Friday, July 9, 2010

நினைவு மழை

வெளியே மழை
பெய்து கொண்டிருக்கிறது

சோடிய விளக்கொளியில்
பூக்களாய்ச் சிதறும்
துளிகளைக் காணக்
கொடுத்து வைக்காமல்
அசதியில்
படுத்துக் கிடந்தேன் .

மழையின் சப்தம்
காதுகளில் நிறைகிறது.

நினைவு
முன் மழை நேரங்களில்
நனைகிறது
ஒளியில் சிதறும் பூக்கள்
மூடிய விழிகளில்

இப்போது
உள்ளேயும்
மழை.

No comments:

Post a Comment

சொற்களின்

amma