Friday, July 9, 2010
எல்லோர்க்கும் பெய்யும் மழை
எதிர்பாரா நாளொன்றில்
பெய்யத் தொடங்கிய
மழையை
சபித்தனர் எல்லோரும் .
விடாது பெய்தது மழை.
கிடைத்த இடங்களில்
ஒண்டிக்கொண்டு
'கொடூர வெயிலன்றாலும்
கெடுப்பதில்லை வேலைகளை ' என்றனர் .
நீரின்றி தவித்தாலும்
தொல்லையின்றி வரவேணும் மழை .
எனினும்
சம்பல் கோட்டும்
குறைந்த பேண்ட்டுமாய்
சாலைக் குப்பைகளில்
தனக்கான ஜிகினாக்களை
களைந்தெடுக்கும்
அந்தப் பைதியக்கரனுக்கு மட்டும்
பெய்யவில்லை
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
Subscribe to:
Post Comments (Atom)
சொற்களின்
amma
No comments:
Post a Comment