Friday, July 9, 2010

வாழ்க்கை

விரும்பியது, கிடைத்தது என
இரண்டாக கிடக்கிறது
வாழ்க்கை .

இதற்கிடையேதான்
வாழ வேண்டியிருக்கிறது .

இவை இரண்டுக்குமான
இடைவெளி அதிகரிக்க ,
நிகழ்வும் இயக்கமும்
இயந்திரத்தனம் கொள்கிறது.
வாழ்தலை இருத்தலின் பொருட்டே
எதிர்கொள்ள
வேண்டியிருக்கிறது .

இரண்டையும்
தவிர்த்துவிட்டு
வாழ்வை ஓரமாக
நின்று பார்க்கும் போது
அதன் அர்த்தமற்ற தன்மை
புரிகிறது.

அப்புரிதலின்
உச்சியை நோக்கி
எத்தனிக்கையில்
ஏதோ ஒன்று
மீண்டும்
வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டு
வாழ்வின் உச்சம்
வாழ்க்கையின் ஆழத்தில் என்கிறது .

No comments:

Post a Comment

சொற்களின்

amma