குழந்தைகள் தங்கள் பாடங்களை மறந்து விட்டு, அதிக நேரம் வெளியே விளையாடுகிறார்களா? அவர்களை தயவு செய்து திட்டாதீர்கள்.
வீட்டிற்குள் விளையாடுவதைக் காட்டிலும் வெளியில் விளையாடுவதால், குறைந்தபட்சம் குழந்தைகளின் கண்பார்வைக்கு அது சிறந்தது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மையோபியா அல்லது கிட்டப்பார்வை குறையுள்ள குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
வீட்டிற்கு வெளியே விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சமீப காலமாக கிழக்கு ஆசிய நாடுகளில் குழந்தைகளுக்கு மியோபியோ நோய் ஏற்படுவது 80 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புறச் சூழல் நடவடிக்கைகளே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது.
அதன்படி ஆஸ்திரேலியாவின் 12 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 367 பள்ளிக் குழந்தைகளிடம் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
அதிக அளவில் வெளியே விளையாடும் குழந்தைகளிடம் குறைந்த விகிதத்திலேயே மையோபியா நோய் இருப்பது அதில் தெரிய வந்தது.
படித்தல் போன்ற வீட்டிலேயே அதிக வேலையில் ஈடுபட்டு, வெளியில் குறைந்தளவு நேரமே செலவிடும் குழந்தைகளின் கண் பார்வை பாதிப்பு விகிதம் அதிகம் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
உள்ளரங்க விளையாட்டுகளால் எந்தவித பலனும் இல்லை என்றும் அது தெரிவிக்கிறது.
எனவே குழந்தைகள் ஆரோக்கியத்தை விரும்புகிறீர்களா? அவர்களை வெளியே விளையாட அனுமதியுங்கள்.
Showing posts with label பெற்றோர்களுக்கு. Show all posts
Showing posts with label பெற்றோர்களுக்கு. Show all posts
Friday, April 30, 2010
Subscribe to:
Posts (Atom)
சொற்களின்
amma
