Monday, July 12, 2010

வேண்டும்

எனதே எனதான
முகத்தைக் காட்டும்
ஒரு கண்ணாடி .

கூடுதலாய் ஒரு கை
கவிதை எழுத .

என் காலடித் தடங்களை
தனியே இனங்காட்டும்
மணற்பரப்பு .

குழந்தைத்தனம்
கண்களில் மட்டும்.

நிஜத்தில் சில கனவுகள்
கனவுகளில் சில நிஜங்கள்.

நீண்ட இரவுகள்
நிழல்போல் ஒரு பெண்.

ஆயுள் முடிந்து
அடங்குகையில்
அழகான கல்லறை.

No comments:

Post a Comment

சொற்களின்

amma