எனதே எனதான
முகத்தைக் காட்டும்
ஒரு கண்ணாடி .
கூடுதலாய் ஒரு கை
கவிதை எழுத .
என் காலடித் தடங்களை
தனியே இனங்காட்டும்
மணற்பரப்பு .
குழந்தைத்தனம்
கண்களில் மட்டும்.
நிஜத்தில் சில கனவுகள்
கனவுகளில் சில நிஜங்கள்.
நீண்ட இரவுகள்
நிழல்போல் ஒரு பெண்.
ஆயுள் முடிந்து
அடங்குகையில்
அழகான கல்லறை.
Monday, July 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
சொற்களின்
amma
No comments:
Post a Comment