வெளியே மழை
பெய்து கொண்டிருக்கிறது
சோடிய விளக்கொளியில்
பூக்களாய்ச் சிதறும்
துளிகளைக் காணக்
கொடுத்து வைக்காமல்
அசதியில்
படுத்துக் கிடந்தேன் .
மழையின் சப்தம்
காதுகளில் நிறைகிறது.
நினைவு
முன் மழை நேரங்களில்
நனைகிறது
ஒளியில் சிதறும் பூக்கள்
மூடிய விழிகளில்
இப்போது
உள்ளேயும்
மழை.
Friday, July 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
சொற்களின்
amma
No comments:
Post a Comment