எதுவுமே
என்னை அமைதியுறச் செய்யாதபோது
நீ வந்தாய்.
இருண்ட அறையில்
விளக்கேற்றி
கண்ணீர் துடைத்து
தலை கோதி
முகம் கழுவி
வா வானம் பார்க்கலாம் என்றாய்.
நட்சத்திரங்களால்
நிரம்பியிருந்தது வானம் .
எந்தப் பேச்சுமற்று
வானம் பார்த்தபடியே இருந்தோம்
இரவெல்லாம்..
விடிந்தபோது
நீயுமில்லை
நானுமில்லை.
சொற்களின்
amma
No comments:
Post a Comment