Wednesday, July 14, 2010

யதார்த்தம்

உள்ளே உரு கொண்டிருக்கும் கவிதை
பிரசவத்திற்கான வலியை

தாய்மையின் சந்தோஷத்தில்
திளைத்துக் கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு சொல்லை
எழுத்தாய் ,வார்த்தையாய்
வெளிப்பட்டு
கர்ப்பத்தின் வாசனை மிளிர
வந்து விழுகிறது
கவிதை.

காலத்தின் சொல்லுருவாய்
கண்சிமிட்டும்
அதன் பூரணம் கண்டு
விரியும் மனம்
அடுத்த சிருஷ்டிக்கான
ஆயுத்தம் கொள்ளும்.

படைப்பு, படைப்பு என நீண்டு
பரத்தின் சந்தோசம்
பரவும் வேளையில்
எங்கோ விழுந்து
ஒலியெழுப்பும்
ஒரு நாணயம் .

No comments:

Post a Comment

சொற்களின்

amma