக்குப் பெயர் ஃபாபி. பார்கவி நிலையம் படத்துக்குக் கிடைத்த சன்மானத்தில் ஒரு காட்டுத் தோட்டம் போப்பூர் கடற்கரையருகே வாங்கப்பட்டு பஷீர் அங்கே சுல்தானாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். ஸாஹினா பிறந்து பஷீர் அவளுடைய ஒன்றுக்கும் உதவாத மொட்டைத்தலை 'ற்றாற்றா' ஆக மாறுகிறார். மங்கோஸ்டைன் மரம் நடப்படுகிறது. அதன் கீழே சாய்வு நாற்காலி போடப்பட்டு பாதுஷா பீடிக்கட்டு கடும் சாயாவுடன் வந்து அமர்கிறார்.</p><p>பஷீரின் புனைவுலகின் சிறந்த படைப்புகளில் பெரும்பாலானவை இக்காலகட்டத்துக்குப் பின் எழுதப்பட்டவை என்பதைக் கவனிக்கலாம். பாத்துமாவின் ஆடு கூட இக்காலத்து சிருஷ்டியே. 'விஸ்வவிக்யாதமாய மூக்கு', 'ன்றுப்பாப்பக்கொரானேண்டார்ந்நு' முதலிய கதைகள் எழுதியபோது பஷீரில் இருந்த சிறு அளவு உலக விமரிசனம்கூட இப்போது இல்லாமலாகிறது. இந்த உலகம் சிரிப்பதற்கன்றி வேறெதற்கும் பயன்படாதது என்று பஷீரின் மொழியில் துயிலெழுந்த அக்குழந்தை கண்டடைந்தது. "ற்றாற்றா, தா பீப்ளி பீச்ண மிஸ்கீன்!" என்று தனிமொழி பேசும் ஸாஹினா பஷீரில் செலுத்திய பாதிப்பு மிக அபூர்வமானது என இப்போது படுகிறது. அவளுடைய கண்கள் வழியாக பஷீர் உலகைப் பார்க்கக் கற்றுக்கொண்டார். அவளது மொழியின் வழியாக ஒரு புதிய மலையாளத்தை எழுதிப் பழகினார்.</p><p>குழந்தைக் கண்களால் தலைகீழாக்கப்பட்ட பஷீரின் உலகில் பெரிய விஷயங்களும் பெரிய மனிதர்களும் வேடிக்கை வடிவங்களாக இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதற்காக மத்திய அரசு அளித்த தாமிரப் பட்டயம் காயப்போட்ட நெல்லைக் கொத்தவரும் காகத்தை விரட்டப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு வரும் சகலமான நாயர்மாரும் அவர்களின் ஸ்திரீரத்தினங்களும் கிண்டல்செய்யப்படுகிறார்கள். அதேசமயம் ஆடு மையக் கதாபாத்திரமாகி மொத்த உலகமே அதைச்சுற்றி நடைபெறுகிறது. பஷீர் எழுந்ததுமே கோழி அவரது சுல்தான்பீடத்தில் ஏறி அமர்ந்து ஒருகண்ணை மட்டும் திறந்து என்ன என்று பார்க்கிறது.</p><p>பஷீரின் ஆக்கங்கள் இப்போது 'கிளாசிக்' ஆக மாற்றப்பட்டுவிட்டமையால் அவை தடவித்தடவி விடப்படுகின்றன. உக்கிரமான பெண்ணியர் ஒருவர் அவரைப் போட்டுக் குடைந்து எடுக்கும் நாள் தொலைவில் இல்லை. அவரது புனைவுலகில் பெண்கள் எப்போதுமே பிரியத்துக்குரிய குசும்பினிகள் மட்டுமே. 'பூவன்பழம்' உதாரணம் . அடிதடி நிபுணரான உஸ்தாத் அவர்கள் பரம ஸ்டைலாகக் குடையுடன் வரும் டீச்சர்மீது மையல் கொள்கிறார். 'உன்னை எனக்குப் பெருத்து இஷ்டம்' என்று காதலைத் தெரிவிக்கிறார். "அதற்கு?" என்று ஸ்டைலான பதில் வருகிறது.</p><p>எப்படியோ திருமணம். நாள்தோறும் முதலிரவு. உஸ்தாத் புதையல் காத்த பூதமாக இருக்கிறார். ஒருநாள் இரவில் பீபிக்கு பூவன்பழம் வேண்டுமென்று ஆசை ஏற்படுகிறது. ஊரடங்கிய நேரம். மழை. ஆற்றில் வெள்ளம். உஸ்தாத் மனம் தளராமல் ஏழு மலை, ஏழு கடல் தாண்டிச்சென்றாலும் பூவன்பழம் இல்லை. ஆகவே, திராட்சை வாங்கித் திரும்ப வருகிறார். அதை பீபி தூக்கி வீசி எறிந்துவிட்டு விசும்பி விசும்பி அழுகிறாள். உஸ்தாத் ஒரு சிறிய குச்சியை எடுத்துப் பீபியின் அழகிய தொடையில் அடிக்கிறார். திராட்சையைச் சுட்டிக்காட்டி "இது என்ன? ". நாலைந்து அடிகளுக்குப் பின்னர் பீபிக்குக் காரியம் பிடி கிடைக்கிறது. கண்ணீருடன் "பூவம் பழம்!" என்கிறாள். இருவரும் தொண்ணூறு வயதுவரை சந்தோஷமாக வாழ்ந்தார்கள். சுபம் மங்களம்.</p><p>இந்தக் கதையைக் கதையாகச் சொல்லப்போனால் மிகமிக ஆணாதிக்க நோக்குள்ள ஒரு கதை என்றே படும். உண்மையில் பஷீரின் பல கதைகள் இப்படிப்பட்டவையே. ஆனால், பஷீரின் புன்னகையின் ஒளிமிக்க நடை இதன் தொனியையே மாற்றிவிடுகிறது. ஆதிக்கத்தின் கதை என்ற தளத்திலிருந்து தூக்கிக் காதலின், காமத்தின் விளையாட்டைப் பற்றியதாக ஆக்குகிறது. பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அலகிலா நடனம் ஒன்றின் ஒரு தருணமாக ஆக்கிவிடுகிறது.</p><p>பஷீரின் பெரும்படைப்புகள் என்று இப்போது ஒரு விமரிசகன் சொல்லத்தக்கவை பாத்துமாவின் ஆடு, ஸ்தலத்தே பிரதான திவ்யன், மாந்த்ரிக பூச்ச, ஆனவாரியும் பொன்குரிசும், முச்சீட்டுகளிக்காரன்றே மகள், ஸிங்கிடிமுங்கன் போன்றவை. இவையனைத்துக்குமே ஒரு பொதுத்தன்மை உண்டு என்று காணலாம். இவற்றுக்கு எந்த விதமான மையமும் அர்த்தமும் இல்லை. கதை என்ற ஒன்று இல்லை. இருந்தாலும் அதைச் சொல்லப்போனால் நான்கு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் மட்டுமே ரசிக்கும். வடிவமே இல்லை. பஷீர் அவருக்குத் தோதுபட்ட விஷயங்களைத் தோது பட்ட மொழியில் சொல்லிச் செல்கிறார். விமரிசனம், மையக்கரு எதையுமே தேட முடியாது.</p><p>இருந்தே ஆக வேண்டுமென்றால் எல்லாக் கதைகளிலும் முடிவில் பஷீர் எழுதிவைத்திருக்கும் 'சுபம்' 'சுபமஸ்து' போன்ற வார்த்தைகளையும் "நாயர் ஸ்திரீகளும் நஸ்ராணி ஸ்த்ரீகளும் மாப்பிள ஸ்த்ரீகளும் சகல குசும்பு குன்னாய்மைகளுடனும் நீணாள் வாழட்டே" என்பதுபோன்ற வரிகளையும்தான் சொல்ல வேண்டும். அதிலும் பாத்தும்மாவின் ஆடு முழுக்க முழுக்க 'அர்த்தமில்லாத' கதை. அதில் ஒன்றுமே நடக்கவில்லை. அதைப் பற்றி என்ன சொன்னாலும் அது தவறு. அதில் குடும்ப உறவுகளின் மகத்துவம் பற்றிச் சொல்லியிருக்கிறார் பஷீர் என எங்கோ படித்தேன்? அப்படியா? "பாத்துமா அறிய வேண்டாம். அப்துல் காதர் அறிய வேண்டாம். ஹனீஃபா அறிய வேண்டாம். அபி அறிய வேண்டாம். நீ எனக்கு ஒரு அம்பது ரூபா தா" என்று ஓயாமல் பிடுங்கும் அம்மா வாழும் வீடுதான் குடும்பமா?</p><p>குடும்ப சுயநலங்களின் மையமாக அவ்வீட்டை பஷீர் காட்டுகிறார் என்றும் ஒருவரி வாசித்திருக்கிறேன். முட்டாள்தனம். அந்த வீடு முழுக்க நிறைந்திருப்பது உற்சாகமும் அன்பும்தான். ஆட்டின் மடியும் பஷீரின் பையும் கனத்திருப்பது அவ்வீட்டின் குற்றமா என்ன? அகப்பட்டவர்கள் கறக்க வேண்டியதுதானே? உண்மையில் அவ்வீட்டைப் பற்றி எதையுமே பஷீர் சொல்லவில்லை. எதைப் பற்றியும் பஷீர் சொல்லவில்லை. அவர் வெறுமே வேடிக்கை பார்க்கிறார். இந்திய இலக்கியங்களில் 'சும்மா' எழுதப்பட்ட ஒரே படைப்பு இதுதான். ஆகவேதான் இது என்றும் ஒளிமங்காத ஒரு பேரிலக்கியம்.</p><p>5</p><p>ஆழ்பிரதியே இல்லாத விசித்திரமான பேரிலக்கியம் பஷீர் எழுதியது. உய்த்துணர, சிந்திக்க, குறியீடுகளாக விரிய எந்த வாய்ப்பும் இல்லாத உலகம் அது. நம்முன் கிடப்பது பண்பாடு, தலைகீழாகப் பிரதிபலித்து நெளியும் ஒரு மொழிவெளி. விளையாடும் அர்த்தங்களின் நுண்பரப்பு. இந்த எளிய உலகம் ஆழ்ந்த அர்த்தங்களைத் தேடப் புகுந்தவனுக்குப் புரியாத மந்திரப்புதிர்களாகத் தோன்றி மயக்கக்கூடும். சட்டையைக் கழற்றிவிட்டுக் காட்டாற்றில் குதிப்பவனைப் போல இறங்குபவனைச் சிரித்தபடி குளிர அணைத்துக்கொள்ளும்.</p><p>பஷீரின் மொழி மிகமிகத் தெளிந்த நீரோட்டம். அதற்கு அடித்தளம் இல்லை. ஏனெனில், அடித்தளமே மேல்தளமாகத் தெரிகிறது. பஷீரில் அறிய ஏதுமில்லை. அவரது மொழியுடன் சற்றாவது இணையும்போது நமது மொழி நம்மை விட்டு நீங்கும் '...ம்ணி பல்ய ஒந்நின்' மொழிக்குள் நாம் நுழைவோம். அதுவே பஷீரின் புனைவுகள் அளிக்கும் அனுபவம்.</p><p>பஷீரைப் பற்றிய ஆவணப் படம் பார்த்துவிட்டு அந்த வரியைச் சொன்னவர் யாராக இருந்தாலும் அவர் பஷீரின் நல்ல வாசகர்.</p><p>*********</p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-45491817695375943322010-04-30T12:01:00.001+05:302010-04-30T12:04:13.087+05:30சிறுவர் கதைகள்<div> <p><strong>1. காணாமல் போனவன் - ஜப்பானிய சிறுவர் கதை</strong> </p><p>ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள் மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு </p><p>கேழ்வரகு களி கொடுத்து அனுப்பி இருந்தாங்க. களிய கையில எடுத்ததும் களி<br />தவறி கீழ விழுந்து உருண்டு ஓடிடுச்சு. பாவம் தாத்தா, அந்த தள்ளாத வயசுல களிய துரத்திட்டு ஓடினார். களி ஒரு பொந்துக்குள்ள விழுந்துடுச்சு. அது எலி பொந்து போல இருந்துச்சு.அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார்.நல்ல பசி வேற. அப்ப திடீர்னு ஒரு அழகான எலி எட்டி பாத்து..”மிக்க நன்றி தாத்தா” அப்படின்னு சொல்லுச்சு.அட எலி பேசுதேன்னு பாத்தாரு.”நல்லா சாப்பிடுங்க எலி. அழகா இருக்கீங்களே” ன்னு சொன்னாரு. எலி சிரிச்சிட்டு..”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா?”ன்னு கேட்டுச்சு.<br /><img src="http://vizhiyan.files.wordpress.com/2007/05/rat_cartoon.jpg" align="left" border="2" width="270" height="270" /><br />“இந்த சின்ன பொந்துக்குள்ள நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழ உக்கார்ந்துகிட்டாரு. கால் வலி இருந்துச்சு போல. “என் வாலை பிடிச்சிக்கோங்க தாத்தா.கண்ணை மூடிக்கோங்க” ன்னு சொல்லுச்சு எலி. வாலை பிடிச்சிகிட்டார்.கண்ணை மூடிக்கிட்டார். </p><p>எங்கயோ பறக்கற மாதிரி இருந்துச்சு தாத்தாவுக்கு. “தாத்தா வாங்க வாங்க” அப்படி சத்தம் கேட்டு கண்ணை த் தொறந்தார் தாத்தா. எலிக்களோட அரண்மனை தான் அது.நிறைய தங்கம் இருந்தது. எலிகள் சமைத்துக்கொண்டு இருந்தது. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிட்டு இருந்துச்சு. சில எலிகள் சாப்பாட்டு பொருள்களை எங்கிருந்தோ எடுத்துட்டு வந்துச்சு. எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சு. பெண் எலி ஒன்னு வந்து “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு இருந்துச்சு.. </p><p>“நாங்கள் இங்கே எலிகள்<br />நல்ல நல்ல எலிகள்<br />பூனை சத்தம் வேண்டாமே<br />எங்கும் அமைதி வேண்டுமே<br />திலக்கலக்கா திலக்கலக்கா” </p><p>தாத்தா பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமா சாப்பிட்டார். ராஜா போல இருந்த எலி ஒன்னு தாத்தாவுக்கு மூட்டை நிறைய தங்கம் கொடுத்து அனுப்பிச்சாம்.மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு,கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார். </p><p>வீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாட்டிகிட்ட சொன்னாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு.பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் கேட்டான். அதே பொந்திற்கு போய் ஒரு களி உருண்டைய போட்டான்.அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு. </p><p>“நாங்கள் இங்கே எலிகள்<br />நல்ல நல்ல எலிகள்<br />பூனை சத்தம் வேண்டாமே<br />எங்கும் அமைதி வேண்டுமே<br />திலக்கலக்கா திலக்கலக்கா” </p><p>எலிகள் பாடும் சத்தம்.அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சாம். இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு யோசிச்சான்.பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” என சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல.கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல. எல்லா தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறாதுன்னு தெரியல.இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல.அவனை காணம்னு இன்னும் கூட தேடிட்டி இருக்காங்க.பாவம். </p><p> </p><p><strong>2. சின்னு மரம் - சிறுவர் கதை</strong> </p><p>சின்னு மரம்.”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம்.காட்டின் நடுவிலே இருக்கின்றது.அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை பற்றி தெரிந்து இருக்கும். அதன் பெயர் காரணம் தெரியாமல் போனாலும் அது எந்த இடத்தில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும். இந்த மரத்தை “சின்னு மரம்” “சின்னு மரம்” என்று தான் அழைப்பார்கள். பக்கத்து காட்டில் இருந்து ஏதாவது விலங்கு இந்த காட்டிற்கு வந்து, வழி கேட்டால் “சின்னு மரத்திற்கு முன்னால் போங்க” , ” சின்னு மரத்திற்கு இரண்டாம் மரம்” என மற்ற விலங்குகள் வழி காட்டும். அந்த அளவிற்கு சின்னு மரம் காட்டின் முக்கிய சின்னமாக கருதப்பட்டது. </p><p>அது சரி அது என்ன அணில் மரம். அந்த கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்குமா?. முன்னொரு காலத்தில் இதே மரத்தில் செம்பன், செம்பி என்று இரண்டு அணில் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு சின்னு என்ற அழகான அணில் குழந்தை பிறந்தது.பிறந்த சில மாதங்களுக்கு இது மற்ற அணில்களை போல அமைதியாக நல்ல பிள்ளையாக தான் இருந்தது..ஓட ஆரம்பித்த பிறகு வால்தனம் வந்துவிட்டது. கொஞ்ச வால்தனம் எல்லாம் இல்லை, பயங்கர வால்தனம். எந்த மரத்திற்கு சென்றாலும் கலாட்டா தான். கலாட்டா செய்தால் பரவாயில்லையே, அடாவடி செய்ய ஆரம்பித்துவிட்டது.குறும்பு செய்யும் குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் அடாவடி செய்தால், அடம்பிடித்தால் யாருக்கு தான் பிடிக்கும் சொல்லுங்க.மற்ற அணில்கள் விளையாடும் போது தான் மட்டும் தான் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என சொல்லும்.வயதான காலத்திலும் செம்பனும் செம்பியும் சின்னுவிற்கு உணவினை தேடி எடுத்து வந்து தந்தனர்.சின்னு ஒரு வேலையும் செய்யாமல் இருந்தது. </p><p>சின்னு என்ற பெயரை கேட்டாலே சக வயது அணில்கள் ஓடி ஒளிய ஆரம்பித்துவிட்டன. சின்னுவிற்கு நண்பர்கள் என்றே யாரும் இல்லை. இப்படி இருந்தால் எப்படி நண்பர்கள் கிடைப்பார்களாம்? பெரிய அணில்களுக்கு மரியாதையே தராது சின்னு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என சொல்லும் தன் அம்மா அப்பாவையும் சில சமயம் விட்டுவைக்காது சின்னு. இந்த கவலையில் செம்பன் செம்பி இருவரும் மனம் வருந்தி இறந்துவிட்டன்ர். </p><p>சரி பெற்றோர் இறந்த துக்கத்திலாவது சின்னு சரியாகிவிடும் என நினைத்த அனைவருக்கும் ஏமாற்றம் தான். அப்பா அம்மா உயிருடன் இருந்த போது கொஞ்சமாவது அவர்களுக்கு பயந்து இருந்தது.இப்போது அட்டகாசம் தாங்கமுடியவில்லை.எல்லா அணிலும் கூடி ஒரு முடிவினை எடுத்தது.” நாங்கள் அனைவரும் உனக்கு தினமும் வேண்டிய உணவினை தருகிறோம்.இந்த மரத்தைவிட்டு வரவே வராதே” என்று வேண்டின. சின்னுவால் மற்ற அணில்களின் தின வாழ்கையே பாதிக்கபடும் நிலையில் இருந்ததால் இப்படி ஒரு முடிவினை அனைவரும் எடுத்தனர். </p><p>அதன்படி தினமும், பழம், உணவு அனைத்தும் மரம் தேடி வந்தது. எந்த வேலையும் செய்யாமல் தினசரி உணவு உண்பதே வேலையாக இருந்தது. காடே அதிசயிக்கும்படி ஒன்று நிகழ்ந்தது. சின்னுவின் வால் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போனது. காட்டில் இது தான் பேச்சு. சிங்கம்,புலி, யானை, மான், பாம்பு என எல்லா உயிரினமும் இந்த அதிசயத்தை காண வந்தது. </p><p>மரத்தின் உச்சியில் சின்னு இருந்தால் தரை வரை வால் நீண்டுவிட்டது. மரத்தில் உயரம் முப்பது அடி இருக்கும்.பெருத்த வால் இருப்பதால் நகர்ந்து செல்வதே சிரமமாகிவிட்டது. வால் எங்காவது சிக்கி கொள்ளும்.காட்டிலே ஒரு காட்சி பொருளாகிவிட்டது சின்னு,மற்ற காடுகளில் இருந்துகூட விலங்குகள் வர ஆரம்பித்துவிட்டன.முதலில் பெருமையாக இருந்தது, பிறகு அவர்களின் கேலிப்பேச்சு சின்னுவை என்னவொ செய்தது. </p><p>தன் தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்பட்டது.அப்பா அம்மா சொல்லை கேட்கவில்லையே, யாருக்கும் மரியாதை தரவில்லையே என நினைத்து அழுதது.சின்ன சின்ன வேலைகளை மெதுவாக செய்ய ஆரம்பித்தது.உணவு கொண்டு வருபவர்களிடம் மரியாதையாக நடக்க ஆரம்பித்தது.நல்ல அணிலாக மாறிவிட்டது.சில மாதங்களில் அந்த பெரிய வால் மறைந்து சின்னு மற்ற அணில்களை போன்று மாறிவிட்டது. பொறுப்பு வந்தது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்தது. ஆனந்தமாக வாழ்ந்தது.ஆனாலும் அந்த மரத்தின் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. சின்ன அணில்களுக்கு சின்னுவின் கதை சொல்லி நல்லபடி நடக்க சொல்வது அந்த காட்டின் வழக்கத்தில் வந்துவிட்டது. </p><p> </p><p><strong>3. காக்கா ஏன் கறுப்பாச்சு? </strong>(பர்மா நாட்டு நாடோடிக்கதை) </p><p>ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.<span>அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..</span> </p><p><span></span><span style="color:#000000;"><span>சூரியபூர்</span><span> நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.</span></span> </p><p><span style="color:#000000;"><span></span></span><img src="http://vizhiyan.files.wordpress.com/2007/05/crow_sun.jpg" align="right" border="3" width="560" height="420" /> </p><p><span style="color:#000000;"><span>சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.</span></span> </p><p><span style="color:#000000;"><span></span></span> </p><p><span style="color:#000000;"><span>வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.</span><span></span> </span> </p><p><span style="color:#000000;"><span></span></span> </p><p><span style="color:#000000;"><span>காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.</span></span> </p><p><span style="color:#000000;"><span></span></span> </p><p><span style="color:#000000;"><span>மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.</span></span> </p><p><span style="color:#000000;"><span></span></span> </p><p><span style="color:#000000;"><span>இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?</span></span><span style="color:#000000;"><span></span></span></p></div> <p><span style="color:#000000;"><span></span></span> </p><p><span style="color:#000000;"><span><span style="font-size:100%;"><strong>4. கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் </strong></span> <div> <p> </p><a title="முத்து உவமை" href="http://fleshcia.spaces.live.com/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Pearl_of_great_price.jpg"><img alt="முத்து உவமை" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Pearl_of_great_price.jpg/250px-Pearl_of_great_price.jpg" longdesc="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Pearl_of_great_price.jpg" width="250" height="320" /></a> முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.<br />ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.<br /><br />அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.<br /><br />வேலைக்காரர்களைப் பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.<br /><br />வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.<br /><br />சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.<br /><br />"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.<br /><br />"பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.<br /><br />இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.<br /><br />மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.<br /><br />ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.<br /><br />"முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.<br /><br />"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.<br /><br />கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.</div></span></span></p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-11567405257433897522010-04-30T11:55:00.002+05:302010-04-30T12:00:54.023+05:30குழந்தை வளர்ப்பு என்பதை இன்று பலரும் ஒரு முழுநேர ''வேலையாக'' நினைக்கிறார்கள். காரணம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி என்ற கூட்டுக்குடும்பச் சூழல் இல்லை. அதனால்தான் இன்றைக்கு குழந்தைகள் முழுநேரமும் தங்கள் பெற்றோர்களின் பொறுப்பில் மட்டுமே வளர்கிறார்கள். ஆபிஸ் வேலை, வீட்டு வேலை என்று இரண்டு பக்கமும் அல்லாடும் பெற்றோர்களால் குழந்தைகளின் சின்னச் சின்ன பிடிவாதங்களைக் கூட தாங்க முடியாமல் கோபம் வந்து விடுகிறது. தவிர இந்தக்காலப் பெற்றோர்களுக்கு மணல் வீடு கட்டுதல், பொம்மை வைத்து விளையாடுவதெல்லாம் சுத்த வேஸ்ட். கொஞ்ச நேரம் கிடைத்தாலும், அந்த நேரத்தை மிகவும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று குழந்தைகளை கால்பந்து, சங்கீதம், ஜிம்னாஸ்டிக், கம்ப்யூட்டர் என்று ஏதாவதொரு விஷயத்தில் ஏறக்குறையத் தள்ளிவிடுகிறார்கள்.<br />இது கெட்டதிலும் முடியலாம், நல்லதிலும் முடியலாம், ஆனாலும் பெற்றோர்களின் மனதில் பதிந்த ஆணித்தரமான எண்ணம், ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!'' என்கிற அடிப்படை விஷயம்தான்.<br /><br />சொல்லிச்சொல்லி வலியுறுத்துவதைவிட நேரடியாக களத்தில் இறக்கிவிட்டுவிடலாம் என்ற வகையில் சில பெற்றோர்கள் அந்தந்த துறையின் நிபுணர்களை அணுகி செயலில் இறங்கிவிடுகிறார்கள் இதற்கு இணையதளங்களும் பேருதவியாக இருக்கின்றன.<br /><br />பெற்றோர்களின் குழந்தைகள் மீதான இந்த எதிர்பார்ப்பு, அதற்காக பெற்றோர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நல்லதாகவும் முடியலாம், கெட்டதாகவும் முடியலாம் என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று. மேலும் அந்தக் கருத்துக்கணிப்பில், ''குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய விஷயமானதுக்குக் காரணமே இன்றைய தனிக்குடித்தன குடும்ப அமைப்புத்தான். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய இஷ்யூ ஆனதால்தான் பெரிய பெரிய நகரங்களில் குழந்தை வளர்ப்பைக் கற்றுக் கொடுக்க என நிறைய வொர்க்ஷாப்ஸ் முளைத்துவிட்டிருக்கின்றன. ஒரு மணிநேர கன்சல்டிங் ஃபீஸாக ரூபாய் 500 லிருந்து 2000 வரை டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களிலும் 500லிருந்து 1000 வரை கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களிலும், வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது.<br /><br />குழந்தை வளர்ப்பு என்பது இப்போது ஏன் ஸ்ட்ரெஸ் நிறைந்ததாக இருக்கிறது என்று சைக்யாட்ரிஸ்ட் தேன்மொழியிடம் கேட்டபோது, ''இன்றைய நவீன அம்மாக்களுக்கு தங்கள் குழந்தையின் மீதான திருப்தியின்மைதான் குழந்தை வளர்ப்பு என்னும் மென்மையான விஷயத்தையே ஒரு பிரச்சினையாக பேசும் அளவுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது'' என்கிறார்.<br /><br />உதாரணத்துக்கு தன் குழந்தை 98% மார்க் வாங்கியிருப்பான்... ஆனா, அதற்கு பெத்தவங்க சந்தோஷப்பட மாட்டாங்க... ஏன் 100% வாங்கலை; அவனால் முடியும்.. ஏனோ அவன் 100 மார்க் வாங்கலைன்னு என்கிட்டே வருவாங்க... இந்த திருப்தியின்மைதான் அன்பான பெற்றோர்கள் கூட கோபக்கார பெற்றோர்களாக மாறுவதற்கு முதல் காரணம்.<br /><br />இதனால் கோபம் மட்டுமில்லாமல் மன அழுத்தம், தூக்கமின்மை, எப்பவும் சாப்பிடறதைவிட குறைவாகச் சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது என்று ரொட்டேஷன் வேலைகளெல்லாம் பாதிக்கப்படும். இதை ஸ்ட்ரெஸ் டாலரன்ஸ் லெவல் (Stress tolerance level)னு சொல்லுவோம். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு குழந்தைகள் மீது தொட்டதற்கெல்லாம் கோபம் வரும். தேவையில்லாத எரிச்சல் வரும்.<br /><br />''குழந்தைகள் எப்போதுமே 100ல் 70 பர்சன்ட் தங்களுடைய பெற்றோரின் பழக்கவழக்கங்களைப் பார்த்துத்தான் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். ஒரு தாய் ஓவர் ஸ்ட்ரெஸ”டன் குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் போது, தாயின் ஸ்ட்ரெஸ்தான் குழந்தையின் மனதில் பதியும். இதனால் அந்தக் குழந்தையும் தன் அம்மாவைப் போலவே டென்ஷனாவதற்கும் கோபப்படுவதற்கும் தானாகவே கற்றுக்கொள்கிறது."<br /><br />''குழந்தைகளின் மேல் உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள். அப்படித் திணிக்கும் போது அதை உங்கள் பிள்ளைகள் மறுக்கும். அந்த நேரத்தில் தேவையில்லாமல் நீங்கள் கோபப்பட நேரிடும். இதனால் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு வரலாம். அந்த வெறுப்பு, பார்ப்பவர்கள் மேலெல்லாம் தொடரும்... இதனால் வீட்டிலும், வெளியிலும் உறவுமுறை சுமூகமாக இருக்காது."<br /><br />"குழந்தை தவறு செய்தால் பெரும்பாலான பெற்றோர்கள் கோபத்தில் கெட்ட வார்தைகளைச் சொல்லிக் குழந்தைகளைத் திட்டுவார்கள். அந்த வார்த்தைகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக்கொண்டு, மற்ற குழந்தைகளை அதே கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் கெட்ட குழந்தை என்ற பெயருடன் ஸ்கூலில் ஒதுக்கப்படுகிறார்கள். இப்படி ஒதுக்கப்படும் குழந்தைகள் பின்னாளில் பல கெட்ட பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்வதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது."சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-33973226407122744232010-04-30T11:52:00.001+05:302010-04-30T11:54:29.721+05:30குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் வெளி விளையாட்டு<span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">குழந்தைகள் தங்கள் பாடங்களை மறந்து விட்டு, அதிக நேரம் வெளியே விளையாடுகிறார்களா? அவர்களை தயவு செய்து திட்டாதீர்கள்.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">வீட்டிற்குள் விளையாடுவதைக் காட்டிலும் வெளியில் விளையாடுவதால், குறைந்தபட்சம் குழந்தைகளின் கண்பார்வைக்கு அது சிறந்தது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">ஆஸ்திரேலியாவில் மையோபியா அல்லது கிட்டப்பார்வை குறையுள்ள குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">வீட்டிற்கு வெளியே விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">சமீப காலமாக கிழக்கு ஆசிய நாடுகளில் குழந்தைகளுக்கு மியோபியோ நோய் ஏற்படுவது 80 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">சுற்றுப்புறச் சூழல் நடவடிக்கைகளே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது. </span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">அதன்படி ஆஸ்திரேலியாவின் 12 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 367 பள்ளிக் குழந்தைகளிடம் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">அதிக அளவில் வெளியே விளையாடும் குழந்தைகளிடம் குறைந்த விகிதத்திலேயே மையோபியா நோய் இருப்பது அதில் தெரிய வந்தது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">படித்தல் போன்ற வீட்டிலேயே அதிக வேலையில் ஈடுபட்டு, வெளியில் குறைந்தளவு நேரமே செலவிடும் குழந்தைகளின் கண் பார்வை பாதிப்பு விகிதம் அதிகம் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">உள்ளரங்க விளையாட்டுகளால் எந்தவித பலனும் இல்லை என்றும் அது தெரிவிக்கிறது.</span><br /><br /><span style="font-size: 10pt; color: rgb(0, 0, 0);">எனவே குழந்தைகள் ஆரோக்கியத்தை விரும்புகிறீர்களா? அவர்களை வெளியே விளையாட அனுமதியுங்கள்.</span>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-32401380681837414302010-04-30T11:36:00.000+05:302010-04-30T11:38:41.427+05:30ஆற்றாமை -கு.ப.ரா<p>‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள். <br />‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா. </p> <p>‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’ </p> <p><a href="http://lh4.ggpht.com/_zmZAoGSCETs/Sv7yzd-kF-I/AAAAAAAAEyY/Atg7hxSQ_cQ/s1600-h/momentsweremember5006.jpg"><img style="border-width: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto;" title="momentsweremember500" alt="momentsweremember500" src="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/Sv7y0mn6hdI/AAAAAAAAEyc/uHbq8Lt7s0E/momentsweremember500_thumb4.jpg?imgmax=800" border="0" width="399" height="354" /></a> </p> <p>அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான். </p> <p>‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள். </p> <p>சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் போனாள். </p> <p>அறை சற்று தூரத்திலிருந்தபோதிலும் கொஞ்சம் சாதாரணமாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் ஞாபகம் சில சமயங்களில் இருக்கிறதே இல்லையல்லவா? </p> <p>‘போங்கள்; இதென்ன விளையாட்டு. யாராவது வரப் போகிறார்கள்!’ என்று கமலா மகிழ்ச்சியுடன் சொன்னது அரை குறையாக சாவித்திரி காதில் பட்டது. அந்த அறையில் பொங்கிய இன்பம் ஏறிய காற்று சாவித்திரியிடம் வந்தபொழுது அவள் மூச்சு திணறிற்று. வேதனை உள்ளத்தையும், உடலையும் ஏதோ செய்ய, பெருமூச்சு விட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள். </p> <p>சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிடரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்தி முகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காணோம். </p> <p>சாந்திமுகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலுபேர் ஏதாவது சொல்லுவார்கள் அல்லவா? அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்திவிட்டார்கள். பிறகு பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவுக் காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்கமாட்டார்கள். </p> <p>ஆனால், அந்தச் சாந்திமுகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒருவிதமாக முன்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கின உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அதனால் மறக்க முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று. </p> <p>சாவித்திரி நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்கமுடியவில்லை. </p> <p>‘இந்த கமலாவுக்கு எவ்வளவு கொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாமா குதிக்கச் சொல்லும்? என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்வது வேண்டியிருக்கிறது? நான் கிடக்கிறேன் வாழாவெட்டி போல. என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை. வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறது! சதா இவள் அகமுடையான் சொன்னது என்ன பிரதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவளோ?... ஏன் தலைகீழா நிற்கமாட்டாள். உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்துகிடக்கிறேன், நொந்துபோயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால் _ எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு.’ </p> <p>சாவித்திரி பொருமிக்கொண்டே படுத்திருந்தாள். </p> <p>‘ஏண்டி, ஏந்து குழாய் ஜலம் எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படாதோ, இந்தா காபி!’ என்று அவள் தாயார் வந்தாள். </p> <p>‘எல்லாம் ஆகட்டும். அதற்குத்தானே பெத்தே என்னை. செய்கிறேன். போ!’ </p> <p>‘இதோ இருக்கு காபி. நான் அந்த தெருவுக்குப் போயிட்டு வரேன். ராத்திரிக்கு வரமுடியாதோ என்னவோ...’ ‘நீ வந்து இங்கே என்ன செய்யப்போறே. உங்கண்ணா ஆத்துலேயே இருந்துட்டுவா!’ </p> <p>‘ராத்திரி ஜாக்கிரதையா கதவைத் தாப்பா போட்டுண்டு...’ </p> <p>‘ஆகட்டும், ஆகட்டும் போ!’ </p> <p>அவள் தாயார் நார்மடிப் புடவையைச் சரிபடுத்திக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டு அந்தத் தெருவுக்குப் புறப்பட்டுப் போனாள். சாவித்திரியின் பக்கத்திலிருந்த காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரியின் உள்ளத்திலிருந்த சூடு ஆறவில்லை. </p> <p>புருஷன் ஆபீஸ் போனதும் கமலா வந்தாள். ‘அம்மாமி காபி சாப்பிடல்லயா?’ </p> <p>சாவித்திரி அவளை அசூயையுடன் பார்த்துக்கொண்டு ‘ஆறிப் போய்விட்டது, சாப்பிடவில்லை!’ என்றாள். </p> <p>‘நான் தரட்டுமா? அவருக்குச் சாயந்திரத்திற்குப் பிளாஸ்கில் போட்டு வைத்திருக்கிறேன். தரேனே, பிறகு போட்டால் போச்சு!’ </p> <p>‘வேண்டாம், எனக்கு வேண்டியிருக்கவில்லை. நெஞ்சைக் கரிக்கிறது.’ </p> <p>‘இன்னிக்கி சினிமாவுக்குப் போவோமான்னேன், நாளைக்கு ஆகட்டும்னார். நீங்களும் வர்ரேளா அம்மாமி?’ </p> <p>‘நன்னாயிருக்கு, நீங்க இரண்டுபேரும் தமாஷா போகிறபோது நான் நடுவில்...’ </p> <p>‘போங்க அம்மாமி!’ என்று சந்தோஷத்துடன் கூறினாள் கமலா. சாவித்திரிக்குக் கமலாவின் பூரிப்பு விஷமாக இருந்தது. </p> <p>‘என்ன அம்மாமி, உடம்பு ஒரு மாதிரி இருக்கேளே?’ </p> <p>‘எனக்கென்ன கேடு, ஒன்றுமில்லை.’ </p> <p>‘கருகிய மொட்டு’ என்று ஒÊரு நாவல் கொண்டு வந்திருக்கிறார். படிக்கலாமா?’ என்று சொல்லி, கமலா எழுந்துபோய் புத்தகத்துடன் வந்து உட்கார்ந்தாள். </p> <p>மேல் அட்டையில் சித்திரம் ஒன்று. அதை கமலா வெட்கத்துடனும் சிரிப்புடனும் சாவித்திரிக்குக் காட்டினாள். </p> <p>ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்து ஆழ்ந்து யோசனையிலிருக்கிறான். கையிலிருந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. பின்னால் மனைவி வந்து புன்னகையுடன் நிற்கிறாள். அவனுக்குத் தெரியாமல். </p> <p>‘இதற்கு என்ன அர்த்தம் அம்மாமி?’ என்று கமலா கேட்டாள். </p> <p>‘புருஷன் ஏதோ கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். தருணம் தெரியாமல் அசட்டுமனைவி சிரித்துக்கொண்டு வந்து நிற்கிறாள்போல் இருக்கிறது.’ </p> <p>கமலாவின் புன்னகை மறைந்துவிட்டது. </p> <p>‘அப்படியா இருக்கும்?’ </p> <p>‘வேறென்ன இருக்கப்போகிறது?’ என்று சாவித்திரி சிரித்துக்கொண்டே குரூரமாகச் சொன்னாள். </p> <p>‘இருக்காது, அம்மாமி!’ </p> <p>‘பின் எப்படி இருக்கும்?’ </p> <p>‘வந்து, வந்து புருஷன் அவளை, நினைத்துக்கொண்டே படிக்கிறான். மெய்மறதியில் புத்தகம் கீழே விழுகிறது. அவள் வெகு நேரம் வரவில்லை. கடைசியில்...’ </p> <p>‘அதுதான் இருக்கவே இருக்கே!’ </p> <p>‘படிக்கலாமா?’ </p> <p>‘படியேன்.’ </p> <p>கமலா படித்தாள் வெகுநேரம். சாவித்திரி காதில் எவ்வளவு விழுந்ததோ? </p> <p>‘ஐயோ, நாழியாகிவிட்டதே! படித்துக்கொண்டே இருந்துவிட்டேன். போகிறேன்!’ என்று கமலா மாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் வீட்டிற்குப் போனாள். </p> <p>சாவித்திரி எழுந்திருக்கவில்லை. வீடு கூட்டுகிறவள் வந்தாள். ‘நான் கூட்டிக்கொள்கிறேன் போ!’ </p> <p>பூக்காரி வந்தாள். </p> <p>‘இன்னிக்கிப் பூ வாண்டாம்!’ </p> <p>இருட்டிவிட்டது. இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது. ராகவனும் கமலாவும் கொட்டம் அடித்தது அவளுக்குச் சகிக்கவே இல்லை. வீட்டில் அயலார் இருப்பதுகூட அவர்களுக்கு நினைவில்லையா? ஆத்திரத்துடன் எழுந்து மின்சாரவிளக்கைப் போட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள். </p> <p>‘இலை போட்டுவிட்டேனே வாருங்களேன்!’ என்றால் கமலா. </p> <p>‘அதற்குள்ளா... இப்பவே சாப்பிட்டுவிட்டு...’ </p> <p>‘எனக்குத் தூக்கம் வருகிறது.’ </p> <p>‘தூக்கம் வருகிறதா!’ என்று ராகவன் சிரித்தான். சாவித்திரி காதில் எல்லாம் விழுந்தது. </p> <p>கமலா இலையை வாசலில் கொண்டு போட்டுவிட்டு கம்பிக் கதவையும், ரேழிக் கதவையும் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு திரும்பினவள் எதிர்த்த உள்ளில் சாவித்திரி மயங்கி மயங்கிப் படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, ‘அம்மாமி, சாப்பிட்டாச்சா?’ என்றாள். </p> <p>‘ஆச்சு!’ </p> <p>கமலா உள்ளே போய்த் தாளிட்டுக் கொண்டாள். </p> <p>கலியாணக்கூடம் போட்ட வீடு. இரண்டு பக்கங்களிலும் குடி. இரண்டு பக்கக்கூடத்து உள்ளுகளுக்கும், ரேழியிலும் கதவுகள். </p> <p>இரவு எட்டே மணிதான் இருக்கும். ஊர் ஓசைகூட அடங்கவில்லை. கமலாவின் பக்கத்தில் ஓசை அடங்கிவிட்டது. சாவித்திரிதான் எழுந்திருக்கவே இல்லை. </p> <p>‘ராகவன்!’ என்று வாசலில் மெதுவான குரல் கேட்டது. </p> <p>முதலில் சாவித்திரி வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். பிறகு Êஏதோ நினைத்துக்கொண்டு எழுந்து மெதுவாக ரேழிக்கதவைத் திறந்துகொண்டு திண்ணையண்டை போனாள். </p> <p>வாசலில் ராகவன் வயதுள்ள வாலிபன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். </p> <p>‘ராகவன் இருக்கிறாரா?’ </p> <p>‘இருக்கார்!’ என்று சாவித்திரி கம்பிக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே திரும்பினாள். </p> <p>வாலிபன் ரேழிக்கு வந்து தயங்கினான். </p> <p>சாவித்திரி சற்று மெதுவான குரலில் ‘அந்த ரேழிக்கதவைத் தட்டுங்கள்!’ என்றாள் ஜாடையுடன். </p> <p>வாலிபன் திரும்பவும் தயங்கினான். </p> <p>‘வெறுமனே தட்டுங்கள், திறப்பார்!’ என்றாள். ஒருவிதமான குரூர ஆனந்தத்துடன் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, ஆவலுடன் நடைபெற போவதை எதிர்பார்த்தாள். </p> <p>வாலிபன் ‘ராகவன்’ என்று கதவைத் தட்டினான். </p> <p>சிறிது நேரங்கழித்து ‘யார்?’ என்ற உறுமல் கேட்டது. </p> <p>‘நான்தான்!’ </p> <p>‘நான்தான் என்றால்?’ என்று சீறிக்கொண்டு ராகவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே இருந்தபடியே எட்டிப்பார்த்தான். </p> <p>‘நான்தான் சீனு, மதுரை.’ </p> <p>‘ஓ, வாருங்கள்!’ என்று ராகவன் பலதரப்பட்ட உள்ளக்கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு ரேழியில் நுழைந்து சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான். </p> <p>ஒரு வினாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள் ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென்று எழுந்து கட்டிலை விட்டுக்குதித்து சுவரோரம் ஓடினாள். </p> <p>சாவித்திரி இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப்பூ தொங்கிக்கொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென்று வெளியேறின. </p> <p>அந்தரங்கம் திறந்துகிடந்தது போன்ற அந்த அறையை அதற்கு மேல் அவளால் பார்க்கமுடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள். </p> <p>திடீரென்று ஒரு வருத்தமும், பச்சாதாபமும் தோன்றி அவளைத் தாக்கின. </p> <p>‘என்ன காரியம் செய்தேன்!’ என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்பொழுது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன். ஐயோ...’ </p> <p>அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு கலந்த இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத தோஷமாக, மகாகோபத்துடன் ஆடையைச் சீர்திருத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள். </p> <p>சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான். </p> <p>மெதுவாகக் கட்டிலில் ஏறிக் கமலாவைத் தொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள். </p> <p>‘இன்னொரு கதவையும் நன்றாகத் திறந்து விடுகிறதுதானே!’ </p> <p>‘ஓ, ஞாபகமில்லை கமலா!’ </p> <p>‘ஞாபகம் ஏன் இருக்கும்?’ </p> <p>‘சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப் படுத்துகிறாய்?’ </p> <p>‘சின்ன விஷயமா? என் மானம் போய்விட்டது.’ </p> <p>ராகவனுக்கு அதுவும் இதுவுமாக எரிச்சல் கிளம்பிற்று. </p> <p>‘எவ்வளவு போய்விட்டது?’ என்று சீறினான். </p> <p>‘போதும் வாயை மூடுங்கள். அண்டை அயல் இருக்கிறது!’ என்று அவளும் சீறினாள். </p> <p>சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப்படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். </p> <p>‘பாவியை என்ன செய்தால் என்ன?’ என்று புலம்பினாள். </p> <p>கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது. </p> <p>‘திருப்திதானா பேயே!’ என்று சாவித்திரி தன்னைத் தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள். </p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-21101533374351990032010-04-30T11:30:00.001+05:302010-04-30T11:35:06.752+05:30ஒரு நாள் கழிந்தது -புதுமைப்பித்தன்"கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர். <br />கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும். <br />முருகதாசரைப் பொறுத்தவரை (அது அவரது புனை பெயர்) அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம். <br />மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார். <br />சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை. <br />சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானோ என்னமோ! <br />'குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி' என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித்தான் முருகதாசர் வீடு வேட்டையின் போது அங்கே நுழைந்தார். <br />உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல் வகையராவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, நாலு பேர் வந்தால் பேச இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான 'பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர். <br />பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார். <br />இடைவழியில், குழாயடியில், உள்ள வழுக்குப் பிரதேசம். அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள 'பிராட்வே' யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம் "கமலம்!" என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார். <br />உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ லட்சணமோ! விறகைத்தான் பார்த்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணீலே முக்கிக் கொடுத்தானா? எரியவே மாட்டுதில்லை? இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்?" என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப் பட்டது. <br />"தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!" என்று நடைப் பக்கமாகப் பின் நோக்கி நடந்தார். <br />"இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சிக் கொள்ளணும்!" என்றாள் கமலம். <br />"குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக் கொள்ளப் படாதா?" என்று அதட்டினார் முருகதாசர். <br />"ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே... செட்டியார் வந்து விட்டுப் போனார், நாளை விடியன்னை வருவாராம்!" என்றாள் கமலா. <br />முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை. <br />"வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வாரத்துக்கு நேரம் காலம் இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார். <br />"அங்கே, எங்கே போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!" <br />"எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமிலே!" என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர். <br />"அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே(*மிளகுப் பெட்டி - ஐந்தரைப் பெட்டி) மூணு துட்டு (*ஓர் அணா; ஒரு துட்டு - நான்கு பாண்டி நாட்டு தம்பிடி) இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!" <br />"வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன பொறவா என்னை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!" <br />"சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!" <br />இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகி விட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் 'லைட்டிங் டைம்' அட்டவணையைக் கூட மதிக்காமல் அது இருண்டுவிடும். <br />இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று. <br />முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; 'சாகாவரம் பெற்ற' கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார். 'டபாஸா' வீரிய மாத்திரையின் மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர்மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்! <br />வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம். எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார். <br />பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்த வரை அவர் இந்தப் 'பணம்' என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர். பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகி விட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோ ம் வேலை பார்த்தோம் வந்தோம் என்று இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை. நிதி மந்திரியாக இருந்தால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா? <br />கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, 'சாகாவரம் பெற்ற' கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்துவிட்டு, இந்த 'லிப்டன் தேயிலை', காப்பி கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது. <br />முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கி வைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிக்கை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில் தான் எழுதிக் கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி. அதனால்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.ஸி.ஏ (ஜீவஹிம்சை நிவாரண சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையும் சகித்துக் கொண்டிருப்பார்கள். <br />சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. <br />"ஏட்டி என்ன! நீயோ, உன் லட்சணமோ?" என்று ஆரம்பித்தார் முருகதாசர். <br />ஒரு ரிக்ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள். ரிக்ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது போலும்! <br />"ஏட்டி!" என்றார் முருகதாசர் மறுபடியும். <br />"இல்லையப்பா? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்பிடுவேன்னியே!" என்று சொல்லிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். <br />"தீப்பெட்டி எங்கடீ?" என்றார் முருகதாசர். <br />"கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான். அப்பா!" <br />"குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?" <br />"அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்..." என்று நீட்டிக் கொண்டே போனான் ரிக்ஷாக்காரன். <br />"அப்பா, அவன் பங்கஜத்தே மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!" என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா? <br />"அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!" என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர். <br />பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், "சாமி! இந்த மாதிரியிருந்தா கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!" என்றான். <br />"நானும் பிழைக்க வந்தவன் தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னே பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா?" <br />"போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ.2.5.4 ஆச்சு. எப்ப வரும்?" <br />"தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!" <br />"பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?" <br />"எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை இல்லாவிட்டால் திங்கள்கிழமை." <br />"திங்கட்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!" என்றான். <br />"சரி, பார்க்கிறேன்!" என்று திரும்பினார் தாசர். <br />"பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!" <br />ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை. <br />பாதி வழியில் போகையில், "அப்பா!" என்றது குழந்தை. <br />அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னையறியாமல் கொஞ்சம் கடினமாக, "என்னடி!" என்றார். <br />"நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!" <br />"கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!" <br />"அதோ பார். பல்லு மாமா!" <br />முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது. <br />"எங்கடி!" <br />"அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கிவிடப்பா!" என்று அவரது கையிலிருந்து வழுக்கி விடுவித்துக் கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது. <br />"மெதுவா! மெதுவா!" என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும்? <br />"மாட்டேன்!" என்றது. அதற்கப்புறம் ஏக களேபரம். பாவாடை தடுக்கிற்றோ என்னமோ? அலமு வலுக்கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள். <br />பிள்ளையவர்கள் ஓடிப் போய்க் குழந்தையை வாரி எடுத்தார். ஆனால் இவர் பதட்டத்திற்கு ஏற்ப அங்கு குழந்தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை. <br />"தோளுக்கு மேலே தொண்ணூறு, தொடச்சுப் பார்த்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக் கொண்டு குழந்தை எழுந்தது. <br />"என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விடலாமா?" என்று சொல்லிக்கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார். <br />"என்ன ஸார் செய்யட்டும்! என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளிலே புறப்பட்டாச்சா, அப்புறம் தேடிக்கொண்டு பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரனோடு தர்க்கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார். உள்ளே! ஒன் மினிட்! விளக்கை ஏத்துகிறேன்." <br />குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், "பல்லு மாமா வந்துட்டார்!" என்று பொதுவாக உச்ச ஸ்தாயியில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள். <br />"குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத்திற்காவது அனுப்பக் கூடாதா?" என்றார் நண்பர். <br />"ஆமாம் ஸார். தொந்திரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்" என்றார் முருகதாசர். விளக்குத் திரியை உயர்த்திக் கொண்டே. <br />"நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன்..." என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை. <br />"அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே வந்தான்னா ஆபீஸுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப் போயிடரது...மின்னே வந்தப்போ, என்ன எழவு சொன்னானோ, அந்த ஆர்ட்டிஸ்ட் 'பதி' இருந்தானே அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்..." என்று படபடவென்று பேசிக்கொண்டே போனார் முருகதாசர். <br />"அப்படிப் பாத்தா உலகத்திலே யார்தான் ஸார் நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்ப பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கிறான்?" <br />"சவத்தெ தள்ளுங்க, ஸார்! பேன் பார்த்தாலும் பார்க்கும். காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண்டாம்... நீங்க என்ன சொல்ல வாயெடுத்தீர்கள்?" <br />"அதுதான். உங்களெப் பத்திதான் ஒரு இங்கிலீஷ்காரனிடம் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தான்..." <br />"இவ்வளவுதானா! கதையை எழுதரேன் அல்லது கத்தரிக்காயை அறுக்கிறேன், இவனுக்கென்ன?..." <br />அதே சமயத்தில் வெளியிலிருந்து "முருகதாஸ்! முருகதாஸ்!" என்று யாரோ கூப்பிட்டார்கள். <br />"அதுதான்! அவன் தான் வந்திருக்கிறான் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு..." <br />"'சைத்தான் நினைக்கு முன்னால் வந்து நிற்பான்' என்பதுதான்!" என்று முணுமுணுத்தார் முருகதாசர். <br />பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, "யாரது?" என்றார். <br />"என்ன? நான் தான் சுந்தரம். இன்னும் என் குரல் தெரியவில்லையா?" என்று உரத்த குரலில் கடகடவென்று சிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது. <br />"என்ன சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு! அலமு!" என்று உரக்கக் கூவினார் முருகதாசர். <br />எங்கிருந்தோ, "என்னப்பா!" என்று அலமுவின் குரல் வந்தது. <br />"அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!" <br />"நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்." <br />"வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு 'பிஸினஸ்' ஆக இருந்து, அதில் ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் அதையும் விட்டா வைக்கிறது? நான் பத்திரிகையை விட்டுவிட்டா கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்கு 'பிளான்' போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் 'சென்ட்ரல் ஐடியா' என்ன தெரியுமா?..." <br />"நீங்க நேற்று பொருட்காட்சிக்குப் போனீர்களாமே!" என்று பேச்சை மாற்ற முயன்றார் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர் கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக் கொண்டிருப்பார்! <br />"அப்பா! காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகணும். சுடுது!" என்று சொல்லிக் கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய் ஒற்றைக் காலை ஆட்டிக் கொண்டு நின்றாள் அலமு. <br />"அம்மா எங்கே?" <br />"அம்மா சாதத்தெ வடிச்சுக்கிட்டிருக்கா, அப்பா!" <br />"சரி! இதோ வாரேன், போ!" <br />"வாயேன்!" <br />"வாரேன்னா, போடீ உள்ளே!" <br />"காப்பி ஆறிப்போயிடும், அப்பா!" <br />"இதோ ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றார். <br />"மாமா! நீ என்ன கொண்டாந்தே!" என்று கேட்டுக் கொண்டு, சுப்பிரமணிய பிள்ளை மடியில் உட்கார்ந்து, கழுத்திலிருக்கும் நெக்டையைப் பிடித்து விளையாட ஆரம்பித்தாள் அலமு. <br />"அதெப் பிடித்து இழுக்காதே! மாமாவுக்கு கழுத்து வலிக்கும்!" என்றார் சுந்தரம் பிள்ளை. <br />"வலிக்காதே!" என்று மறுபடியும் ஆரம்பித்தாள். <br />முருகதாசரும் மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். <br />"என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா?" <br />"உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு." <br />"மாட்டேன்" என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை. <br />முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம் கையில் ஒரு டம்ளரைக் கொடுத்தார். <br />சுந்தரம் வாங்கி மடமடக்கென்று மருந்து குடிப்பது போல் குடித்து விட்டு, "காப்பி வெகு ஜோர்!" என்று சர்டிபிகேட் கொடுத்தார். <br />மற்றொரு டம்ளர் சுப்பிரமணிய பிள்ளையிடம் கொடுக்கப்பட்டது. "மாமா! எனக்கில்லையா?" என்று அவரிடம் சென்று ஒண்டினாள் அலமு. <br />"வாடி, நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம்!" என்றார் முருகதாசர். <br />"மாமாகூடத்தான்!" என்றது குழந்தை, சுப்பிரமணியபிள்ளை கையிலிருந்த டம்ளரில் அலமுவைக் குடிக்கச் செய்தார். <br />பாதியானதும், "போதும்!" என்றது குழந்தை. <br />"இந்தாருங்க ஸார்!" என்று மற்ற டம்ளரையும் நீட்டினார் முருகதாசர். <br />"வேண்டாம்! வேண்டாம்! இதுவே போதும்!" என்றார் சுப்பிரமணிய பிள்ளை. <br />"நான்சென்ஸ்!" என்று சொல்லிவிட்டு, குழந்தை எச்சிற்படுத்தியதைத் தாம் வாங்கிக் கொண்டார் தாசர். <br />"நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர். <br />"கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார் சுந்தரம். <br />கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை. <br />தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர். <br />"ஏது அவசரம்!" <br />"சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது...திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!" <br />"அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இது தான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம். <br />"இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர். <br />"அப்பொ..." என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார். <br />"பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை பெற்றுச் சென்றார். <br />முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார். <br />"அங்கெ என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்! <br />"நீதான் இங்கே வாயேன்!" <br />கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள். <br />"சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!" <br />"உங்களுக்கும்... வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள். <br />"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?" <br />"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!" <br />"அதற்கென்ன இப்பொழுது!" <br />"போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!" <br />"திங்கட்கிழமைக்கு?" <br />"திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7256710743024428352.post-70905549995796465112010-04-30T11:28:00.000+05:302010-04-30T11:29:55.444+05:30கிருஷ்ணன் வைத்த வீடு -வண்ணதாசன்<p>கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.</p><p>அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன்.</p><p><a href="http://lh3.ggpht.com/_zmZAoGSCETs/Svr_DxKJKFI/AAAAAAAAEuU/JIfndQiMXho/s1600-h/Modern-Art-Paintings-Prints-34%5B5%5D.jpg"><img style="border: 0px none; display: inline;" title="Modern-Art-Paintings-Prints-34" alt="Modern-Art-Paintings-Prints-34" src="http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/Svr_E6WkYwI/AAAAAAAAEuY/pYiO3f7b28c/Modern-Art-Paintings-Prints-34_thumb%5B3%5D.jpg?imgmax=800" border="0" width="387" height="272" /></a> </p><p>பாப்புலர் டாக்கீஸில் 'தாமரை நெஞ்சம் ' படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் சிரிப்பு இருந்தது.</p><p>'நீ எங்கேடாஇருக்கே ? ' என்றான்.</p><p>'எங்கள் வீடு இந்தப் பக்கம்தானே ' என்று சொல்லி அவனை வீட்டுக்கு வந்துவிட்டுப் போகுமாறு அழைத்தேன்.</p><p>தனுஷ்கோடி அழகர், தியேட்டர் முன்பு தரையில் பரப்பி வைத்துப் பாட்டுப் புத்தகம் விற்கிற மனிதரைப் பார்த்தான். வளைந்து திரும்புகிற வாய்க்காலில் தண்ணீரே தெரியாமல் பூத்துக்கிடந்த நீலநிறப்பூக்களைப் பார்த்தான். விறகுக் கடையில் விழுந்து கொண்டிருந்த சம்மட்டி அடியிலிருந்தும் ஈரவிறகு வாசனையில் இருந்தும் என்னுடைய அழைப்புக் குறித்த முடிவை எடுத்தது போல் 'சரி, போவோம் ' என்றான். பத்தடி முன்னால் போய்க்கொண்டிருந்த விடுதி நண்பர்களிடம், தான் அப்புறம் வருவதாகக் கையைக் காட்டினான்.</p><p>பெருமாள் கோயில் தெருப்பக்கம் நின்ற தேரை நிதானமாகப் பார்த்து, அது எந்தத் திருவிழாவுக்கு ஓடும் என்று விசாரித்தான். 'எல்லா ஊர் சலூன்களுக்கும் ஒரே மாதிரிக் கதவுகள்தான் இருக்கின்றன ' என்று சொல்லிக்கொண்டே சந்திப்பிள்ளையார் முக்குவரை நடந்தான். வாடகைக்கு நிற்கிற ஒற்றை மாட்டு வண்டிகளைப் பார்த்து ஆச்சரியம் அவனுக்கு.</p><p>பக்கத்தில் நிற்கிற காந்தி சிலையைப் பற்றி, முக்கியமாக காந்தியின் கால்களைப் பற்றி சிலாகித்தான். என்னைப் போலவே அவனுக்கும் காந்திசிலைக்குப் பக்கத்தில் பழக்கடை போட்டிருப்பவர் எப்போதும் ஊதாச்சட்டைதான் போடுவாரா என்கிற சந்தேகம் வந்தது. அவன் அந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் தனுஷ்கோடி அழகருக்கும் எனக்கும் ரொம்ப நெருக்கம் உண்டாகிவிட்டது போலத் தோன்றியது.</p><p>இந்த நேரத்தில் அப்பா வீட்டில் இருப்பாரா என்று சந்தேகம் உண்டாயிற்று. அம்மா மட்டும் இருந்தால் கூட நல்லது. தின்பதற்கு ஏதேனும் கொடுத்துக் காபியையும் தனுஷ்கோடி அழகருக்குத் தரமுடியும் எனில் நன்றாக இருக்கும். ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிடமுடியும்.</p><p>அம்மா முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்தான் கொண்டுவந்து கொடுப்பாள். கொடுப்பதற்கு முன் டம்ளரின் வெளிப்புறத்தில் வழிகிற சொட்டுக்களை லேசாக விரல்களால் துடைத்துவிடுவாள். அந்தத் துடைப்பிலேயே எல்லா மாயமும் நிகழ்ந்துவிடும். அம்மாவிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்த யாரும் அம்மாவை மறந்திருக்க முடியுமா.. தெரியவில்லை.</p><p>ஆனால், தனுஷ்கோடி அழகர் அம்மாவை மறந்துவிட்டது போலத்தான் இருந்தது. இத்தனை வருடங்களுக்கு அப்புறம் என்னைப் பார்க்கிறவன் அம்மாவைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.</p><p>'அந்த கிருஷ்ணன் வெச்ச வீடு இப்ப இருக்கா ? ' என்று கேட்டான்.</p><p>'கிருஷ்ணன் வைத்த வீடா ? அதை நீ எப்போ பார்த்தே ? ' என்று கேட்ட என்னுடைய குரலின் ஆச்சரியம் எனக்கே விநோதமாக இருந்தது. யாருக்கும் தெரியாது என்றும் தெரியக்கூடாது என்றும் நான் என்னுடைய ரகசிய அறையில் ஒளித்து வைத்திருந்த ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் அவன் தொட்டுவிட்டது எப்படி என்று தெரியவில்லை.</p><p>எங்கள் தெருவில் கிருஷ்ணன் வைத்த வீட்டுக்குத் தனியான அடையாளமும் மரியாதையும் கூட இருந்தது.</p><p>ஒரு சுடலை மாடசாமி பீடத்தை ஆரம்பமாக வைத்து, நூல் பிடித்த மாதிரி சிறியதும் பெரியதுமாக ஐம்பது நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காரை வீடுகளுக்கும் மட்டப்பா போட்ட வீடுகளுக்கும் மத்தியில் 'கிருஷ்ணன் வைத்த வீடு ' துண்டாகத்தான் தெரியும்.</p><p>மற்ற எல்லா வீடுகளும் தரையோடு தரையாக, தெருவும் சாக்கடையுமாக இருக்கிற முன்வாசல் நடையுடன் துவங்குகிறபோது கிருஷ்ணன் வைத்த வீடு நான்கு ஐந்து படிகளுடன், ஆற்றங்கரையில் வெள்ளம் வந்தால் பாதிக்கக் கூடாது என்பது போல கட்டப்பட்டிருக்கும். பத்தடிக்குக் கீழ் தெரு பள்ளத்தில் இருப்பதுபோல வீட்டின் கட்டுமானம் துவங்கும்.</p><p>நெடுநெடு என்று வரிசைக்கு இரண்டு பாக்குமரம், இரண்டு தென்னைமரம், முன் வாசலில், நட்டநடுவில், புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் பொம்மை. பொம்மையின் முதுகுக்கு அண்டை கொடுத்தது மாதிரியான குழாயின் உச்சியில் நீலமான ஒரு ரசகுண்டு. ராத்திரியில் உள்ளுக்குள் பல்பு எரியும். தெருவில் போகிறவர் வருகிறவர்கள் தற்செயலாக ஏறிட்டுப் பார்த்தால், கிருஷ்ணன் நேரடியாக நிலா வெளிச்சத்தில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு அந்த வீட்டின் முன்னால் நிற்கிறது மாதிரி இருக்கும்.</p><p>அதற்கப்புறம் வீடு ஆரம்பிக்கும். தார்சா, பட்டாசல், இரண்டாம் கட்டு, அரங்குவீடு, அடுக்களை என்ற அமைப்பு இல்லாமல் வேறு தினுசில் இருக்கும். செங்கோட்டை என்கிறதும், திருவனந்தபுரத்தில் கரமனை என்கிறதும், இல்லையில்லை இங்கே முனைஞ்சிப்பட்டி மூலைக்கரைப்பட்டி என்கிறதுமாக அந்த வீட்டு ஆட்களின் ஊரைப் பற்றி வெவ்வேறு பேச்சும் அனுமானமும் இருந்தது.</p><p>நாகர்கோவிலில், நாகர்கோவிலைத்தாண்டி இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய ஓட்டல்கள் வைத்திருக்கிறாதாகவும் பெண்ணினுடைய படிப்பையும் பையனுடைய படிப்பையும் உத்தேசித்து இங்கே இருப்பதாகவும் தான் சொன்னார்கள்.</p><p>இங்கே கார் நிறுத்துவதற்கு இடமில்லை என்பதால், அடுத்த முடுக்கில் ஒரு காடினாவை வாடகைக்குப் பிடித்திருப்பதும், வீட்டு வாசலில் வந்து ஏற்றிக்கொண்டுபோய், மறுபடி வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிடுவதும், தவிர, அந்த வீட்டுக்காரர்கள் நடந்துபோய் எங்கள் தெருவில் யாரும் பார்த்ததில்லை என்பதும் வாஸ்தவம்தான்.</p><p>பையனுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வகுப்பிலேயே இரண்டு தடவை உட்கார்ந்துவிட்டான் என்றும், ஆனால், அவனுடைய அக்கா மகா கெட்டிக்காரி என்றும் சொன்னார்கள்.</p><p>வழக்கமாக காலேஜ் தினத்தில் பரதநாட்டியம் ஆடுகிற டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மகளைப் போன இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்ணினுடைய நடனம் என்று குனிந்த தலை நிமிராமல் ஐந்தாம் நம்பர் பஸ் ஏறி கல்லூரிக்குப் போய்விட்டு வருகிற காந்திமதி அக்கா சொல்கிறாள்.</p><p>கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்களைப் பார்த்தது என்பது ரொம்பத் தற்செயலாகவும் அவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாத ஒரு நேரத்திலும் எனக்கு வாய்த்தது.</p><p>பிச்சம்மாள் ஆச்சி செத்துப் போயிருந்தாள். ஆயுள் பூராவும் வீடு வீடாகத் தோசைக்கு அரைத்துக் கொண்டும் முறுக்கு சுற்றிக் கொடுத்துக் கொண்டும் இது எல்லாம் போதாமல் எப்போதும் இரண்டு மூன்று பூனைக்குட்டிகள் வளர்த்துக் கொண்டும் ஒருத்தி இருக்க முடியும் என்றால், அது பிச்சம்மா அக்கா என்கிற பிச்சம்மா ஆட்சிதான். தெருவில் இருக்கிற எல்லோருமாகச் சேர்ந்துதான் அவளைத் 'தூக்கிப் போடவேண்டிய ' நிலைமை. பாடைக்குக் கிடுகு பின்னுவதற்குத் தென்னை ஓலலித் தேவைப்படும் இல்லை... அதற்காகத்தான் நான் கிருஷ்ணன் வைத்த வீட்டுப் படியேறிப் போனேன்.</p><p>எனக்கும் தென்னங்கிடுகுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் இதன் பொருட்டுஎன்னை இங்கே அனுப்பின குரல் எது என்று இப்போது ஞாபகமில்லை. வழக்கம் போல இது போன்ற நல்லது -- கெட்டதுகளில் முன்னால் நின்று உத்தரவு இடுகிற மீசைப் பெரியப்பா குரலோ, ராமையாப்பிள்ளை குரலோ அல்ல அது. அசரீரி மாதிரி அது எங்கிருந்தோ கேட்க, எங்கிருந்தோ நானும் வந்திருக்க வேண்டும் என்று படுகிறது.</p><p>நான் சத்தம் கொடுத்து ரொம்ப நேரம் கழித்து, 'சசி... வாசலில் யாருன்னு பாரு ' என்று குரல் கேட்டது. கதவுகள் திறந்து மூடுகிற நுட்பமான நேரம். கனகாம்பர கலரில் ஒரு தாவணியும் கையில் புத்தகமுமாக அந்தப் பெண் வந்தது. நான் விவரம் சொல்லி, தென்னங்கீற்று வெட்டிக் கொள்ள அனுமதி கேட்டேன்.</p><p>'யாரு சசி ? ' மறுபடியும் உள்ளிருந்து குரல் வந்தது.</p><p>'வர்றேம்மா ' என்று உள்ளே நகர்ந்த பிறகும் அந்த இடத்தில் கனகாம்பர கலர் இருந்தது. சசி என்ற பெயரின் உச்சரிப்புக் காற்றில் அலைந்தது.</p><p>சசியும் சசியுடைய அம்மாவும் வந்தார்கள்.</p><p>சசியின் கையில் அரிவாள் இருந்தது. இந்தப் பக்கத்து அரிவாள் மாதிரி இல்லை. அது கூட வேறு மாதிரி இருந்தது.</p><p>'வெட்டிக்கொள் ' ' என்று இரண்டு பேருமே சொல்லவில்லை. சசி அரிவாளைத் தரையில் குனிந்து வைக்கும்போது ஜடை முன்னால் விழுந்து, கிட்டத்தட்ட தரையைத் தொட்டது. மஞ்சள் ரிப்பன் பட்டுப் பூச்சி மாதிரி பறந்தது.</p><p>நான் பக்கத்து வீட்டு காம்பெளண்ட் சுவரில் ஏறி, வேப்பமரக் கிளையில் உட்கார்ந்து கைக்கு எட்டின தென்னங்கீற்றை இழுத்துப் பிடித்து வெட்டினேன். குறுக்கே போன மின்சார ஒயரில் சற்றுத் தொங்கி ஆடி, தென்னங்கீற்று 'சலார் ' என்று கீழே விழுந்தது.</p><p>சசியும் சசியின் அம்மாவும் வாசலிலேயே நின்றார்கள்.</p><p>தூரத்திலிருந்து அவர்களை பார்க்கமுடிந்தது போல, பக்கத்தில் போனதும் பார்க்க முடியவில்லை. அரிவாளைக் கீழே வைத்தேன். 'தாங்க்ஸ் ' என்று சொன்னது யார் காதிலும் விழுந்திருக்க முடியாது.</p><p>வெளியே கேட்காமல் சொன்ன அந்தச் சொல், பனிக்கட்டி போல உருகி ஓடி சசியின் கால் பெருவிரலைத் தொடுமுன் ஆவியாகிக் கொண்டிருந்தது.</p><p>வெளியே நடையிறங்கும்போதுதான், கிருஷ்ணன் வைத்த வீட்டின் கிருஷ்ணன் பொம்மையை இவ்வளவு நேரமும் சரியாகக் கூட பார்க்கவே இல்லை என்று புரிந்தது. இத்தனைக்கும் அது வாசல் நடுவில்தான் இருந்தது. அதைச் சுற்றித்தான் நான் போனது, கேட்டது, வந்தது.. எல்லாம்.</p><p>மறுபடியும் தனுஷ்கோடி அழகர் கேட்டான்.</p><p>'நான் பார்த்தது இருக்கட்டும். கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? அதைச் சொல்லு. '</p><p>எனக்கு ஒரு கேள்வி - பதில் போல அவ்வளவு திட்டவட்டமாக அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. வாசல் முழுவதும் புல் பூண்டுகள் மண்டி, ஒரு மழைக்காலத்துக்கு பிந்திய வெயில் நாளில், தட்டான் பூச்சிகள் பறக்கிற கோலத்தில், வாசிக்கின்ற புல்லாங்குழல் முற்றிலும் உடைபட்டு, மூக்கு நுனி மூளியாகி, வலது முழங்கைப் பக்கம் துருபிடித்த கம்பி தெரிய கிருஷ்ணன் அந்த வீட்டில் கால்மாற்றி நிற்பதைப் பற்றி தனுஷ்கோடி அழகரிடம் சொல்ல வேண்டுமா என்ற தயக்கம் வந்தது. உண்மையின் கரிக்கோடுகளால், முப்பது வருஷத்துக்கு முந்திய ஞாபகத்தின் சுவர்களில், தனுஷ்கோடி அழகர் வரைந்து வைத்திருக்கிற, கிருஷ்ணன் வைத்த வீடு பற்றிய சித்திரங்களை நான் கோரப்படுத்த வேண்டுமா ?</p><p>நான் இரண்டாவது முறை அந்த வீட்டைப் பார்த்த கோரத்தை விடவா பெரிய கோரம் இருக்கப் போகிறது. நான் மட்டுமா பார்த்தேன் ? தெருவே அல்லவா கூடிப் பார்த்தது. இந்த வீட்டில், பக்கத்து வீட்டில், வேப்பமரக்கிளையில், நகைக்கடைச் செட்டியார் வீட்டுச் சுவரில் என்று எங்கேயெல்லாம் ஆட்கள் இருந்தார்கள். மோர் விற்பதற்கு வருகிற சுப்பையா கோனாருடைய வீட்டுக்காரிகூட பிரப்பங்கூடையும் கறுத்த மோர்ப்பானையும் தலையில் இருக்க, பச்சைக் குத்தின கையால் சேலையை வாயில் வைத்துப் புதைத்துக் கொண்டு நின்றாள். ஓர் இடத்தில் ஐந்து நிமிடம் நிற்கிறவளே இல்லை அவள் '</p><p>போலீஸ்காரர்கள் 'தள்ளிப்போ, தள்ளிப்போ ' என்று மச்சுப்படியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டே இறங்குகிறார்கள். முனிசிபல் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு வரப்பட்டவர்கள் தலைப்பாகையை அவிழ்த்து மூக்கை மறைத்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஜமுக்காளத்தின் நான்கு மூலைகளையும் நான்கு பேர்களாகப் பிடித்தபடி ஒவ்வொரு உடம்பாகக் கீழே கொண்டுவந்து வாசலில் வைக்கிறார்கள்.</p><p>முதலில் அந்த வீட்டுப் பையன் உடம்பு. அடுத்து அநேகம் பேர் பார்த்தே இராத அந்த வீட்டுக்காரர் உடம்பு.</p><p>தூக்கிக்கொண்டு வந்த தோட்டிகளில் ஒருத்தர், 'இப்படிப் பண்ணிட்டாங்களே முதலாளி ' என்று கீழே உட்கார்ந்து அழுதார். தோள்பட்டையில் கையைக் கொடுத்துத் தூக்கி ஒரு போலீஸ்காரர் அவரை விரட்டினார்.</p><p>மறுபடியும் மேலே ஏறினார்கள்.</p><p>அந்த அம்மாவைக் கொண்டுவரும்போது நிறையச் சிரமம் இருந்தது. பிடித்துக்கொண்டு வந்த போர்வை, கனம் தாங்காமல் சரிந்துவிடுவது போலவும், படிகளில் தாங்கித் தாங்கி இறங்கித் திசைமாற்றிக் கொண்டு வருவதில் தள்ளாட்டமும் இருந்தது. அதிகம் நாற்றம் அடித்தது என்று கூடச் சொல்லவேண்டும்.</p><p>ஏற்கனவே நிறையப் பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள்.</p><p>கடைசியாக சசியை இறக்கும்போது எல்லோரும் வாய்விட்டுச் சத்தம் போட்டு அழுதார்கள். இன்னது என்று சொல்லமுடியாத வகையில் புலம்பல் இருந்தது.</p><p>'அட, பாதகத்தி ' ' என்ற குரல் சுழன்று சுழன்று வருகிற ஒரு கூர்மையான கத்தி போல கிருஷ்ணன் வைத்த வீட்டின் மேல் விழுந்து இதுவரை மூடிக்கொண்டிருந்த எல்லாத்திரைகளையும் கிழித்து எறிந்துவிட்டு அப்புறம் போனது.</p><p>பழைய சேலைகளாலும், அழுக்கு வேட்டிகளாலும் மூடப்பட்டு வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்த நான்கு உடல்களிலும், கிருஷ்ணன் சிலைக்கு மிக நெருக்கமாக சசியின் உடல் இருந்தது. கொலுசும் பாதமும் தெரிந்த இடது காலை, காக்கிச் சட்டையுடன் இருந்த முனிசிபல் ஆஸ்பத்திரி சிப்பந்தி மூடிவிட்டார்.</p><p>எங்கிருந்து வந்தது என்று தெரியாமல், வேப்பமரத்தின் அடர்த்திக்குள் ஒளிந்திருந்த பளீர் என்ற வெயில் வாசல் முழுவதையும் கொஞ்சம் நேரம் பொசுக்கிற்று. பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த அணில், பரபரவென்று குறுக்காக ஓடியது. சசியின் உடம்பின் மேல் குதித்து ஓடியதா, தாண்டிப் போனதா என்று அனுமானிக்க முடியவில்லை.</p><p>முதுகில் விழுந்திருந்த பழுப்புக் கோடுகளில் சசியைச் சிறகுகளாகச் செருகிக் கொண்டு எந்தப் பக்கம் பறந்தது அது என்று தெரியாமல் போனபோது, வெயில் முற்றிலும் மங்கி, வேப்பமரம் பந்து பந்தாக நிழல்களை எறிந்தது.</p><p>வேம்பின் மஞ்சள் இலைகள் பறந்து உதிர்ந்து, கிருஷ்ணன் பொம்மையில் அப்பி, மறுபடி பறக்கும்போது, கிருஷ்ணனின் தலை உச்சியில் இருந்த மயில்பீலிகளையும் பிய்த்துக் கொண்டு போயிற்று.</p><p>மேலும் சில பழுத்த இலைகள் ஓலைப் பாய்களைப் போலச் சுருண்டு விரிந்து, அந்த நான்கு பேரையும் அள்ளித் தெருவில் நிற்கிற சக்கடா வண்டியில் ஏற்றப்போவது போல ஆவேசத்துடன் தரையில் நகர்ந்தன.</p><p>நான் எங்கே நின்றேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லா இடங்களிலும், எல்லோருடனும் நின்றிருக்க வேண்டும்.</p><p>'ஒண்ணு போலப் போயிரலாம். ஒண்ணு போல வரமுடியுமா உனக்கு ? ' -- ஐஸ் விற்கிற முருகனுடைய அப்பா என்னிடம் கேட்டார். இதைக் கேட்கும்போதும் மூச்சுமுட்டுகிற அளவு அவர் குடித்திருந்தார்.</p><p>என்னிடம் மட்டும் இதையெல்லாம் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. 'வரமுடியாது ' என்ற பதிலையே 'வர முடியுமா ? ' என்ற கேள்வியாகக் கேட்டால் என்ன சொல்ல முடியும்.</p><p>நிறைய பேர் பதில் சொல்வதைத்தான் கேள்வியாகக் கேட்பார்கள் போலிருக்கிறது.</p><p>'கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? ' என்று தனுஷ்கோடி அழகர் என்னிடம் கேட்டதுகூட அப்படித்தான் இருக்க வேண்டும்.</p>சுந்தர்http://www.blogger.com/profile/11546386522859841537noreply@blogger.com0