Friday, July 9, 2010

மீண்டும் ஒரு நாள்

நான் எப்படி
இருக்கவேண்டும் என்று
விரும்புகிறேனோ
அப்படியெல்லாம்
இருந்ததில்லை இதுவரை .

என்னை மறந்து
மறுத்து வாழ
பழக்கிக்கொண்டாகிவிட்டது .

இருள் சூழ்ந்த
பின்னிரவின் நிசப்த
சுகத்தில்
துள்ளும் மனம்
ஞானத்தோடு பேசும்.

புலர்ந்ததும்
புலப்படாமல் போகும்
பேசிய ஞானங்கள் .

மீண்டும் ஒரு நாள்
என்னைக் கடத்தி
கொண்டு போகும் .

No comments:

Post a Comment

சொற்களின்

amma